India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தெலுங்கு திரையுலகில் அடுத்தடுத்த அதிர்ச்சி சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன. திரையரங்க சம்பவம் குறித்து அல்லு அர்ஜுன் செய்தியாளர்களிடம் பேசியதை தொடர்ந்து அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி போலீசார் தரப்பில் நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அவரின் கருத்துக்கள் ஜாமீன் நிபந்தனைகளை மீறுவதாகவும், விசாரணையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என போலீசார் நம்புவதாக கூறப்படுகிறது.
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை வடக்கு தமிழ்நாட்டை நோக்கி வரவுள்ளது. இதன் காரணமாக, நாளை (24.12.24) மற்றும் நாளை மறுநாள் (25.12.24) செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று MET தெரிவித்துள்ளது. புதுச்சேரியிலும் அடுத்த 2 நாள்கள் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
சந்தியா தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிருக்கு போராடும் ஸ்ரீதேஜுக்காக அல்லு அர்ஜுன் அறக்கட்டளை தொடங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அல்லு அர்ஜுன், சுகுமார் மற்றும் மைத்ரி பட தயாரிப்பாளர்கள் இணைந்து சுமார் ரூ. 2 கோடியை அறக்கட்டளையில் டெபாசிட் செய்ய உள்ளனர். இந்த தொகையை அவரது மருத்துவ மற்றும் எதிர்காலத்திற்காக செலவிட திட்டமிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வுகள் இன்றோடு முடிவடைகின்றன. இதைத் தொடர்ந்து, நாளை முதல் விடுமுறை தொடங்குகிறது. இனி, ஜனவரி 2ஆம் தேதிதான் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுகின்றன என்பதால் 9 நாள்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கேற்ப திட்டமிட்டு பெற்றோர் இன்று சொந்த ஊர்களுக்கு கிளம்புகின்றனர்.
மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் பணிக்கு தேர்தெடுக்கப்பட்டவர்களுக்கு ‘வேலைவாய்ப்பு திருவிழா’ மூலம் பிரதமர் மோடி பணி நியமன ஆணைகளை வழங்கி வருகிறார். இந்நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெறும் ‘வேலைவாய்ப்பு திருவிழா’ 71 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பணி நியமன உத்தரவு கடிதங்களை வழங்கி அவர்களுடன் உரையாட உள்ளார்.
ஒரு சில பழக்க வழக்கங்கள் தான் ஒருவரை வெற்றியாளர்களாக மாற்றும் * முதலில் என்ன செய்யவே வேண்டும் என்பதில் தெளிவான சிந்தனை வேண்டும் * குறை சொல்லுபவர்களை கண்டு கொள்ள மாட்டார்கள் * வாழ்வில் அவ்வப்போது ரிஸ்க் எடுப்பார்கள் * எடுக்கும் வேலையில் பின்வாங்க மாட்டார்கள் * ஒரு விஷயத்தை தள்ளிப்போடும் பழக்கம் இருக்காது * உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவர்கள். நீங்களும் ஃபாலோ பண்ணுங்க
பிரபல பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்து Posidex Technologies நிர்வாக இயக்குனர் வெங்கட தட்சாயை கரம் பிடித்தார். உதய்பூரில் நேற்று இரவு 11.20 மணியளவில் திருமணம் செய்து கொண்டார். திருமண புகைப்படத்தை இரு வீட்டாரும் இதுவரை வெளியிடவில்லை. நாளை ஹைதராபாத்தில் பிரம்மாண்ட வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் திரையுலகம், அரசியல், விளையாட்டு பிரபலங்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
ஈரோடு இடைத்தேர்தலில் நிச்சயமாக தனித்துப் போட்டியிடுவோம் என சீமான் தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் நீதிமன்ற வாயில், மருத்துவமனை, பள்ளி என பல இடங்களில் கொலைகள் நிகழ்கின்றன. ஆனால் சிறந்த ஆட்சி தருகிறோம் என்கிறார்கள். அமலாக்கத் துறை சோதனைக்குப் பயந்துதான் திமுக, அதிமுக கூட்டங்களில் பாஜகவுக்கு எதிராக கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றவில்லை என சாடினார். மேலும் விஜய் எனது தம்பி” என்றார்.
கிரிக்கெட்டில் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் அணியினர் ஒரு அரிய சாதனை படைத்துள்ளன. அதாவது உலகக் கோப்பை மற்றும் ஆசியக் கோப்பை டி20 வடிவில் தொடங்கிய முதல் ஆண்டிலேயே கோப்பையை வென்ற அணி என்ற சாதனையை 3 முறை நிகழ்த்தியுள்ளது. 2007இல் ஆடவர் T20 உலகக் கோப்பையையும், 2023இல் 19 வயதுக்குட்பட்ட பெண்கள் T20 WC மற்றும் இந்த ஆண்டு U-19 பெண்கள் ஆசியக் கோப்பையையும் வென்று அசத்தியுள்ளது.
குடியரசு தின அணிவகுப்பில் தமிழ்நாடு அலங்கார ஊர்தி நிராகரிப்பு வதந்தி என தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், குடியரசு தின அணிவகுப்பில் 15 மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் அணிவகுப்பு அலங்கார ஊர்திகள் சுழற்சி முறையில் தேர்வு செய்யப்படும். அனைத்து மாநிலங்களாலும் எல்லா ஆண்டுகளிலும் பங்கேற்க இயலாது. தமிழ்நாடு இந்தாண்டு பங்கேற்றதால், 2026 ஆண்டு அணிவகுப்பிலே பங்கேற்க இயலும்.
Sorry, no posts matched your criteria.