India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் ஆஸி., வீரர் ஸ்மித் சதம் அடித்து அசத்தியுள்ளார். தொடக்கத்தில் இருந்து இந்திய அணியின் பந்துவீச்சை பறக்க விட்ட அவர் 167 பந்துகளில் சதம் அடித்தார். தற்போது வரை ஆஸி., அணி 104 ஓவர்கள் முடிவில் 420/7 ரன்கள் எடுத்து முதல் இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.டி. சபா (61) உடல்நலக்குறைவால் காலமானார். விஜயகாந்தின் பரதன் படம் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர், எங்க தம்பி, சுந்தர புருஷன், வி.ஐ.பி, புன்னகை பூவே, ஆ ஆ, இ.ஈ, நாம், பதினாறு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.தெலுங்கில் பந்தம், கன்னடத்தில் ஜாலிபாய் படங்களையும் இயக்கி உள்ளார். உடல்நலக்குறைவால் தின்டிவனத்தில் நேற்று காலமான அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மெல்போர்னில் நடைபெற்று வரும் ஆஸி., அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் கையில் கருப்பு பேண்ட் அணிந்துள்ளனர். நேற்று இரவு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இறந்ததை அடுத்து அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கையில் கருப்பு பேண்ட் அணிந்து விளையாடி வருகின்றனர். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் தொடங்கிய தற்போது வரை ஆஸி., அணி 94 ஓவர்களில் 342/6 ரன்கள் எடுத்துள்ளது.
இந்திய திரை உலகம் இந்த ஆண்டு பல துயர்களை கண்டுள்ளது. தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் ஹுசேனும், இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர் ஷியாம் பெனகலும் நோயால் மரித்தனர். மேலும், இசைக்கலைஞர் உஸ்தாத் ரஷித் கான், கசல் பாடகர் பங்கஜ் உதாஸ், தெலுங்கு ஊடக லெஜண்ட் ராமோஜி ராவ், நடிகர்கள் டேனியல் பாலாஜி, சூர்யா கிரண், நடிகைகள் சுஹானி, பவித்ரா ஜெயராமன், நாட்டுப்புற பாடகி ஷ்ரத்தா உள்ளிட்ட பலரும் இம்மண்ணை விட்டு பிரிந்தனர்.
1822: ரேபிஸ் தடுப்பூசியை கண்டுபிடித்த லூயிஸ் பாஸ்டர் பிறப்பு
1939 – துருக்கியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 32,700 பேர் உயிரிழந்தனர்.
1945: சர்வதேச நாணய நிதியத்தை நிறுவுதல்
1965: பாலிவுட் நடிகர் சல்மான் கான் பிறப்பு
1968 – சந்திரனுக்கான முதலாவது மனித விண்வெளிப்பயணக் கப்பலான அப்பல்லோ 8 வெற்றிகரமாக பசிபிக் கடலில் இறங்கியது.
2007: பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கொலை
நாட்டிற்கு மன்மோகன் சிங் ஆற்றிய சேவை என்றும் நினைவு கூறப்படும் என குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தெரிவித்துள்ளார். மேலும் இந்திய பொருளாதாரத்தை கட்டமைத்ததில் மன்மோகன் சிங் பங்கு மிக முக்கியமானது என்றும், களங்கமற்ற அரசியல் வாழ்வு, மிகுந்த பணிவு மிக்கவர் என அவருக்கு புகழாரம் சூட்டினார்.
1991னில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்தத்தின் காரணமாக, இளைஞர்களுக்கு IT, உற்பத்தி மற்றும் தொலைத்தொடர்பு துறைகளில் அதிக வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்தியாவில் போட்டி அதிகரித்து, குறைந்த விலையில் நுகர்வோருக்கு தரமான பொருட்கள் கிடைத்தன. நடுத்தர வர்க்க வருமானம் அதிகரித்து நுகர்வு அதிகரித்தது. அவரது சீர்திருத்தங்கள் உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவை முக்கிய இடத்திற்கு எடுத்து சென்றது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 1991இல் 3% இருந்தது. ஆனால் மன்மோகனின் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு பிறகு அது 6-7% ஆனது. இது சர்வதேச கடன் வழங்குபவர்களான IMF, WBக்கின் நம்பிக்கையை அதிகரித்தது கடன் உதவி அளித்ததால் நிலைமை சீரானது. இந்திய ரூபாயின் மீதான நம்பிக்கை அதிகரித்து, நிதி நெருக்கடியில் இருந்து மீண்டது. இந்தியாவின் அன்னிய கையிருப்பு 2 ஆண்டுகளில் 1 Billionலிருந்து 10 Billion உயர்ந்தது.
▶நீங்கள் ஒருவரின் வாழ்வில் விளக்கேற்றினால், அது உங்கள் பாதையையும் பிரகாசமாக்கும்.
▶மாற்றம் ஒருபோதும் வலிமிகுந்ததல்ல, மாற்றத்தை எதிர்ப்பது மட்டுமே வலிமிகுந்தது.
▶உலகம் ஒரு கண்ணாடி போன்றது. அது ஒவ்வொரு மனிதனுக்கும் தனது சொந்த எண்ணங்களின் உண்மையான பிரதிபலிப்பைக் காட்டுகிறது. உங்கள் மனதை ஆளுங்கள் இல்லையெனின் அது உங்களை ஆளும்.
▶உள்ளத்தில் கோபம் இருந்தால் மட்டுமே ட்ஜ்ஜ்ஜ்க்
மன்மோகன் சிங் மறைவுக்கு EPS இரங்கல் தெரிவித்துள்ளார். அவர், “ஒரு சிறந்த பொருளாதார நிபுணராகவும், திறமையான நிர்வாகியாகவும், ஒரு முன்மாதிரியான அரசியல்வாதியாகவும், அவரது பங்களிப்புகள் நாட்டின் வரலாற்றில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. அவரது மறைவு நாட்டுக்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு. அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
Sorry, no posts matched your criteria.