India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மொன்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூரில் கடந்த 28-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் பள்ளிகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திருவள்ளூரில் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. அதில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகலாம்.

ஒரு பிரதமர் தேர்தல் ஆதாயத்திற்காக, எப்படி இப்படியான ஒரு அண்ட புளுகை, ஆகாச புளுகை பேசுகிறார் என்று தெரியவில்லை என திருமாவளவன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பிஹார் மக்களை அச்சுறுத்துவதாக பேசிய மோடிக்கு கண்டனம் தெரிவித்த அவர், இது ஆபத்தான அணுகுமுறை என்று குறிப்பிட்டுள்ளார். பிஹாரில் வாக்குகளை பெறுவதற்காக பாஜக இந்த அரசியலை செய்வதாக அவர் சாடியுள்ளார்.

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள 2,623 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✦வயது: 18- 24 ✦கல்வித்தகுதி: 10-வது, 12-வது, ITI, ஏதாவது ஒரு டிகிரி ✦தேர்ச்சி முறை: Merit List & Certificate Verification ✦சம்பளம்: ₹8,200- ₹12,300 வரை ✦முழு விவரங்களுக்கு <

மத்திய கிழக்கு வங்க கடலில் அடுத்த 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. கடந்த வாரம் மொன்தா புயல் காரணமாக தமிழகத்தில் பரவலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இந்நிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக புதிய காற்றழுத்தம் உருவாக இருப்பதால், நவ.6-ம் தேதி வரை மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TTV, OPS, செங்கோட்டையன் மூவரும் இணைந்து புதிய கூட்டணியை அறிவித்துள்ளனர். இது பற்றிய கேள்விக்கு பதிலளித்த RB உதயகுமார், அவர்கள் 3 பேரும் சேர்ந்தது ஒருநாள் பரபரப்பு என்று விமர்சித்துள்ளார். அதை கூடுதல் பரபரப்பாக்காமல் இருந்தால் எல்லாம் சரி ஆகிவிடும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனால் அதிமுகவுக்கு எந்த பின்னடைவும் இல்லை என்று கூறிய அவர், இதுபோன்று நடப்பது புதிதல்ல எனக்குறிப்பிட்டார்.

டெல்லியில் காற்று மாசு காரணமாக மக்கள் ஒவ்வொரு நாளும் தவித்து வருகின்றனர். இந்நிலையில், காற்று மாசு பலி குறித்து அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 2022-ம் ஆண்டில் 17.2 லட்சம் பேர் காற்று மாசுபாடு காரணமாக பலியாகியுள்ளதாக, The Lancet Countdown on Health and Climate Change அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. உயிரிழப்பு, 2010-ம் ஆண்டிலிருந்து 38% அதிகரித்துள்ளது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டிற்கு வரும் பன்னாட்டு பறவைகளில் மிக அழாகன பறவை ஃபிளமிங்கோ. இவை குளிர்காலத்தின் தொடக்கத்தில் தூத்துக்குடி, தனுஷ்கோடி, கோடியக்கரை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளுக்கு கூட்டம் கூட்டமாக வருகின்றன. இந்தாண்டும் நூற்றுக்கணக்கான ஃபிளமிங்கோக்கள் தூத்துக்குடி கடலோர பகுதிகளில் குவிந்துள்ளன. இளஞ்சிவப்பு நிற இறகுகள் கொண்ட கண்களை கவரும் ஃபிளமிங்கோவின் போட்டோஸை, மேலே பகிர்ந்துள்ளோம்.

‘பாகுபலி The Epic’ சினிமா ரசிகர்கள் தவறவிடக்கூடாத ஒரு அனுபவம். பார்த்து பழகியது என்றாலும், Goosebumps-க்கு குறைவே இல்லை. முதல் 2 பாகங்களின் 90 நிமிட காட்சிகள் நீக்கப்பட்டாலும், அது பெரிதாக பாதிக்கவில்லை. பிரபாஸ் மகிழ்மதிக்கு மீண்டும் திரும்பும் காட்சி கூடுதல் மாஸாக உள்ளது. தமன்னாவின் சீன்களை கட் செய்தது மட்டும் வேதனை அளிக்கிறது. கடைசியில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் இயக்குநர் ராஜமெளலி.

கரூர் சம்பவத்தை CBI அதிகாரிகள் விசாரித்து வந்தனர். இதனிடையே, தீபாவளிக்கு சொந்த ஊர்களுக்கு சென்ற CBI அதிகாரிகள், தற்போது மீண்டும் விசாரணையை தொடங்கியுள்ளனர். வேலுச்சாமிபுரத்தில் உள்ள டீக்கடையில் விசாரணை செய்த அவர்கள், CCTV கேமராக்களை ஆய்வு செய்தனர். விஜய் பேசிய இடத்தின் அமைப்பு, பரப்பு போன்றவற்றை நவீன கருவிகளுடன் முப்பரிமாண கோணத்தில் பதிவு செய்த அதிகாரிகள், அங்குள்ள மக்களிடமும் விசாரணை நடத்தினர்.

உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க மாதம் ₹1000-ஐ NPS வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்யலாம். 18 ஆண்டுகள் முதலீடு செய்யும் பட்சத்தில், வட்டி எல்லாம் சேர்த்து மொத்த தொகை ₹8,48,000-ஆக இருக்கும். உங்கள் குழந்தைக்கு 18 வயதான பிறகு 80% தொகையை எடுத்து அவர்களின் படிப்பு செலவுக்கு பயன்படுத்தலாம். <
Sorry, no posts matched your criteria.