news

News January 20, 2025

வெங்காயம், பூண்டு விலை சரிவு

image

வரத்து குறைவு காரணமாக தமிழகத்தில் பூண்டு, வெங்காயத்தின் விலை உச்சம் தொட்டு காணப்பட்டது. ஒரு கிலோ பூண்டு ₹350-₹450 வரை விற்கப்பட்டது. அதேபோல், வெங்காயம் விலை கிலோ ₹80 வரை விற்கப்பட்டது. இந்நிலையில், பண்டிகை காலம் முடிந்ததாலும், அறுவடை தொடங்கியதாலும் படிப்படியாக விலை குறையத் தொடங்கியுள்ளது. அதன்படி, கோயம்பேடு சந்தையில் கிலோ பூண்டு ₹150- ₹200 வரை விற்கப்படுகிறது. வெங்காயம் ₹25க்கு விற்கப்படுகிறது.

News January 20, 2025

நீரஜ் சோப்ராவின் மனைவி யார் தெரியுமா?

image

ஒலிம்பிக் சாம்பியன்<<15200152>> நீரஜ் சோப்ராவுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது<<>>. அவரது மனைவியின் பெயர் ஹிமானி மோர் (25). ஹரியானா மாநிலம் சோனிப்பட்டைச் சேர்ந்த அவர், அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தார். தற்போது அமெரிக்காவின் Franklin Pierce பல்கலையில் Sports Management படித்து வருகிறார். இவர் தேசிய அளவிலான டென்னிஸ் வீராங்கணையாகவும் இருக்கிறார். விரைவில் இந்தியாவுக்காக சர்வதேச டென்னிஸ் விளையாடவுள்ளார்.

News January 20, 2025

இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு

image

ஈரோடு (கி) தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகிறது. வரும் பிப்.5ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், களத்தில் உள்ள திமுக, நாதக தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. மொத்தமாக அங்கு 55 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. வேட்புமனுவை வாபஸ் பெற இன்று கடைசி நாளாகும். தொடர்ந்து, இன்று மாலை ஒதுக்கீடு செய்யப்பட்ட சின்னங்களுடன் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.

News January 20, 2025

டிரம்பே சொல்லிட்டாரு… சேவையை தொடரும் டிக் டாக்!

image

அமெரிக்காவில் நேற்று சேவையை நிறுத்திய டிக் டாக் செயலி மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபதாக இன்று பதவியேற்கும் டிரம்ப், இச்செயலி மீதான தடையை நீக்குவதாக உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், சேவையை தொடர்வதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு காரணங்களை காட்டி, சீன நிறுவனத்திற்கு சொந்தமான இந்த செயலிக்கு பைடன் அரசு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.

News January 20, 2025

தினமும் காலை இதை செய்தால் வாழ்க்கை மாறும்

image

விடியற்காலையில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி செய்வது நாள் முழுக்க உங்களை புத்துணர்ச்சியுடன் உணர வைக்கும் என்று ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. ஒரு நாளில் உங்களது முதல் வெற்றியே படுக்கையை விட்டு எழுந்திருப்பதுதான் என்று ஒரு பழமொழி ஒன்று. அதை பின்பற்றும் வகையில் சட்டென படுக்கையை விட்டு எழுந்து நடைபயிற்சி சென்றுவிட்டால், அரை மணி நேரத்தில் உங்களது நாள் விறுவிறுப்புடன் தொடங்கிவிடும்.

News January 20, 2025

Fact Check: இந்தியாவில் ₹5 நாணயங்களுக்கு தடையா?

image

இந்தியாவில் ₹5 நாணயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இணையத்தில் வதந்திகள் வலம் வருகின்றன. ஆனால், ரிசர்வ் வங்கி ₹5 நாணயங்களுக்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை. அதே சமயம், நிக்கல் உலோகத்தாலான தடிமனான ₹5 நாணயங்களை சிலர் வங்கதேசத்திற்கு கடத்தி பிளேட் தயாரித்து விற்கிறார்களாம். அதனால், நிக்கல் உலோகத்தாலான ₹5 நாணயங்களின் உற்பத்தியை RBI நிறுத்தி வைத்துள்ளது.

News January 20, 2025

வங்கதேச முன்னாள் கேப்டனை கைது செய்ய ஆணை

image

செக் மோசடி வழக்கில் வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரும், முன்னாள் கேப்டனுமான ஷகிப் அல் ஹசனை கைது செய்ய டாக்கா கோர்ட் உத்தரவிட்டுள்ளது. Ex PM ஹேக் ஹசீனா தலைமையிலான Awami League கட்சியில் எம்பியாக இருந்த ஷகிப் அல் ஹசன், வங்கதேசத்தில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சொந்த நாட்டிற்குத் திரும்பவில்லை. இதனால், அவரது பாஸ்போர்ட்டை முடக்க வங்கதேச இடைக்கால அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

News January 20, 2025

பாஜக முக்கிய நிர்வாகிகள் விலகல்

image

வேலூரில் பாஜக முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர். கட்சிக்கு விரோதமாகச் செயல்பட்ட தசரதனை மாவட்ட தலைவராக நியமித்ததை எதிர்த்து, மாவட்டத் தலைவர் மனோகரன், பொதுச்செயலாளர் பாபு, மாவட்ட பொருளாளர் தீபக் உள்ளிட்ட நிர்வாகிகள் கட்சியிலிருந்து விலகியுள்ளனர். ஏற்கனவே நெல்லை மாவட்டத்திலும் நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகிய நிலையில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

News January 20, 2025

7 தடுப்பூசிகளை அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும்

image

இன்புளூயன்சா ஏ, பி, டைபாய்டு உள்ளிட்ட 7 தடுப்பூசிகளை அரசு தடுப்பூசி பட்டியலில் சேர்க்க வேண்டுமென குழந்தைகள் நல மருத்துவர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. 20 தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டாலும் 13 தடுப்பூசிகள் மட்டுமே குழந்தைகளுக்கு போடப்படுகின்றன. செலவினங்களை கருத்தில் கொண்டு அனைத்தையும் உடனடியாக சேர்ப்பது சாத்தியமில்லை என்றாலும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.

News January 20, 2025

தங்கத்தின் விலை உயரக்கூடும்

image

2023ஆம் ஆண்டு தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது. இதனால், நாட்டில் தங்கத்தின் இறக்குமதி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்வதற்கு இதுவும் காரணம் என்பதால், வரும் பட்ஜெட்டில் மீண்டும் இறக்குமதியை உயர்த்த நிதியமைச்சர் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அப்படி உயர்த்தப்பட்டால், பிப்ரவரி மாதத்தில் தங்கம் விலை உயரும்.

error: Content is protected !!