news

News December 24, 2024

இனி இந்த மாணவிகளுக்கும் மாதம் ₹1000

image

புதுமைப் பெண் திட்டத்தை டிசம்பர் 30ஆம் தேதி தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். தற்போது, இத்திட்டத்தின் கீழ், 6 முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்து உயர்கல்வி செல்லும் மாணவிகளுக்கு மாதம் ₹1000 வழங்கப்படுகிறது. அரசு உதவிப் பெறும் பள்ளி மாணவிகளுக்கும் இதனை 30ஆம் தேதி முதல் விரிவாக்கம் செய்யவிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். இனி அவர்களும் மாதம் ₹1000 பெறலாம்.

News December 24, 2024

திருமலை டிக்கெட் அரை மணி நேரத்தில் ஓவர்

image

திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி டிக்கெட்டுகள் தொடங்கிய 30 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. ஜன.10ஆம் தேதி முதல் ஜன.19ஆம் தேதி வரை நடக்கும் வைணவர்களின் முக்கிய வழிபாடுகளில் ஒன்றான வைகுண்ட ஏகாதசி தரிசனத்திற்கு நாளொன்றுக்கு 14,000 பக்தர்கள் வீதம் 10 நாள்களுக்கு 1,40,000 பேருக்கான முன்பதிவு காலை 11 மணிக்குத் தொடங்கியது. சிறிது நேரத்திலேயே நிறைவடைந்ததால் காத்திருந்த பக்தர்கள் பலரும் ஏமாற்றமடைந்தனர்.

News December 24, 2024

சமூகநீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம்: விஜய்

image

பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, அவரது படத்திற்கு விஜய் மரியாதை செலுத்தினார். சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகளை அகற்றி, சமத்துவம் மலர, பெண்களுக்குச் சமஉரிமை கிடைக்க வாழ்நாள் முழுவதும் பாடுபட்ட சுயமரியாதைச் சுடர், தங்கள் கொள்கைத் தலைவர் என நினைவஞ்சலி தெரிவித்துள்ளார். அறிவார்ந்த, சமத்துவச் சமுதாயம் அமைக்க, பெரியார் வழிகாட்டிய சமூக நீதிப் பாதையில் பயணிக்க உறுதியேற்போம் என்றும் கூறியுள்ளார்.

News December 24, 2024

இடைத்தேர்தலில் போட்டியிட திமுக விருப்பம்

image

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக போட்டியிட வேண்டும் என்று தொண்டர்கள் விரும்புவதாக அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். 2021 தேர்தலில் அத்தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டு திருமகன் ஈவெரா வெற்றி பெற்றார். பின்னர் வந்த இடைத்தேர்தலிலும் அத்தொகுதி காங்கிரசுக்கே ஒதுக்கப்பட்டது. தற்போது திமுக போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பது கூட்டணி அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News December 24, 2024

பெங்கால் கிரிக்கெட்டர் மாரடைப்பால் மரணம்

image

ரஞ்சிக் கோப்பையில் பெங்கால் அணிக்காக விளையாடிய வீரர் சுவோஜித் பானர்ஜி (39) மாரடைப்பால் உயிரிழந்தார். 2014ஆம் ஆண்டு விஜய் ஹசாரே போட்டியின் மூலம் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய பானர்ஜி, ரஞ்சிக் கோப்பை தொடரில் முக்கிய வீரராக விளையாடியிருக்கிறார். விளையாட்டு வீரர்களுக்கு கூட மாரடைப்பு வருவது மக்களிடையே அச்சத்தை அதிகரித்துள்ளது.

News December 24, 2024

ரோஹித் ஷர்மா விளையாடுவது உறுதி

image

பாக்ஸிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் கேப்டன் ரோஹித் ஷர்மா விளையாடுவது உறுதியாகியிருக்கிறது. பயிற்சியின்போது அவருக்கு காலில் காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், தன்னுடைய உடல்நிலை குறித்து பேசியிருக்கும் கேப்டன், நலமாக இருப்பதாகவும் நிச்சயம் நான்காவது டெஸ்டில் விளையாடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இதனால், ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர்.

News December 24, 2024

பிரதமருடன் ஆளுநர் திடீர் சந்திப்பு.. பின்னணி என்ன?

image

திட்டமிடாத பயணமாக டெல்லி சென்றுள்ள ஆளுநர் RN ரவி, PM மோடியைச் சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பின் போது தமிழக சட்டம் – ஒழுங்கு, அரசியல் சூழல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து எடுத்துரைத்தாக தகவல் வெளியாகியுள்ளது. ஜன.6ஆம் தேதி தமிழக சட்டப்பேரவை கூட்டம் தொடங்குகிறது. மேலும், ரவியின் பதவிக்காலம் கடந்த ஆக.31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில், அது குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

News December 24, 2024

இந்த ஆண்டிற்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே!

image

2024ம் ஆண்டு முடிவடைய இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ளது. புதிய நம்பிக்கைகள், லட்சியங்களுடன் புத்தாண்டில் நுழைய உள்ளோம். இந்த ஆண்டு மோடி மீண்டும் PMஆனது, IND T20W வெற்றி, அமெரிக்க அதிபர் தேர்தல், வங்கதேச பிரதமருக்கு எதிரான கிளர்ச்சி, நாடு முழுவதும் வெள்ளப் பேரழிவு, விஜய் அரசியல் வருகை போன்ற சம்பவங்கள் பல வாரங்களாக விவாதிக்கப்பட்டது தெரிந்ததே. இந்த வருஷம் உங்களுக்கு எப்படி இருந்துச்சு? CMT பண்ணுங்க.

News December 24, 2024

திமுக கூட்டணியில் பிளவு இல்லை

image

திமுக கூட்டணியில் எந்தப் பிளவும் இல்லை என்று கொமதேக பொதுச் செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார். சமூக ஊடகங்கள்தான் அப்படியான ஒரு பிம்பத்தை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார். சமீபத்தில் வேல்முருகன் திமுக கூட்டணியில் இடம்பெறுவது குறித்து மறுபரிசீலனை செய்வோம் என்று பேசியதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டது. திருமாவளவன் கூட ஆளுங்கட்சியின் மேல் அதிருப்தி இருப்பதாக கூறியிருந்தார்.

News December 24, 2024

கட்டாய தேர்ச்சி முறை தொடர வேண்டும்: ராமதாஸ்

image

மத்திய அரசு நிர்வகிக்கும் பள்ளிகளில் 5, 8 ஆகிய வகுப்புகளுக்கான கட்டாய தேர்ச்சி முறை ரத்து செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சி அளிப்பதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது மிகவும் தவறான முடிவு என சுட்டிக்காட்டிய அவர், இந்த நடவடிக்கை கிராமப்புற ஏழை மாணவர்களின் கல்வி வாய்ப்பை பறித்து விடும் எனக் கூறியுள்ளார். ஏழை மாணவர்கள் கல்வி சுதந்திரம் பெறும் வரை கட்டாய தேர்ச்சி முறை தொடர வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

error: Content is protected !!