India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விடுமுறைக்கு சொந்த ஊருக்கு சென்றவர்கள் சென்னை திரும்பி வருவதால் நகரமே திக்குமுக்காடி வருகிறது. 6 நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் லட்சக்கணக்கானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். அவர்கள் ஒரே நேரத்தில் சென்னை திரும்புவதால் பெருங்களத்தூர், தாம்பரம், கிளாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. GST சாலை வாகன நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் பள்ளிகளில் காலியாக உள்ள 1,036 ஆசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. கணிதம், இந்தி, ஆங்கிலம், ஹோம் சயின்ஸ் உள்ளிட்ட 12 பாடத்தில் PG பட்டப்படிப்பு பெற்றிருப்பதுடன் B.Ed முடித்திருக்க வேண்டும். ஆரம்ப நிலை ஊதியமாக ₹47,000 – ₹78,000 வரை வழங்கப்படுகிறது. வரும் 6ஆம் தேதிக்குள் இந்த <
பெங்களூரு யெலகங்காவில் பிப்.10 – 14 தேதிகளில் சர்வதேச Air Show நடக்கவுள்ளது. இதனால், அப்பகுதியில் 13 கிமீ சுற்றளவில் கறி கடைகள், அசைவ உணவகங்களை மூட உத்தரவிடப்பட்டு உள்ளது. ஜன.23 முதல் பிப்.17 வரை, ஒரு மாதம் இந்த விதி அமலில் இருக்கும். Air Show-க்கும் இதற்கு என்ன தொடர்பு? அசைவக் கழிவுகள் பறவைகளை ஈர்க்கும். இதனால் விமான காட்சியின்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் இந்த முன்னெச்சரிக்கை.
ஆற்றல் கடவுள் சூரிய பகவான் உதிக்கும்போதே வழிபடும் முறைதான் சூரிய வணக்கம். சூரிய உதயத்திற்கு முன் எழுந்து, குளித்து பூஜை செய்து, மொட்டை மாடி அல்லது வனாந்தரத்தில் சூரியனை நோக்கி கைகூப்பி வணங்கினால் நன்மைகள் உண்டாகும் என்பது ஐதீகம். அதிகாலை எழுவது உடல் ஆரோக்கியத்திற்கும் உகந்தது என்று அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. முன் தூங்கி முன் எழு என்பதும் நமது முன்னோர் வாக்கு. நீங்கள் கடைபிடிக்கிறீர்களா?
சென்னையில் நேற்றிரவு முதல் பரவலாக கனமழை பெய்துவருகிறது. இது தொடர்பான அறிக்கையில், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் பரவலாக மழையை எதிர்பார்க்கலாம் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், இன்று டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழைக்கும் வாய்ப்புள்ளது. உங்க ஊர்ல மழை பெய்யுதா?
ENG, Tech படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு JEE Main 2025 Session I-க்கான நுழைவுச் சீட்டுகளை வெளியிட்டுள்ளது NTA. ஜன.22, 23, 24 நடக்கும் Paper 1-க்கான தேர்வுகளை எழுதவிருக்கும் மாணவர்கள் https://jeemain.nta.nic.in/ என்ற தளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். காலை 9 மணிக்கு ஒரு செஷனும் பி.ப. 3 மணிக்கு மற்றொரு செஷனுமாக தேர்வுகள் நடக்கின்றன. ஜன.28, 29, 30 தேர்வுகளுக்கான Admit Cards பின்னர் வெளியாகும்.
3000 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில், மூலவரான சென்னிமலை ஆண்டவர், நடுநாயக மூர்த்தியாக ஆலயத்தில் வீற்றிருக்கிறார். இவர் நவக்கிரகங்களில் செவ்வாய் அம்சமாக அமைந்துள்ளார். மூலவரைச் சுற்றி நவக்கிரகங்களின் மற்ற எட்டு கிரகங்களும் அழகிய தேவ கோஷ்டங்களில் அழகுற அமைந்து அருள் பாலிக்கிறார்கள். இங்கு மூலவரை வலம் வந்து வணங்கினாலே நவக்கிரகங்களையும் வழிபட்ட பலன் உண்டு.
RSS அமைப்பு அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்துவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். பாட்னாவில் பேசிய அவர், அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட போது, நாட்டிற்கு சுதந்திரம் கிடைக்கவில்லை என்ற மோகன் பகவத் பேச்சை இந்தியர்கள் ஏற்க மாட்டார்கள் என்றார். பிகாரில் நடத்தப்பட்டதை போல், போலி சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல், IND முழுவதும் முறையான சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோ கோ உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி தென்னாப்பிரிக்காவை 62-42 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. அதே போல் மற்றொரு அரையிறுதிப் போட்டியில் இந்திய பெண்கள் அணி, 66-16 என்ற புள்ளிக்கணக்கில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதிப்போட்டியில் நேபாள அணியை இந்திய பெண்கள் அணி எதிர்கொள்ள உள்ளது.
விஜய் மீது வைக்கும் நம்பிக்கையை செல்வப்பெருந்தகை ராகுல் மீது வைக்க வேண்டும் என அண்ணாமலை விமர்சித்துள்ளார். யாரையும் கூட்டணிக்கு அழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், காங்கிரஸை போல் பிறரை நம்பி பாஜக இல்லை எனவும் தெரிவித்துள்ளார். திமுக வரும் தேர்தலில் நிச்சயம் தோற்கும் என்ற அவர், திமுகவின் ஆட்சி குடும்ப ஆட்சியாக சுருங்கியுள்ளதாகவும் சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.