India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஜியோ, ஏர்டெல், பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் இனி எந்த டெலிகாம் நிறுவனத்தின் டவர்களில் இருந்தும் சேவைகளை பெறலாம். நிலையான கனெக்ஷனுக்காக இந்த புதிய வசதியை தொலைத்தொடர்புத் துறை (DoT) நாடு முழுவதும் அறிமுகப்படுத்தியுள்ளது. இனி சிக்னல் பிரச்னை வராது என எதிர்பார்க்கப் படுகிறது. இந்த புதிய அறிவிப்பின் மூலம், மேற்கூறிய 3 நிறுவன வாடிக்கையாளர்கள் இனி தடையின்றி 4ஜி சேவைகளை பெறலாம்.
வெளிநாட்டு மண்ணில் விளையாடப் போகும்போது குடும்பத்தினர் அருகில் இருப்பது நல்ல மனநிலையை கொடுக்கும் என ENG கேப்டன் ஜோஸ் பட்லர் தெரிவித்துள்ளார். நாம் நவீன உலகில் வாழ்ந்து வருகிறோம் எனவும், குடும்பம் அருகில் இருப்பது வீரர்களின் ஆட்டத்தை பாதிக்காது எனவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, IND வீரர்கள் வெளிநாடு பயணத்தின் போது குடும்பத்தினரை அழைத்து செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகளை BCCI விதித்திருந்தது.
பொங்கல் விருந்தாக வெளியான ‘மதகஜராஜா’ படம், இதுவரை ₹44 கோடி வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், சந்தான, மனோபாலா, அஞ்சலி என ஒரு நட்சத்திரப் பட்டாளாமே இந்தப் படத்தில் நடித்துள்ளனர். நகைச்சுவை கதைக்களத்தை கொண்ட இந்தப் படம் 12 ஆண்டுகளுக்கு முன்பே ரிலீஸாகி இருக்க வேண்டிய நிலையில், சில காரணங்களால் கடந்த 12ஆம் தேதி ரிலீஸானது குறிப்பிடத்தக்கது
வங்கிகளுக்கு தற்போது வாரம் 6 நாள் வேலைநாளாக உள்ளது. 2வது, 4வது சனிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது. இந்நிலையில், வாரம் 5 நாள் மட்டுமே வேலைநாளாக இருக்க வேண்டுமென்று வங்கி ஊழியர்கள், தொழிற்சங்கங்கள் நீண்டகாலமாக கோரி வருகின்றனர். இதற்கு வங்கிகள் கூட்டமைப்பும் ஒப்புதல் தந்துவிட்டது. தற்போது 8-வது ஊதிய கமிஷனை அறிவித்த நிலையில், இந்த அறிவிப்பையும் அரசு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமைதிப்படை அமாவாசை எனும் பெயர் செந்தில் பாலாஜிக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று இபிஎஸ் பதிலடி கொடுத்துள்ளார். 5 ஆண்டுகளில் 2 கட்சிகளில் போட்டியிட்டவர் தான் செந்தில் பாலாஜி என்று சாடிய அவர், திமுகவை செந்தில் பாலாஜி, சேகர்பாபு எப்படி எல்லாம் விமர்சித்தனர் என்பது அவை குறிப்பில் உள்ளது. ஆனா, நான் அப்படியில்லை, பதவிகளில் இல்லாதபோதும்கூட கட்சி மாறாமல் அதிமுகவில் இருந்தேன் என்று கூறியுள்ளார்.
நாளுக்கு நாள் நவீன முறையில் மோசடிகள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. பொங்கல் பண்டிகையின்போது WhatsAppஇல் லிங்க் அனுப்பி மோசடி அரங்கேறிய நிலையில், தற்போது EB ஊழியர்கள் எனக் கூறி செல்போன் எண் உள்ளிட்ட ஆவணங்களை பெற்று மோசடி நடைபெறுகிறது. எனவே, EB பில் கட்டும் பயனாளர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் உடனே 94987 94987இல் தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
துருக்கியின் போலு மாகாணத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் நடந்த தீ விபத்தில் சிக்கி, 66 பேர் உயிரிழந்துள்ள சோகம் நடந்துள்ளது. இன்று அதிகாலை அனைவரும் தூங்கிக் கொண்டிருந்தபோது இந்த கோர விபத்து நடந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அமைச்சர் அலி ஏர்லிகயா தெரிவித்துள்ளார். மேலும், விபத்து நடந்த போது, அந்த ஹோட்டலில் 234 பேர் தங்கியிருந்தது தெரியவந்துள்ளது.
கோமியம் குறித்து சென்னை IIT இயக்குநர் கூறிய கருத்தை ஏற்பது அவரவர் விருப்பம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார். கோமியம் குடித்தால் நல்லது என, IIT இயக்குநர் காமகோடி சமீபத்தில் பேசியது சர்ச்சையானது. இதற்கு, கோமியம் பற்றி அவர் தனியார் இடத்தில் தான் பேசியதாகவும், வகுப்பறையில் அல்ல என அண்ணாமலை விளக்கமளித்தார். மேலும், தனிப்பட்ட முறையில் காமகோடி நல்ல மனிதர்; பல திறமைகளை கொண்டவர் எனவும் புகழாரம் சூட்டினார்.
பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதாக ஆளுநர் ரவி பெருமிதம் தெரிவித்துள்ளார். டெல்லி பாதுகாப்பற்றதாக நினைக்கும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள பெற்றோர், தங்கள் மகள்களை தமிழ்நாட்டுக்கு படிக்க அனுப்பும்போது பாதுகாப்பாக உணர்கின்றனர். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் தமிழ்நாட்டில் வசிப்பதற்கு இங்குள்ள மக்களின் அன்பும், விருந்தோம்பலுமே முக்கிய காரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
*https:// உடன் தொடங்கி, பெயரில் எழுத்துப் பிழைகள் இருந்தால், போலியானதாக இருக்கலாம் *Domainஐ சரிபார்க்கவும். அண்மையில் தொடங்கப்பட்டதாக இருந்தால், போலியானதாக இருக்க வாய்ப்புகள் உள்ளன *ஒரு பக்கத்திற்குள் சென்றவுடன் அது வேறொரு பக்கத்திற்கு சென்றால், அது போலியானதாக இருக்கலாம் *அரசு இணையதளம் எனில், gov.in என கடைசியில் இருக்கும். இப்படியான போலி தளங்களை பார்த்தால், 1930 என்ற எண்ணிற்கு தகவல் கொடுங்கள்.
Sorry, no posts matched your criteria.