India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒரு பீர் அடிச்சா போலீஸ் பிடித்தாலும் கண்டுபிடிக்க முடியாது என நினைக்கும் நபரா நீங்கள்? அது முற்றிலும் தவறு, உங்க உடம்புல கொஞ்சமா ஆல்கஹால் கலந்தாலும் போலீஸ் சோதனையில்(Alcohol reading metre) நிச்சயம் தெரிந்துவிடும். போலீஸ் வைத்துள்ள மெஷினில் 35 புள்ளிகள் காட்டினால் நீங்கள் மது அருந்தியவர் என்பதை அவர்கள் உறுதி செய்துவிடுவர். எனவே மது ஒரு சொட்டு குடித்தாலும் வாகனம் ஓட்டுவதை தவிர்ப்பதே சிறந்தது..

உலகிலேயே டெக் ஸ்டார்ட்அப்களில் அதிக சம்பளம் வழங்கும் நிறுவனமாக OpenAI உள்ளதாக The Wall Street Journal தெரிவித்துள்ளது. அந்நிறுவனத்தில் மொத்தம் 4,000 பேர் வேலை செய்யும் நிலையில், பங்குகள் அடிப்படையில் ஊழியர்களுக்கு சராசரியாக ₹13.48 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது. உலகின் 18 பெரிய டெக் நிறுவனங்கள் IPO வெளியிடுவதற்கு முன் வழங்கும் சராசரி ஊதியத்தை விட இது 34 மடங்கு அதிகமாகும்.

திருத்தணி உள்ளிட்ட இடங்களில் வடமாநிலத்தவர் தாக்கப்படுவதை சுட்டிக்காட்டி அமித்ஷாவுக்கு நயினார் நாகேந்திரன் கடிதம் எழுதியுள்ளார். திமுக அரசு பதவியேற்ற நாளில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாகவும், சமீப நாள்களாக அது மிகவும் மோசமடைந்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவே உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அமித்ஷாவுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.

குரூப்-4 தேர்வர்கள் டைப்ரைட்டிங் முடிச்சிருந்தா அவர்களுக்கு பணி நியமனத்தில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இந்நிலையில் முக்கியத்துவம் வாய்ந்த டைப்ரைட்டிங் தேர்வுக்கு இப்போதே நீங்கள் விண்ணப்பிக்கலாம். ➤கல்வித்தகுதி: குறைந்தபட்சம் 6-வது தேர்ச்சி ➤விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.01.2026 ➤தேர்வு தேதி: நிலைக்கேற்ப பிப்.7-15 வரை ➤ விண்ணப்பிக்க www.tndtegteonline.in என்ற இணையதளத்தை அணுகவும். SHARE IT!

8 ஆண்டுகள் கோமாவில் இருந்த இலங்கை கிரிக்கெட் வீரர் அக்ஷு ஃபெர்னாண்டோ (25) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். U19 போட்டிகளில் விளையாடி வந்த இவர், 2018-ம் ஆண்டு தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதியது. இதில் தலையில் பலத்த காயமடைந்து கோமா நிலைக்குத் தள்ளப்பட்டார். இந்நிலையில், அவரது உயிர் பிரிந்துள்ளது. அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

விஜய் அரசியலில் இறங்காமல் இருந்திருந்தால் தான் ஆச்சரியப்பட்டிருப்பேன் என ‘ஜனநாயகன்’ இயக்குநர் H.வினோத் தெரிவித்துள்ளார். அறிவாளிகள், முட்டாள்கள், புத்திசாலித்தனமாக மோசடி செய்பவர்கள், முட்டாள்தனமாக மோசடி செய்பவர்கள் என அரசியலில் 4 விதமான மனிதர்களை தான் பார்ப்பதாகவும், இந்த 4 வகையினரையும் விஜய் சமாளித்தால், கண்டிப்பாக அவரால் அரசியலில் வெற்றி பெறமுடியும் என்றும் H.வினோத் கூறியுள்ளார்.

2025-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 6.23 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 2024-ல் இருந்ததை விட 2025-ல் 1.5 லட்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிகளவில் நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்ற டாப் மாவட்டங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்கள் பகுதியில் நாய்கள் தொல்லை இருக்கிறதா? கமெண்ட்ல சொல்லுங்க.

ஒரு புத்தாண்டு வாழ்த்து செய்தி, உங்களது வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் காலி செய்யும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம், வாட்ஸ் ஆப்பில் புத்தாண்டு வாழ்த்துடன் APK ஃபைலை உருவாக்கி, ஒரு கும்பல் மொபைலை ஹேக் செய்து பணத்தை கொள்ளையடிக்கிறதாம். இதனால் வாட்ஸாப்பில் வரும் APK ஃபைலை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.

TN அரசு மற்ற மாநிலங்களை விட கூடுதல் கடன் பெற்றதாக EPS உள்பட எதிர்கட்சியினர் வைத்த குற்றசாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வாங்க முடியும் என்பதற்கு மத்திய அரசு வரையறுத்துள்ள குறியீடுக்கு கீழ்தான், TN கடன் பெற்றுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். எதிர்கட்சியினர் தமிழகத்துடன் ஒப்பிடும் பல மாநிலங்கள், அளவுக்கு மீறி கடன் வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

புத்தாண்டு பிறந்தாலே குடிமகன்கள் பலரும் இனி சரக்கை ஒருபோதும் தொடவே மாட்டேன் என ஒவ்வொரு ஆண்டும் அதிரடி சபதம் எடுப்பார்கள். ஆனால் அப்படி திடீரென்று மதுவை நிறுத்துவது அதிக மது அருந்துபவர்களின் உடல்நலனை பாதிக்கும் என்கிறார் அமெரிக்க உடல்நல நிபுணர் ட்ரான்சோ. மேலும், மதுவை ஒரேடியாக நிறுத்துவதற்கு பதில், Sober curious மனநிலையுடன் வாரத்திற்கு 1,2 பாட்டில்களை குறைப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.