India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அரசு உதவி பெறும் பள்ளிகளில் சம்பள பட்டுவாடா தாமத்தை தவிர்க்க களஞ்சியம் செயலியில் டிஜிட்டல் கையொப்பம் பெற கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள 8,300க்கும் மேற்பட்ட அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பயன்பெறுவார்கள். இந்த புதிய நடைமுறை மார்ச் 1 முதல் அமல்படுத்தப்பட உள்ள நிலையில், மாவட்ட கல்வித்துறை அலுவலர்களுக்கு சர்குலர் அனுப்பப்பட்டுள்ளது.
6 நாள்கள் தொடர் விடுமுறை முடிந்து நாளை முதல் பள்ளி, கல்லூரிகள் வழக்கம்போல செயல்படவுள்ளன. வங்கிகள், அரசு அலுவலகங்கள் இயல்பு நிலைக்கு திரும்பவுள்ளன. சொந்த ஊர்களுக்குச் சென்றோர், பணி செய்யும் ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர். விடுமுறை முடிந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவது கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் செய்துதானே ஆக வேண்டும்? தயாரா மக்களே?
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் கறிக்கோழி (உயிருடன்) கிலோ ₹98ஆகவும், முட்டைக்கோழி (உயிருடன்) கிலோ ₹83ஆகவும் விற்கப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால், சென்னையில் கோழிக்கறி கிலோ ₹220 முதல் ₹260 வரை விற்பனை செய்யப்படலாம். முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ₹4.60ஆக உள்ளது. சில்லரை விலையில் ₹6 முதல் ₹7க்கு விற்கப்படும்.
பலமுறை பரிகாரம் செய்தும் கணவனுடன் பிரச்சனை தீராததால் ஜோதிடரை ஆள் வைத்து கொலை செய்த பெண் போலீசில் சிக்கியுள்ளார். நாகர்கோவிலில் ஜான் ஸ்டீபன் என்பவரிடம், கலையரசி என்ற பெண் கடந்த 3 ஆண்டுகளாக ஜோதிடம் கேட்டு பரிகாரம் செய்துள்ளார். ஆனாலும், கணவனுடன் பிரச்சனை தீராததால் பரிகாரத்திற்கு ஆன ₹9.5 லட்சத்தை திருப்பி கேட்டுள்ளார். ஜான் ஸ்டீபன் கொடுக்காததால் அவரை ஆள் வைத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.
பரந்தூர் விமான நிலைய திட்டத்தால் பாதிக்கப்படும் 4 கிராம மக்களை மறுகுடியமர்வு செய்ய ‘டவுன்ஷிப்’ உருவாக்கப்படவுள்ளது. இதற்காக ‘மாஸ்டர் பிளான்’ என்ற பெயரில் முழுமை திட்டத்தை தயாரிக்கும் பணியை தனியார் நிறுவனமான ‘நைட் பிராங்’ தொடங்கியுள்ளது. மொத்தம் 245 ஏக்கரில் குடியிருப்பு, பள்ளி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் ‘டவுன்ஷிப்’ அமையவுள்ளது. 1,005 குடும்பங்கள் அங்கு குடியமர்வு செய்யப்படவுள்ளன.
மின்னணு சாதனங்கள், சோலார், பேட்டரி மூலப்பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதியை சீனா நிறுத்தி வைத்துள்ளது. இதனால், அவற்றின் விலை இந்தியாவில் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது. சீன முதலீடுகளுக்கு இந்தியா கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கு சீனா பதிலடி கொடுத்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இது வர்த்தகப் போருக்கு வழிவகுப்பதோடு, சீனாவுக்கே பெரிய பாதிப்பாக அமையும் என்றும் சொல்லப்படுகிறது.
காஸாவில் போரை நிறுத்த இஸ்ரேலும் ஹமாஸும் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், இந்த ஒப்பந்தம், இந்திய நேரப்படி இன்று காலை 8.30 மணி முதல் அமலுக்கு வந்தது. இஸ்ரேல் மீதான ஹமாஸின் தாக்குதலுடன், 2023 அக்.7ஆம் தேதி போர் தொடங்கியது. இந்தப் போரில் மிகப்பெரிய அழிவைச் சந்தித்துள்ள காஸா சுமார் 12,000 குழந்தைகள் உட்பட 46,000 பேரை இழந்துள்ளது. போர் நிறுத்தத்தால் காஸா மக்கள் சுதந்திர காற்றை சுவாசிப்பதாகக் கூறுகின்றனர்.
மகளிர் உரிமைத் தொகை பெற பலரும் தனி ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உரிமைத் தொகைக்கு மீண்டும் விண்ணப்ப படிவம் வழங்கப்பட உள்ளது. இதற்கு தனி ரேஷன் கார்டு அவசியம் என்பதால், பெற்றோர் கார்டில் இருந்து தங்களின் பெயரை நீக்கி புதிய ரேஷன் கார்டுக்கு பலரும் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில், தகுதிகள் அடிப்படையில் விண்ணப்பங்கள் ஏற்கப்படும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
பெரியார் குறித்து அவதூறாகப் பேசியதாக அளிக்கப்பட்ட 70 புகார்களின் பேரில் சீமானுக்கு சம்மன் அனுப்ப காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில், அவரை கைது செய்ய முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேநேரத்தில் சீமானை கைது செய்தால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் NTK செல்வாக்கு உயரும் என திமுக தலைவர்கள் கருதுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு கடந்த 4 மாதங்களில் 11.20% சரிந்துள்ளது. இது ஜனவரி 10ஆம் தேதி நிறைவடைந்த வாரத்தில், $8.71 பில்லியன் சரிந்து $625.87 பில்லியனாக உள்ளது. இதனால் ரூபாய் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது. அதேநேரம், தங்கத்தின் கையிருப்பு $792 மில்லியன் அதிகரித்து $67.883 பில்லியனாக உயர்ந்துள்ளது. SDR பொறுத்தமட்டில் $33 மில்லியன் குறைந்து $17.78 பில்லியனாக இருக்கிறது.
Sorry, no posts matched your criteria.