news

News December 24, 2024

‘சூர்யா 44’ டைட்டில் டீசர் நாளை ரிலீஸ்

image

‘சூர்யா 44’ படத்தின் டைட்டில் டீசர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்குகிறார். பூஜா ஹெக்டே, பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். அந்தமான், கேரளா, மூணார், சென்னை ஆகிய பகுதிகளில் நடந்த ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்தது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் நடைபெற்று வருகின்றன. 2025 கோடையில் படம் வெளியாகும் என கூறப்படுகிறது.

News December 24, 2024

BREAKING: புதிய ஆளுநர்கள் நியமனம்

image

5 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை மத்திய அரசு நியமித்துள்ளது. கேரள ஆளுநராக இருந்த ஆரிப் முகம்மது கான், பீகாருக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, அப்பதவியில் பீகார் ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒடிசா ஆளுநராக மிசோரம் ஆளுநர் ஹரிபாபு கம்பம்படி, மிசோரம் ஆளுநராக வி.கே. சிங், மணிப்பூர் ஆளுநராக அஜய்குமார் பல்லா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

News December 24, 2024

நக்சல் என்பது புனிதமான சொல்: சீமான்

image

ஒரு குறிப்பிட்ட மதத்தை மட்டுமே போற்றுவது, மதம் சார்ந்த நலன்களை மட்டுமே பேசுவதைவிடவா கொடிய நக்சல் இருந்துவிட முடியும் என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நக்சல் என்பது புனிதமான சொல் எனவும், பசி, வலி ஆகியவைதான் போராளி உருவாவதற்கு காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், நக்சல் என்ற விமர்சனம், அதிகாரம் செலுத்தும் கூட்டத்தினரின் மொழி என்பதால், அவர்கள் அப்படித்தான் சொல்வார்கள் என கூறியுள்ளார்.

News December 24, 2024

சொந்த ஊருக்கு செல்ல ரெடியா?

image

வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று TNSTC அறிவித்துள்ளது. அதன்படி, டிச.27, 28, 29 ஆகிய 3 நாட்களுக்கு சென்னையில் இருந்தும், முக்கிய நகரங்களில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரையாண்டு லீவ், ஆங்கில புத்தாண்டு விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அலைமோதும். எனவே, கூட்ட நெரிசலை தவிர்க்க www.tnstc.in மற்றும் Mobile App மூலம் இப்போதே முன்பதிவு செய்யவும்.

News December 24, 2024

வசூலை வாரிக் குவிக்கும் புஷ்பா 2

image

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா 2 – தி ரூல்’ திரைப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. இது தொடர்பாக படக்குழு தெரிவித்த தகவலின்படி, ஹிந்தி மொழியில் மட்டும் 16 நாட்களில் ₹645 கோடி வசூலித்துள்ளது. இதுவரை எந்த படமும் இந்தியில் இவ்வளவு வசூலை ஈட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகளவில் ₹1,500 கோடிக்கும் அதிகமாக புஷ்பா 2 படம் வசூல் செய்துள்ளது. படம் எப்படி இருக்கு? கமெண்ட்ல சொல்லுங்க.

News December 24, 2024

X ப்ரீமியம் பிளஸ் கட்டணம் உயர்வு: அதிர்ச்சியளித்த மஸ்க்

image

X சமூகவலைதளம், இலவசம், ப்ரீமியம், ப்ரீமியம் பிளஸ் என்று தனித்தனி சேவைகளை அளித்து வருகிறது. இதில் ப்ரீமியம், ப்ரீமியம் பிளஸ் என்பது கட்டண சேவையாகும். இந்நிலையில், ப்ரீமியம் பிளஸ் சேவைக்கான மாத கட்டணத்தை ரூ.1,300இல் இருந்து ரூ.1,750ஆகவும், ஆண்டு கட்டணத்தை ரூ.13,600இல் இருந்து ரூ.18,300ஆகவும் உரிமையாளர் எலான் மஸ்க் அதிகரித்துள்ளார். இதனால் அதை பயன்படுத்தும் கோடிக்கணக்கானோர் அதிர்ச்சியில் உள்ளனர்.

News December 24, 2024

இனி 3 நாளில் ஜிஎஸ்டி பதிவு: விரைவில் புது முறை

image

சிறு, நடுத்தர மற்றும் பெரிய வியாபாரிகள் அனைவரும் கட்டாயம் ஜிஎஸ்டி பதிவு வைத்திருக்க வேண்டும். ஆதலால் வியாபாரம் செய்வோர் ஜிஎஸ்டி பதிவை உடனுக்குடன் செய்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் அண்மையில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்தில், புதிய, சிறு வியாபாரிகளுக்கு ஜிஎஸ்டி பதிவு எண்ணை இனி 3 நாள்களில் அளிக்கும் புது முறைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதனால் போலி பதிவு, காத்திருப்பு உள்ளிட்டவை தவிர்க்கப்படும்.

News December 24, 2024

செமி ஃபைனல், ஃபைனல் எப்போது?

image

2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 8 அணிகள் மோதுகின்றன. தகுதி சுற்றில் 12 போட்டிகள் நடத்தப்படும். மார்ச் 2ஆம் தேதியோடு தகுதிச் சுற்று நிறைவடையும். முதல் அரையிறுதி மார்ச் 4ஆம் தேதியும், 2ஆம் அரையிறுதி மார்ச் 5ஆம் தேதியும் நடைபெறும். இறுதிப் போட்டி மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தியா இறுதிப் போட்டிக்கு தேர்வானால், இந்தப் போட்டி துபாயில் நடைபெறும். இல்லையெனில் லாகூரில் நடத்தப்படும்.

News December 24, 2024

தீவிரவாதிகளுக்கு உதவியவரை விடுவித்த கோர்ட்

image

இந்தியாவில் தாக்குதல் நடத்த தீவிரவாதிகளுக்கு உதவிய வங்கதேசத்தின் முன்னாள் அமைச்சர் அப்துஸ் சலாமை, அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது. பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு ஆயுதம், பயிற்சி, நிதி அளித்தவர் சலாம். வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல சதித்திட்டம் தீட்டியதாக அவருக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. 17 ஆண்டுகளுக்கு பின் அவர் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளார்.

News December 24, 2024

மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய “முதல் தமிழ் பெண்”

image

அண்டார்டிகா மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறிய முதல் தமிழ் பெண் என்ற சாதனையை படைத்துள்ளார் காரியாபட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி. உலக வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், தற்போது, அண்டார்டிக்காவின் மிக உயரமான மவுண்ட் வின்சன் சிகரத்தில் ஏறி இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். முன்னதாக, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்திருந்தார்.

error: Content is protected !!