India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வாக்குகள் சிதறாமல் இருக்க கூட்டணி குறித்து சரியான முடிவு எடுக்கப்படும் என EPS கூறியுள்ளார். சேலத்தில் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனைக்கு பிறகு பேசிய அவர், மக்களவைத் தேர்தலில் கூட்டணி வேண்டாம் என்றோம். ஆனால், வாக்குகள் சிதறாமல் இருக்க எதிரணியினர் வியூகம் வகுக்கின்றனர். அதிமுகவும் இந்த நிலைப்பாட்டை எடுக்கும் என்றார். இது, அதிமுகவின் கூட்டணி கதவு திறப்புக்கான க்ரீன் சிக்னல் என பலரும் பேசி வருகின்றனர்.
இந்தியா, இங்கிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இப்போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 மற்றும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தமிழ் சேனல்களில் நேரலையில் காணலாம். அதோடு, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் அப்ளிகேஷனிலும் போட்டியை காணலாம். 6.30 மணிக்கு டாஸ் போட்டு போட்டியை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. என்ன மக்களே ரெடியா?
நடிகை ஊர்வசி ரவுதேலாவின் குளியலறை வீடியோ கடந்த ஆண்டு வெளியாகி பரபரப்பை கிளப்பியிருந்தது. இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், அது திரைப்படத்தில் உள்ள காட்சிதான் என்றும் படக்குழு தன்னை கேட்டுதான் லீக் செய்தனர் என்றும் அசால்ட்டாக பதிலளித்தார். மேலும், அது விழிப்புணர்வுக்கான வீடியோ என்றும் அவர் கூறினார். ஆனால், அது விழிப்புணர்வு வீடியோ போல இல்லையே என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.
பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்ற இன்றைய நாளில் மகாலட்சுமி வழிபாடு பல நன்மைகளை தரவல்லது. இரண்டு மண் அகல் விளக்குகளில் நெய் விட்டு தீபம் ஏற்றி, ஏதாவது பிரசாதமும் படைத்து வழிபட வேண்டும். காயத்ரி மந்திரத்தை 108 முறை சொல்வதன் மூலம் செல்வம், செழிப்பு பெருகும். குழந்தைகளின் கல்வி மேம்படும். திருமணத் தடை உள்ளவர்கள் புதன்கிழமை வழிபாடு செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.
TN BJP தலைவர் பொறுப்பிலிருந்து அண்ணாமலை நீக்கப்பட்டதாகப் பரவும் தகவலில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. அண்ணாமலை நீக்கப்பட்டதாக X தளத்தில் Verified டிக் வாங்கியுள்ள சில கணக்குகளிலிருந்து தகவல் பதிவிடப்பட்டது. அதனை, உண்மை என நம்பி பலரும் ஷேர் செய்து வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக பாஜக மேலிடத்தில் விசாரித்தபோது, இது முற்றிலும் வதந்தி எனவும், அவருக்கு எதிரான வன்மம் என்றும் மறுத்துள்ளனர்.
ரீல்ஸ் செய்வது பழக்கத்தோடு இருக்கும் வரை ஓகே, ஆனால் அதுவே வாழ்க்கை என்றாகும் போது தான் சிக்கல் வருகிறது. நன்றாக மனதில் கொள்ளுங்கள் லைக்ஸ் மட்டும் வாழ்க்கையல்ல. மனிதனும் மனிதனும் பேசுவது குறைந்து, மனிதனும் மெஷினும் பேசுவது அதிகரித்து விட்டது. வாழ்க்கை போனிற்கு வெளியேயும் உண்டு. அது தான் வாழ்க்கை. நம் நினைவுகள் சகமனிதனுடனேயே இருக்கணும். அந்த நினைவுகளை சேகரித்து வைக்க மட்டுமே போன்..!
கடன் பிரச்னை சரியாக செல்ல வேண்டிய பரிகார ஆலயங்கள் 1. அன்னமலை தண்டாயுதபாணி கோவில், மஞ்சூர், ஊட்டி 2. கருமாரியம்மன் கோவில், திருவேற்காடு. 3. சாரபரமேஸ்வரர் கோவில், திருச்சேறை, கும்பகோணம். 4. சிவலோகதியாகர், நல்லூர்பெருமணம், ஆச்சாள்புரம், சீர்காழி. 5. திருமலை-திருப்பதி ஸ்ரீநிவாசபெருமாள் கோவில், திருமலை. மேற்கண்ட ஆலயங்களுக்கு சென்றால் தீராத கடன் பிரச்னை அகலும் என நம்பப்படுகிறது.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைதான ஞானசேகரன் திடீரென ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்யப்பட்டுள்ளார். கடந்த மாதம் 25ஆம் தேதி கைதான அவர், கீழே விழுந்ததில் கை, கால்களில் கட்டு போடப்பட்டது. இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, இன்று காலை வலிப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது. உடனடியாக அவர் சிறைக்காவலர்களால் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
19 வயது மகளிருக்கான உலகக் கோப்பை போட்டியில் ஹாட்ரிக் எடுத்த முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனையை வைஷ்ணவி ஷர்மா படைத்துள்ளார். மலேசிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் எடுத்ததன் மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். குறிப்பாக 5 ரன்கள் மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுக்களை எடுத்துள்ளதால், U19 டி20 உலகக் கோப்பையில் சிறந்த பந்துவீச்சாக இது பதிவாகியுள்ளது.
தான் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தால் சீமானால் கட்சி நடத்தவே முடியாது என திமுக மூத்த தலைவர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார். சட்டப்படி நாம் தமிழர் என்ற பெயரையே சீமான் பயன்படுத்தக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். யாரை பற்றியும் அவதூறு பேசிவிடலாம், ஆனால் அது எந்த நோக்கத்துக்காக கூறப்படுகிறது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.