India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சில உணவுகளை அதிகமாக சாப்பிடுவது, ஆண்களின் விந்தணுக்கள் எண்ணிக்கையை பாதிக்கும் என்கிறது ஆய்வு முடிவு. ஆகவே, பின்வரும் உணவுகளில் கவனம் தேவை: *துரித, உடனடி & பாக்கெட் உணவுகள் -இதிலுள்ள டிரான்ஸ் கொழுப்பு ஆபத்தானது *அதிக கொழுப்பு உள்ள பால் பொருட்கள் *பூச்சிக்கொல்லிகள் & BPA ரசாயனம் கலந்த காய்கறிகள், பழங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் *சோயா உணவுகள் – இதன் உட்பொருள் ஹார்மோன் சமநிலையை பாதிக்கும்.
ஆஸி., ஓபன் டென்னிஸ் தொடரில் கால் இறுதி சுற்றுக்கு நட்சத்திர வீரர் ஜோகோவிச் முன்னேறியுள்ளார் 25வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் முயற்சியுடன் களமிறங்கிய ஜோகோவிச், இன்றை போட்டியில் செக் குடியரசு வீரரான ஜிரி லெஹேக்காவை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடந்த இப்போட்டியில் 6 -3, 6 – 4, 7 -6 என்ற செட் கணக்கில் ஜோகோவிச் வெற்றிபெற்றார். இதன் மூலம் கால் இறுதியில் நட்சத்திர வீரர் அல்காரஸ் உடன் மோதுகிறார் .
உங்கள் இரவு உணவை சாப்பிடுவதற்கு முன்பும் பின்பும் நினைவில் கொள்ள வேண்டிய 5 ஆரோக்கியமான விஷயங்கள்: *உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான தண்ணீர் குடிக்கவும். * சாப்பிட்ட பின் கடுமையான உடற்பயிற்சியை தவிர்க்கவும்; மெதுவாக நடைப்பயிற்சி செய்யலாம் * புகைப்பிடிக்க கூடாது * சாப்பிட்ட பிறகு குளிப்பதை தவிர்க்கவும் * இரவு உணவுக்கு பிறகு பழங்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும்.
மதுரை உசிலம்பட்டி அருகே பட்டியலின சிறுவன் மீது சிறுநீர் கழித்து வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சாதி ஒழிப்பில் முன்னோடியாக திகழும் மாநிலம் என்றாலும், இதுபோன்ற மோசமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. முன்பகை காரணமாக சிறுவனை கடத்திச்சென்று, இந்த கொடூரம் அரங்கேற்றப்பட்டு இருப்பது சாதி எவ்வளவு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை காட்டுவதாக சமூக செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
புலி நகம் கொண்ட செயின் அணிந்திருந்ததாக கோவையை சேர்ந்த தொழிலதிபரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். கோயமுத்தூர் மாப்பிள்ளை என்ற பிரபல இன்ஸ்டா பக்கத்தில், தான் புலி நகம் கொண்ட செயின் அணிந்திருப்பதாக பாலகிருஷ்ணன் என்பவர் பேட்டி கொடுத்திருந்தார். இந்த வீடியோ வைரலான நிலையில், அவரது வீட்டை சோதனை செய்த வனத்துறையினர், அங்கிருந்த புள்ளி மானின் கொம்புகளையும் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சீதாலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தில் முறையாக முன் அனுமதி பெறாமல் ஈரோடு பேருந்து நிலையத்தில் பிரசாரம் மேற்கொண்டதற்காக, வேட்பாளர் சீதாலட்சுமி உள்பட 8 பேர் மீது BNS 171 பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு நாதக கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஒரே நாடு, ஒரே தேர்தல் இந்தியாவுக்கு புதிதல்ல என வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். அடிக்கடி ஆட்சி கவிழும் நிலையை தவிர்த்து, அரசியல் நிலைத்தன்மையை இந்தத் திட்டம் உருவாக்கும் எனக் குறிப்பிட்ட அவர், அதனால்தான் திமுகவும், CM ஸ்டாலினும் அச்சமடைந்துள்ளதாக தெரிவித்தார். முன்னதாக திமுக வக்கீல்கள் மாநாட்டில் ONOE திட்டத்தை விமர்சித்ததற்கு பதிலளித்து, வானதி இந்த அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கட்டணக் கொள்ளையில் ஈடுபடும் ஆம்னி பேருந்துகள் மீது, TN அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். பொங்கலை கொண்டாட சொந்த ஊர் சென்ற மக்கள் இன்று சென்னை திரும்பும் நிலையில், டிக்கெட் விலை, வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனை சுட்டிக்காட்டிய அவர், தமிழக அரசின் பணி என்பது மக்களின் நலன்களை காப்பது தானே தவிர, தனியார் பேருந்துகளின் நலன்களை காப்பது அல்ல என விமர்சித்துள்ளார்.
2ஆவது ஜூனியர் மகளிர் WC தொடர் மலேசியாவில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று, இலங்கை-மலேசியா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த SLW அணி 162/6 ரன்களை குவித்தது. 163 ரன் இலக்கை துரத்திய மலேசிய அணி, வெறும் 23 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி 139 ரன் வித்தியாசத்தில் தோற்றது. அந்த அணியில் ஹைரன் 7, சுபிகா மணிவண்ணன் 6 ரன்கள் எடுத்தனர். 6 பேர் டக்கவுட் ஆக, 2 பேர் 1 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.
பாஜக உட்கட்சித் தேர்தல் நடைபெற்ற நிலையில், பல்வேறு மாவட்டங்களுக்கு புதிய தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். தென்காசிக்கு ஸ்ரீதர் வேம்புவின் நெருங்கிய நண்பர் ஆனந்த் அய்யாசாமி, கோவை மேற்கு – சந்திரசேகர், நெல்லை வடக்கு முத்து பலவேசம், சேலம்- சசி, தேனி – ராஜபாண்டியன் உட்பட நீலகிரி, அரியலூர், காஞ்சி, குமரி, கடலூர், நாமக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட தலைவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.