India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மேலே உள்ள புகைப்படத்தில் உள்ள 3 பெண்கள் யார் என்று யோசிக்கிறீர்களா? மூவருமே மருத்துவர்களாக உரிமம் பெற்ற முதல் பெண்கள். 1885ல் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் இந்தியப் பெண் ஒருவரும் உள்ளார். அவர் பெயர் ஆனந்திபாய் ஜோஷி (சேலையில்). மற்ற இருவர் ஜப்பானைச் சேர்ந்த Kei Okami, சிரியாவைச் சேர்ந்த Sabat Islambuli. ஆனந்திபாய் 1886 இல் மருத்துவக் கல்வியில் பட்டம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
▶டிசம்பர் 28 ▶மார்கழி- 12 ▶கிழமை: சனி ▶ நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்:10:45 AM – 11:45 AM, 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM ▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶சூலம்: கிழக்கு ▶திதி: த்ரயோதசி ▶பரிகாரம்: தயிர் ▶நட்சத்திரம்: அனுஷம் ▶சந்திராஷ்டமம்: அசுவினி
அண்ணா பல்கலை. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் X தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “ அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுடன் நான் உறுதுணையாக நிற்கிறேன். குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை கிடைக்க வேண்டும். அவரைப் போன்றவர்களை வெளியே விடக்கூடாது” என பதிவிட்டுள்ளார். இவ்வழக்கில் ஞானசேகர் என்பரை போலீசார் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று (டிச.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (டிச.28) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
*வைட்டமின் A, பீட்டா கரோட்டின் நிறைந்த கேரட், நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும்.
*கேரட்டில் கால்சியம் மற்றும் வைட்டமின் K உள்ளதால், எலும்புகளை வலுப்படுத்தும்.
*உடல் எடையை குறைக்க விரும்புவோர், கேரட் சாப்பிட்டு வர, நல்ல பலன் கிடைக்கும்.
*நாள்தோறும் 5 கேரட் சாப்பிட்டால், மலச்சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்கும்.
*கண் பார்வை பிரச்னை உள்ளவர்களுக்கு, கேரட் ஒரு சிறந்த தீர்வு.
கோலியின் இன்றைய ஆட்டத்தை பார்த்த போது, ஒரு மாஸ்டர் கிளாஸை கவனிப்பது போல் இருந்ததாக ஸ்டீவ் ஸ்மித் புகழ்ந்துள்ளார். 2ஆம் நாள் ஆட்டம் முடிந்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஸ்மித், பவுலர்கள் தன்னை நோக்கி வருவதற்காக காத்திருந்து கோலி நிதானமான விளையாடியதாகவும், லெக் சைடு, பவுன்சர் பந்துகளிலும் அவர் எளிதாக ரன்களை சேர்த்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும், ஜெய்ஸ்வாலும் Aggressiveஆக ஆடியதாக கூறியுள்ளார்.
➤மேஷம் – மேன்மை ➤ ரிஷபம் – வெற்றி ➤மிதுனம் – நட்பு ➤கடகம் – போட்டி ➤சிம்மம் – சுகம் ➤கன்னி – தனம் ➤துலாம் – வரவு ➤விருச்சிகம் – முயற்சி ➤தனுசு – உயர்வு ➤மகரம் – கவலை ➤கும்பம் – லாபம் ➤மீனம் – ஜெயம்.
மன்மோகன் சிங் மறைவை தனிப்பட்ட இழப்பாக கருதுவதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். தனது நண்பராக, தத்துவஞானியாக, வழிகாட்டியாக இருந்ததாகவும், ஒரு போதும் நிரப்ப முடியாத வெற்றிடத்தை விட்டுச் செல்வதாகவும் சோனியா காந்தி கவலை தெரிவித்துள்ளார். மேலும், மன்மோகன் தனது நடத்தையில் மென்மையானவர், ஆனால் சமூகநீதி, மதச்சார்பின்மை உள்ளிட்ட அவரது நம்பிக்கைகளில் மிகவும் உறுதியானவர் எனவும் நினைவு கூர்ந்துள்ளார்.
தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு, 10-3-2-1 ஃபார்முலா பயனுள்ளதாக இருக்கும் என நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். தூங்கப்போவதற்கு 10 மணி நேரத்திற்கு முன் டீ/காஃபி குடிப்பதை தவிர்க்கவும். 3 மணி நேரத்திற்கு முன்னதாகவே உணவு சாப்பிட்டிருக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு முன்பே பணி செய்வதை நிறுத்துங்கள். மொபைல்/டிவி 1 மணி நேரத்திற்கு முன்பே ஆஃப் செய்யுங்கள். இதை கடைபிடித்தால் நிம்மதியான தூக்கம் வரும்.
Sorry, no posts matched your criteria.