news

News December 25, 2024

மதுரை டங்ஸ்டன் விவகாரத்தில் தொடரும் குழப்பம்!

image

அரிட்டாப்பட்டி, மீனாட்சிபுரத்தில் 193.215 ஹெக்டேரை தவிர்த்து, 1800 ஹெக்டேரில் <<14974548>>டங்ஸ்டன் திட்டம்<<>> வரவுள்ளதை மத்திய அரசு தெளிவாக்கியுள்ளதாக சு.வெங்கடேசன் கூறியுள்ளார். சுரங்க திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பதே TN அரசின் தீர்மானம் என்றும் மத்திய அரசின் சூழ்ச்சியைப் போராட்டத்தால் முறியடிப்போம் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதேநேரத்தில், மறு ஆய்வு என்ற அரசின் அறிவிப்புக்கு அண்ணாமலை நன்றி கூறியுள்ளார்.

News December 25, 2024

வாடகை கட்டணத்தை மீண்டும் உயர்த்தும் தனியார் ஓட்டல்கள்

image

2024இல் அறைகளின் வாடகை கட்டணத்தை தனியார் ஓட்டல்கள் உயர்த்தின. 2025 ஆண்டிலும் வாடகை கட்டணத்தை 15% வரை உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆண்டு இறுதியான இந்த மாதத்தில் முன்னணி ஓட்டல்களில் அனைத்து அறைகளும் முன்பதிவாகி விட்டன. இதேபோல், 7%-8% வரை வாடகை அறைகளுக்கான தேவை அதிகரித்திருப்பதால் கட்டண உயர்வு முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

News December 25, 2024

வாஜ்பாய்யின் 100ஆவது பிறந்தநாள்

image

முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் 100ஆவது பிறந்தநாளை இன்று நாடு கொண்டாடுகிறது. காங்கிரஸ் அல்லாத முதல் 5 ஆண்டு பதவிக் காலத்தை நிறைவு செய்த முதல் பிரதமர் என்ற பெருமையைப் பெற்ற இவர், 1924 டிசம்பர் 25ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவின் குவாலியர் (ம.பி) மாநிலத்தில் பிறந்தவர். அணு ஆயுத சோதனைகள், கார்கில் போர் இவரது ஆட்சி காலத்தில் நடைபெற்றன. குஜராத் கலவரம் இவரது ஆட்சி காலத்தின் கரும்புள்ளியாக உள்ளது.

News December 25, 2024

சூரியனை மிக நெருக்கத்தில் கடக்கும் நாசா விண்கலம்

image

சூரியனை ஆய்வு செய்ய NASA அனுப்பிய பார்க்கர் விண்கலம், இதுவரை இல்லாத நெருக்கத்தில் இன்று மாலை 5.23 மணியளவில் கடக்க உள்ளது. சூரியனிலிருந்து 38 லட்சம் Km தொலைவில்தான் பார்க்கர் கடக்கவிருக்கிறது. எனினும், மனிதர்கள் உருவாக்கிய ஒரு பொருள் சூரியனை இந்த அளவுக்கு நெருங்குவது இதுவே முதல்முறை. வெள்ளி கிரகத்தின் சுற்றுவட்டப் பாதையில் இருந்தவாறு ஆய்வு செய்துவரும் பார்க்கர் 2018இல் விண்ணில் செலுத்தப்பட்டது.

News December 25, 2024

SEBI தலைவர் மாதபிக்கு நோட்டீஸ் அனுப்பிய லோக்பால்

image

ஊழலில் ஈடுபட்டதாக SEBI தலைவர் மாதபி புச் மீது அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக லோக்பால் அமைப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ICICI வங்கியிடம் ஊதியம் பெற்றது, வெளிநாட்டு நிதி & பங்கு விலை மோசடி உள்ளிட்ட புகார்கள் தொடர்பாக 4 வாரங்களில் விளக்கமளிக்குமாறு அவருக்கு கடந்த நவம்பரில் லோக்பால் உத்தரவிட்டது. இப்புகார்களை டிச.19ஆம் தேதி பரிசீலனை செய்ததுடன், ஜன.28இல் முதற்கட்ட விசாரணையை மேற்கொள்ளவுள்ளது.

News December 25, 2024

டங்ஸ்டன் திட்ட ஏலத்தை TN அரசு எதிர்க்கவில்லையா?

image

மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் திட்டமிட்ட இடத்தை மறு ஆய்வு செய்ய உள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது. அதே சமயம், சுரங்கத்தை ஏலம் விடுவது தொடர்பாக மாநில அரசுக்கு 2023 செப். 15இல் கடிதம் எழுதப்பட்டதாகவும், அரசு கோரிய ஐயங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அது பல்லுயிர் பரவல் என அரசு கூறியிருந்தாலும், ஏலம் விடுவதை எதிர்க்கவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளது.

News December 25, 2024

பெட்ரோல், டீசல் விலை குறைந்தது

image

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ₹100.80க்கு விற்பனையாகிறது. நேற்று ₹101.23ஆக இருந்த அதன் விலை, இன்று 43 காசுகள் குறைந்துள்ளது. நேற்று ₹92.81க்கு விற்ற ஒரு லிட்டர் டீசல், இன்று 42 காசுகள் குறைந்து ₹92.39க்கு விற்பனையாகிறது.

News December 25, 2024

இந்த எண்களில் இருந்து அழைப்பு வந்தால் உஷார்!

image

அறிமுகமில்லாத சர்வதேச அழைப்புகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென, தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியுள்ளது. +8, +85, +65 என தொடங்கும் எண்களில் இருந்து மோசடி அழைப்புகள் வருவது தெரியவந்துள்ளது. இதுபோன்ற அழைப்புகள் வந்தால் சஞ்சார் சாத்தி இணையதளம் அல்லது வாடிக்கையாளர் சேவை மையத்தில் புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News December 25, 2024

குரு தோஷம் நீங்க… இதை செய்யுங்கள்!

image

ஜாதகத்தில் தனகாரகன் குரு வலுக்குன்றி, நீசம் பெற்றிருந்தால் பாதகமான குரு தோஷம் ஏற்படுகிறது. அதை போக்க வளர்பிறை ரதசப்தமியன்று சென்னை பாடியில் உள்ள திருவல்லீஸ்வரர் கோயிலின் தீர்த்தத்தில் நீராடி, ஒரு செம்பு நாணயத்தை தலையை மூன்று முறை சுற்றி, குளத்தில் வீச வேண்டும். மஞ்சள் நிற வஸ்திரம், மாலை அணிவித்து, இலுப்பை எண்ணெய் தீபங்களை ஏற்றி குரு காயத்ரி மந்திரம் பாடி வழிபட்டால் குரு தோஷம் விலகும் என ஐதீகம்.

News December 25, 2024

அதிகரிக்கும் போர் பதற்றம்

image

நள்ளிரவில் ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் நடத்திய வான்வழி தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர். ஏற்கெனவே இஸ்ரேல் – பாலஸ்தீன், ரஷ்யா – உக்ரைன் ஆகிய நாடுகள் சண்டையிட்டு வரும் வேளையில் நேற்றைய பாகிஸ்தானின் தாக்குதல் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் என்று ஆப்கான் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த தாக்குதலை பாக். உறுதி செய்யவில்லை.

error: Content is protected !!