news

News January 18, 2025

இந்தியா சனாதன தேசம்: கவர்னர் R.N.ரவி

image

இந்தியா ‘சனாதன தேசம்’ என கவர்னர் ஆர்.என்.ரவி கூறியுள்ளார். சென்னை தரமணியில் நடைபெற்ற காசி தமிழ்ச் சங்கம நிகழ்ச்சியில் பேசிய அவர், கை, கால் என உறுப்புகள் பிரிந்தால் உடல் முழுமை அடையாது என்பதுபோல், மாநிலங்கள் பிரிந்தால் பாரதம் ஒன்றிணைய முடியாது என்றார். சனாதனம் கொரோனா போன்றது எனவும், அதனை ஒழிக்க வேண்டும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியது தேசிய அளவில் சர்ச்சையானது கவனிக்கத்தக்கது.

News January 18, 2025

KISS கொடுத்தால் 8,00,00,000 பாக்டீரியா பரவும்! fact, fact!

image

இருவர் வாய் முத்தம் கொடுக்கும் போது, ஒவ்வொரு முறையும் பரஸ்பரம் 8 கோடி பாக்டீரியாக்களை பரிமாறிக் கொள்கிறார்களாம். அதாவது ஒருவர் வாயிலிருக்கும் பாக்டீரியா நுண்ணுயிர்கள் மற்றவர் வாய்க்கு செல்கிறதாம். நெதர்லாந்தில் நடந்த ஆய்வில் இது கண்டறியப்பட்டுள்ளது. இயற்கையாகவே, ஒருவரின் வாயில் 100 கோடி பாக்டீரியாக்கள் வாழுமாம். அப்படின்னா, முத்தத்தில் அன்பு மட்டுமல்ல, பாக்டீரியாவும் ஷேர் ஆகுது!

News January 18, 2025

பயிரை மேய்ந்த வேலி.. போலீசே இப்படியா?

image

கரூரில் 11ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வெங்கமேடு போலீஸ் ஸ்டேஷனில் பணிபுரியும் காவலர் இளவரசன் போக்சோ தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலை. மாணவி, அண்ணா நகர் சிறுமி விவகாரங்கள் ஓய்வதற்குள், அடுத்த மாணவி சர்ச்சை வெடித்துள்ளது. வேலியே பயிரை மேய்ந்த கதையாக, பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டிய காவலரே இப்படியா என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

News January 18, 2025

ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்

image

பொங்கல் விடுமுறை முடிந்து, சொந்த ஊர்களில் இருந்து தாங்கள் வசிக்கும் பல்வேறு நகரங்களுக்கு மக்கள் திரும்புகின்றனர். இந்நிலையில் Omni பஸ்களில் 2 மடங்கு கட்டணம் வசூல் செய்யப்படுவதாக புகார் எழுந்துள்ளது. குமரி-சென்னைக்கு ₹3,800, நெல்லை-சென்னைக்கு ₹3,500, மதுரை-சென்னைக்கு ₹1,700, கோவை-சென்னைக்கு ₹1,900 கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. அதிக கட்டணம் வசூல் குறித்து 1800 425 6151ல் புகார் கூறலாம்.

News January 18, 2025

அமைச்சர் மூர்த்தி சீட்டை விட்டுக் கொடுக்காதது ஏன்?

image

உதயநிதியின் மகன் இன்பநிதிக்காக மதுரை பெண் கலெக்டரை எழச் சொல்லி அவமதித்த அமைச்சர் மூர்த்தி, தனது இருக்கையை விட்டுக் கொடுக்காதது ஏன் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மதுரை கலெக்டர் சங்கீதா அவமதிக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாகப் பேசிய அவர் இவ்வாறு கூறினர். தவெக தலைவர் விஜய், மக்களை சந்திப்பதை திமுக திட்டமிட்டு தடுப்பதாகவும் கடுமையாக சாடினார்.

News January 18, 2025

கருப்பு மையில் கையெழுத்துப் போட்டால் செல்லாதா?

image

Chequeஇல் Black Ink பேனாவால் கையெழுத்துப் போடுவதை RBI தடை செய்துள்ளதாக தகவல் பரவி வந்தது. இதுபற்றி ஆராய்ந்த PIB Fact Check குழு, அது போலியானது, RBI எந்த மையில் கையெழுத்திடுவது என்பதற்கு எந்தவித வழிகாட்டுதலும் வெளியிடவில்லை என விளக்கமளித்தது. வழக்கமாக பயன்படுத்தப்படும் Blue, Black பேனா பயன்படுத்தலாம். வங்கி அதிகாரிகள் Red Pen-ஐ திருத்தத்துக்கு பயன்படுத்துவதால், அதை மட்டும் தவிர்க்கலாம்.

News January 18, 2025

ஈரான் சுப்ரீம் கோர்ட்டில் 2 நீதிபதிகள் சுட்டுக்கொலை

image

ஈரானின் சுப்ரீம் கோர்ட்டில் இன்று மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 நீதிபதிகள் பலியாகினர். உயிரிழந்த நீதிபதிகளான அல் ரசினி, அல் மொஜிஸ்சே இருவரும் பாதுகாப்பு, பயங்கரவாதம், உளவு பார்த்தல் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளனர். தாக்குதல் நடத்தியவர் மீது இதுவரை எந்த குற்ற வழக்கும் இல்லாததால், காரணம் தெரியாமல் போலீசார் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News January 18, 2025

அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் தெரியுமா?

image

8-வது ஊதிய கமிஷன் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் எவ்வளவு உயரும் என்ற கணிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 25% முதல் 35% வரை சம்பளம் உயரலாம். அத்துடன் DA, HRA, TA உள்ளிட்ட படிகளும் உயரும். கல்விப்படி, குழந்தை பராமரிப்புப் படி, கிராஜுவிட்டி, பயணப்படி, தினப்படி ஆகியவையும் உயர்த்தப்படுமாம். பென்ஷன் வாங்குபவர்களை பொறுத்தவரையில் 30% வரை உயர்வு இருக்கும்.

News January 18, 2025

சிராஜ், கருண் நாயர் ஏன் அணியில் இல்லை.. விளக்கம்

image

இந்திய அணியில் சிராஜ், கருண் நாயர் உள்ளிட்டோர் இடம்பெறாதது சர்ச்சையானது. இந்நிலையில், இன்னிங்ஸில் பந்து பழையதாகும்போது, சிராஜின் பந்துவீச்சு எடுபடவில்லை. அதனால்தான் அவரையும் எடுக்கவில்லை என்று ரோகித் விளக்கமளித்துள்ளார். அதேபோல், கருண் நாயரின் 750 சராசரி என்பது அபரிமிதமானது. ஆனால், அணியில் 15 பேருக்கு மட்டுமே இடம் என்பதால், அனைவரையும் அணியில் சேர்ப்பது சாத்தியமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News January 18, 2025

விப்ரோ நிறுவனத்தில் 12,000 Freshers-க்கு வாய்ப்பு

image

2025-2026 நிதியாண்டில், கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 10,000 – 12,000 Freshers-ஐ பணியில் அமர்த்தவுள்ளதாக IT நிறுவனமான Wipro தெரிவித்துள்ளது. ITஇல் மந்தநிலை நிலவுவதாக தகவல்கள் வந்த நிலையில், Wipro-வின் இந்த அறிவிப்பு, துறை மீண்டு வருவதை காட்டுகிறது. இந்த நிதியாண்டிலேயே இதுவரை 7,000 பேர் பணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாகவும், Hiring நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. என்ன Guys, ரெடியா?

error: Content is protected !!