India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2025 சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. அப்படியென்றால் தொடரில் கலந்து கொள்ளும் அனைத்து அணிகளும் ICC champions trophy 2025 பாகிஸ்தான் என ஜெர்சியில் பிரிண்ட் செய்ய வேண்டும். ஆனால், தற்போது அதற்கு இந்திய அணி மறுப்பு தெரிவித்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) தெரிவித்துள்ளது. மேலும், இதில் தங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும், PCB ICCயிடம் கேட்டுக் கொண்டுள்ளது.
UGC புதிய விதிகளை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தி கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. தனியார் துறையை சேர்ந்தவர்களை துணை வேந்தர்களாக நியமித்தால், உயர்கல்வி வணிகமயமாக வழிவகுக்கும் எனவும் உயர்கல்வியில் ஜனநாயகத்தை முடக்கவே புதிய UGC விதிகள் வழிவகுக்கும் என்றும் தெரிவித்துள்ளது. வரைவு விதிமுறைகளை திரும்பப் பெற்று புதிய விதிமுறைகளை UGC வெளியிட வேண்டுமென்றும் வலியுறுத்தியுள்ளது.
ஒருவர் இறந்த 2 நிமிடத்தில் மொத்த ரத்தமும் வெளியேற்றப்பட்டு Cryoprotectants கெமிக்கல் செலுத்தப்படுகிறது. பின்னர், சடலம் -190° குளிரில் வைக்கப்படுவதால் இதயம் மீண்டும் துடிக்கும் என Tomorrow Bio நிறுவனம் முயற்சிக்கிறது. 1999 நார்வேயில் பனிச்சறுக்கின் போது, ஒருவர் 2 மணிநேரம் மருத்துவ ரீதியாக இறந்தாலும், பனியில் உறைந்ததால் மீண்டும் உயிர் பெற்றார். இதன் காரணமாக இந்த சோதனை முயற்சிகள் நடைபெறுகின்றன.
வரும் 24ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து சலூன் கடைகளும் அடைக்கப்படும் என்று தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். அன்றைய தினம் முடி திருத்துதல், முகம் மழித்தல் ஆகிய சேவைகள் செய்யப்பட மாட்டாது. கல்வி, வேலைவாய்ப்பில் தனி உள் ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினின் கவனத்தை ஈர்ப்பதற்காக இந்த போராட்டம் நடைபெறவுள்ளது.
நடிகை கௌசல்யா (45), தான் திருமணம் செய்து கொள்ளாததற்கான காரணம் குறித்து பேசியிருக்கிறார். குடும்பம், குழந்தை என்ற பெரிய பொறுப்புகளை தன்னால் கையாள முடியுமா என்ற தயக்கம் இருப்பதாகவும், அதனால்தான் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றும் விளக்கமளித்திருக்கிறார். தனக்கு ஒரு காதல் உறவு இருந்ததாகவும், அது திருமணம் வரை சென்று நின்றுவிட்டதாகவும் கௌசல்யா கூறினார்.
அன்பை வெளிப்படுத்தும் அணைப்பு, மன அழுத்தம் குறைக்கும் மருந்தும் கூட. அதை உணர்த்தும் வகையில், ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி அன்பை வெளிப்படுத்த இன்று ‘International Hug Day’ கொண்டாடப்படுகிறது. இன்றைய அவசர யுகத்தில், தன் அன்பிற்கு உரியவர்களுடன் சில மணி நேரமாவது செலவிடவும் அன்பை வெளிப்படுத்தவும் இது உந்துதலை தரும். அன்பை வெளிப்படுத்த சரியான நேரத்துக்காக காத்திருக்காதீர்கள். சரியான நேரம் இதுவே!
உங்கள் அன்புக்கு உரியவரை காதலுடன் அணைத்தால் *இணையருடன் நெருக்கம் கூடும், பிணைப்பு வலுவாகும் *செரடோனின் ஹார்மோன் சுரப்பால் உற்சாகம் பிறக்கும் *உணர்வுகளை பரிமாறிக்கொள்ள உதவும் *உடல்வலி குறைந்து, ரிலாக்ஸ் ஆகும் *மனஅழுத்தம் தணியும். *மனச்சோர்வு நீங்கும் *இதயத்தை இதமாகும் *நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் *கவலை, பதற்றம், மரணம் பற்றிய அச்சம் குறையும். ஒரு ஹக் பண்ணலாமே?
ராஜஸ்தான் பில்வாராவில், ஒரு பெண் தூக்கிட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள முயல, உறவினர் ஒருவர் பார்த்து, மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு, ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றார். ஆனால், அங்கு ஆம்புலன்ஸ் கதவு ஜாமாகி திறக்க முடியாமல் 15 நிமிடங்களுக்கு மேல் தாமதமாகியுள்ளது. இதற்குள் அந்த பெண் இறந்துவிட்டார். இந்த மரணத்துக்கு ஆம்புலன்ஸ் கதவு ஜாம் ஆனதுதான் காரணம் என்று உறவினர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
அமெரிக்க அதிபர் பதவியேற்பில் இந்த வரலாற்று சாதனை போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. உலக முக்கிய பணக்காரர்கள் எலான் மஸ்க், ஜெஃப் பெசோஸ் உடன் முக்கிய நிறுவனங்களின் CEOக்கள் சுந்தர் பிச்சை, மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் நிற்க, இப்போட்டோ எடுக்கப்பட்டுள்ளது. இவர்களின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு சுமார் ₹82 லட்சம் கோடி. இது இந்தியாவின் GDPயில் கிட்டத்தட்ட பாதியாகும். 2024ல் இந்திய GDP ₹184.88 லட்சம் கோடியாகும்.
மற்ற நாடுகளின் போர்களில் இனி
அமெரிக்க ராணுவம் பங்கேற்காது என அந்நாட்டு அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவை பாதுகாப்பது மட்டுமே ராணுவத்தின் வேலை என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். செவ்வாய் கிரகத்தில் அமெரிக்க கொடியை பறக்க விடுவோம் எனக் கூறிய அவர், உலகின் ஆகச்சிறந்த மக்கள் அமெரிக்கர்கள் எனவும், அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன் என்றும் சூளுரைத்தார்.
Sorry, no posts matched your criteria.