India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணாமலை பல்கலை. வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை கண்டித்து அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். இதை கருத்தில் கொண்டு, ஆரணி உள்ளிட்ட இடங்களில் உறுப்பு கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணாமலை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை மிகத் தீவிரமாக இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 6 நாள்களுக்கு மழை நீடிக்கும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை இடி மின்னலுடன் கூடிய மழையோ, மிதமான மழையோ பெய்யக்கூடும் என்றும், மாநிலத்தில் இன்று ஒருசில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கணித்துள்ளது. SHARE IT.
2024ஆம் ஆண்டு திரையுலக தம்பதிகளின் பிரிவு காலம் போலும். தமிழில் தனுஷ் – ஐஸ்வர்யா, ஏ.ஆர் ரகுமான் தம்பதிகள் உள்ளிட்டாேர் பிரிந்தனர். இதேபோல் ஹிந்தியிலும் தற்போது ஒரு ஜோடி பிரிந்துள்ளது. அர்ஜூன் கபூர், மலைகா அரோரா திருமணம் செய்யாமலே தம்பதிகளாக வாழ்ந்து வந்தனர். அண்மையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், தாம் சிங்கிள் என அர்ஜூன் கபூர் கூறியுள்ளார்.
தமிழ் பிக்பாஸ் சீசன் 8ல் கடந்த வார எலிமினேஷனாக ரஞ்சித் வெளியேறிவிட்ட நிலையில், இந்த வார நாமினேஷனில் இருக்கும் ஜாக்குலின், VJ விஷால் ஆகியோர் நிச்சயமாக காப்பாற்றப்பட்டு விடுவார்கள் எனப்படுகிறது. அதே நேரத்தில் டேஞ்சர் ஜோனில் இருக்கும் ஜெஃப்ரி தப்பிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படும் நிலையில், அன்ஷிதா தான் இந்த வாரம் எலிமினேஷன் எனப் பேசப்படுகிறது நீங்க என்ன சொல்றீங்க?
சர்ச்சையை கிளப்பி படத்தை பார்க்க வைப்பது ஒருவகை டிரெண்டாக மாறி வருவதாக ஐகோர்ட் கிளை கருத்து தெரிவித்துள்ளது. சொர்க்கவாசல் படத்தில் வீரபாண்டிய கட்டபொம்மனை தவறாக சித்தரித்துள்ளதாகக் கூறி, தடைவிதிக்குமாறு பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதனை விசாரித்த நீதிமன்றம், நாடு முழுவதும் தடைவிதிக்க ஐகோர்ட் கிளைக்கு அதிகாரமில்லை எனக்கூறி, மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகுமாறு அறிவுறுத்தியுள்ளது.
பொருளாதார வல்லுநராக உலகறியும் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை பெரும் இன்னல்களைக் கடந்து வந்துள்ளது. பள்ளியே இல்லாத கிராமத்தில் பிறந்து மண்ணெண்ணெய் விளக்கொளியில் படித்தவர். 1947இல் இந்தியா – பாக்., பிரிவினைக்குப் பிறகு குடும்பத்தோடு இந்தியா வந்த அவர், ஹல்த்வானி அகதிகள் முகாமிலிருந்துள்ளார். படிப்பில் படு சுட்டியாக இருந்த அவருக்குப் பல வெளிநாட்டு யுனிவர்சிட்டிகள் ஸ்காலர்ஷிப் கொடுத்து கவுரப்படுத்தின.
இந்திய அணி 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸி. அணியை விட 310 ரன்கள் பின்தங்கியுள்ளது. ஜெய்ஸ்வால் 82, ரோஹித் 3, கே.எல்.ராகுல் 24, கோலி 36, ஆகாஷ் தீப் 0 எடுத்து வெளியேறினர். களத்தில் பண்ட் 6, ஜடேஜா 4 ரன்களுடன் இருக்கிறார்கள். கைவசம் இன்னும் 5 விக்கெட் மட்டுமே உள்ள நிலையில், பாலோ ஆனை தவிர்க்க இந்தியா 275 ரன்களை கடக்க வேண்டும். நாளை ஜடேஜா – பண்ட் பார்ட்னர்ஷிப் மிகவும் முக்கியமானது. மீளுமா இந்தியா?
“96” 2ம் பாகம் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளிவருகின்றன. சிங்கப்பூர், மலேசியாவில் படப்பிடிப்பு நடைபெறும் எனப்படும் நிலையில், படத்தின் கதை இது தான் என செய்தி ஒன்று வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் சிங்கப்பூரில் கல்யாணமாகி செட்டிலான ஜானு (திரிஷா), சென்னை வருவார். 2ம் பாகம்m சிங்கப்பூரில் என்பதால் ராம் (விஜய் சேதுபதி) ஜானுவை காண அங்கு செல்கிறாரோ? என கூறப்படுகிறது. ஒருவேளை இருக்குமோ..
பிரதமராக இருந்த மன்மோகன் சிங், ஒரு காலத்தில் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டுள்ளார். இது குறித்து அவரது மகள் தமன் சிங் எழுதிய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். கேம்பிரிட்ஜ் பல்கலை. கல்விக் கட்டணம், செலவுகள் ஆண்டுக்கு 600 பவுண்டுகள் என்ற நிலையில், பஞ்சாப் பல்கலை. 160 பவுண்டுகள் வழங்கியுள்ளது. இதனால் தந்தை பல நேரங்களில் பணத்தை மிச்சப்படுத்த, சாக்லேட் மூலம் பசியை தீர்த்து கொண்டுள்ளார் எனக் கூறியுள்ளார்.
சென்னை பரங்கிமலையில் 2022இல் ரயில் முன் மாணவியை தள்ளிவிட்டு காெலை செய்த வழக்கில் கைதான நபரை குற்றவாளியாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மாணவி சத்யபிரியா தன்னை காதலிக்காததால் ரயிலில் தள்ளிவிட்டு சதீஷ் கொலை செய்தார். மாநிலத்தையே உலுக்கிய வழக்கில் சதீசை குற்றவாளியாக அறிவித்து, தண்டனை விவரம் வருகிற 30ஆம் தேதி வெளியிடப்படும் என்று அல்லிக்குளம் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.