India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சனி பகவான் கும்ப ராசியில் ஆட்சி அதிபதியாக சஞ்சாரம் செய்து வருகின்றார். இங்கு 30 ஆண்டுகளுக்கு பிறகு சுக்கிர பகவான் டிசம்பர் 28ம் தேதி பெயர்ச்சியாகி சேர உள்ளார். சனி – சுக்கிரனின் சேர்க்கை காரணமாக ரிஷபம், கடகம், துலாம், மகரம், கும்பம் ஆகிய 5 ராசிகளைச் சேர்ந்தவர்களுக்கு மகிழ்ச்சியும், அதிர்ஷ்டமும் நிறைந்த புத்தாண்டு தொடக்கமாக அமையப் போகிறது. திடீர் பண ஆதாயமும், கொடுத்த கடன் திரும்பவும் கிடைக்கும்.
டிகிரி இல்லாமல் இந்த துறையில் அதிக சம்பளம் சாத்தியம் என்கிறார் கூகுளின் VP லிசா கெவெல்பர். Data Analytics துறை அதிக வாய்ப்புகளை கொண்டுள்ளது. தகவல்களை புரிந்துகொண்டு அதை பிசினஸுக்கு தேவையான முடிவுகளாக வழங்கக் கூடியவர்களுக்கு டிமாண்ட் அதிகமாக உள்ளது என்கிறார். Grow with Google இந்த Skills பெற உதவுகிறது. இத்துறை அடுத்த 10 ஆண்டுகளில் 30% அளவுக்கு வளரும் எனக் கணிக்கப்படுகிறது.
இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் நகர் மீது ஏமன் நாட்டில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலின்போது, இஸ்ரேலில் எச்சரிக்கைக்கான அபாய ஒலி எழுப்பப்பட்டது. இதனால், மக்கள் பாதுகாப்பு தேடி, பல்வேறு இடங்களுக்கு சென்று தஞ்சமடைந்தனர். இந்த தாக்குதலில் 16 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 200-க்கும் மேற்பட்ட ராக்கெட் & ட்ரோன்களை கொண்டு, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் குண்டு மழை பொழிந்துள்ளனர்.
தெலங்கானா முதல்வரின் கருத்துக்கள் தன்னை காயப்படுத்தியதாக அல்லு அர்ஜுன் வருந்தியுள்ளார். ரோடு ஷோ நடத்தியதாக கூறுவது சரியல்ல எனவும், அனுமதியின்றி சென்றதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டு எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அரசுடன் எவ்வித சர்ச்சையையும் விரும்பவில்லை எனவும் கூறியுள்ளார். முன்னதாக, கூட்ட நெரிசலில் பெண் பலியானதற்கு அல்லு அர்ஜுன் தான் காரணம் என ரேவந்த் குற்றஞ்சாட்டியிருந்தார்.
பாஜகவினர் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அண்ணாமலை குற்றஞ்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. X பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், வேலூரில் பாஜக நிர்வாகி விட்டல் குமார் கொலை செய்யப்பட்டதையும், அதில் தொடர்புடைய ஊராட்சித் தலைவர் பாலாசேட் கைது செய்யப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் தினமும் ஒன்றுக்கும் மேற்பட்ட கொலைகள் நடந்து கொண்டிருப்பதாகவும் அவர் சாடியுள்ளார்.
போலீஸ் சொன்னதை மதிக்காமல், அல்லு அர்ஜுன் தியேட்டருக்கு சென்றதே, ‘புஷ்பா 2’ சிறப்புக் காட்சியின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு, பெண் உயிரிழந்ததாக தெலங்கானா CM ரேவந்த் ரெட்டி குற்றஞ்சாட்டியுள்ளார். திரை பிரபலங்கள் மனிதாபிமானம் அற்றவர்களாக இருக்கக் கூடாது என கேட்டுக் கொள்வதாகவும், தான் முதல்வராக இருக்கும் வரை, இனி மாநிலத்தில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி இல்லை எனவும் அறிவித்துள்ளார்.
3வது ஒருநாள் போட்டியில், ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஒரு நாள் தொடரை கைப்பற்றியுள்ளது. முதலில் களமிறங்கிய ஜிம்பாப்வே, 30.1 ஓவர்களில் 127 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான், 26.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்கள் எடுத்து, 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என ஆப்கானிஸ்தான் அணி கைப்பற்றியுள்ளது.
தந்தை- மகன்- பேரன் புகழ்பாடும் மன்றமாக தமிழ்நாடு சட்டமன்றத்தை நடத்துபவர்கள் பாஜகவை விமர்சிப்பதா? என வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார். 100 நாட்கள் சட்டப்பேரவையை நடத்துவோம் என வாக்குறுதி அளித்துவிட்டு, ஆண்டுக்கு 30 நாள்கள் கூட பேரவை நடப்பதில்லை என அவர் சாடியுள்ளார். மேலும், பார்லி. பற்றி கவலைப்படும் CM, தமிழ்நாடு சட்டமன்றத்தை பற்றி கொஞ்சம் கவலைப்பட்டால் நல்லது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பிரேசிலில் டிரக் மீது பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் அப்பாவி பயணிகள் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சா பாலோ நகரில் இருந்து 45 பேருடன் அந்த பேருந்து சென்று கொண்டிருந்தது. மினஸ் கெரியாஸ் என்னுமிடத்தில் நெடுஞ்சாலையில் வந்தபோது, டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, டிரக் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காயமடைந்த 13 பேர் ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
*கிரெடிட் கார்டில் பில் செலுத்துவதை தவிருங்கள். *பணம்/ டெபிட் கார்டில் பில் செலுத்துங்கள். *அதிக விலையுள்ள பொருளை வாங்கும் முன் 24 மணி நேரம் வெயிட் பண்ணவும். *எப்போதும் லிஸ்ட் வைத்து ஷாப்பிங் செய்க. *எந்த ஒரு பொருளை மாற்றும் முன் அதை ரிப்பேர் செய்ய முடியுமா என பார்க்கவும். *நீண்ட நாள் உழைக்கும் பிராண்டட் பொருளையே வாங்கவும். *விற்பனை (அ) டிஸ்கவுண்ட் இருப்பதாலேயே தேவையில்லாத பொருளை வாங்க வேண்டாம்.
Sorry, no posts matched your criteria.