India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை வழக்கில், மாணவி தவறு செய்தது போல் FIR போடப்பட்டுள்ளதாக ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது. மிகவும் மோசமான முறையில் FIR உள்ளதாகவும், வாக்குமூலம் பெறும்போது காவல் அதிகாரிகள் உதவி செய்ய முடியாதா? எனவும் வினவியுள்ளது. பாதிக்கப்பட்ட நபரின் அடையாளங்களைக் காப்பது காவல்துறையின் கடமை, அதை தவறியவர்கள் மீதான நடவடிக்கை என்ன என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது.
தேமுதிக தலைவர் விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், “மாசற்ற மனதுக்கும் தூய அன்பிற்கும் சொந்தக்காரராக விளங்கி, மண்ணைவிட்டு மறைந்தாலும் நமது நெஞ்சங்களில் வாழும் நண்பர்” என பதிவிட்டுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் “என் அன்புக்குரிய கேப்டனின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தில் அவருக்கு என் நினைவஞ்சலி” என குறிப்பிட்டுள்ளார்.
2025 பிப்ரவரி, மார்ச்சில் சனி மற்றும் குரு பெயர்ச்சி நிகழ்கின்றன. இதன் அடிப்படையில் ⁍ மேஷம்: 2025 மங்களகரமானது. நிதி நிலை முன்னேறும். திருமண வாழ்வில் இனிமை காணுவீர்கள் ⁍ ரிஷபம்: ஆக்கப்பூர்வமானதாக அமையும். நிதி நிலைமை நன்றாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் ⁍ மிதுனம்: தொழில், நிதி நிலைமைகளின் முன்னேற்றம் சீராக இருக்கும். புதிய உறவுகள் கைகூடும். காதல் வாழ்க்கை செழிக்கும்.
தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் அரைசதம் கடந்து அசத்தியுள்ளார். அவர் 146 பந்துகளில் 1 பவுண்டரியுடன் அடித்து இந்த ஸ்கோரை எடுத்துள்ளார். மறுமுனையில் நிதிஷ் ரெட்டி சதத்தை நெருங்கி இருக்கிறார். இந்திய அணிக்கு 8வது விக்கெட்டுக்கு கைகோர்த்த சுந்தர் – நிதிஷ் ரெட்டி அணியை சிறப்பாக மீட்டு வருகிறார்கள். இந்திய அணி 340/7 ரன்களை எடுத்துள்ளது.
சென்னை அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை வழக்கில் FIRஐ வெளியிட்டது யார் என்பதைக் கண்டுபிடித்துவிட்டதாக TN அரசு தெரிவித்துள்ளது. வழக்கமான நடைமுறையில் கோட்டூர்புரம் போலீசார் இணையத்தில் பதிவேற்றம் செய்ததை Citizen Portal மூலம் 14 பேர் பார்த்துள்ளதாகவும், அவர்களது விவரங்கள் கிடைத்துள்ளதாகவும் ஐகோர்ட்டில் கூறியுள்ளது. சிறிய தொழில்நுட்பக் கோளாறால் FIR வெளியானதாகவும் விளக்கம் அளித்துள்ளது.
டெலிகாம் நிறுவனங்களின் கட்டணங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக நிதிச் சேவை நிறுவனமான Motilal Oswal தெரிவித்துள்ளது. அதன் அறிக்கையில், 2025 டிசம்பரில் ரீசார்ஜ் கட்டணம் 15% வரை உயர்த்தப்படலாம். ARPU அளவை அதிகரிக்க இனிமேல் இந்த நடைமுறை அடிக்கடி மேற்கொள்ளப்படலாம் எனக் கூறப்பட்டுள்ளது. FY25 இல் தொலைத்தொடர்பு துறையின் வருவாய் ₹67,400 கோடியாக உயர்வடைந்துள்ளது கவனிக்கத்தக்கது.
SBI வங்கியில் காலியாக உள்ள 600 புரொபேஷனரி அதிகாரி (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜூனியர் மேனேஜ்மென்ட் கிரேடு நிலை – 1இல் பணியில் சேர விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு: 21 – 30. கல்வித் தகுதி: Any UG Degree, CA, CMA, ICWA. சம்பளம்: ₹48,480 – ₹85,920. விண்ணப்பிக்க கடைசி நாள்: 16.01.2025. கூடுதல் தகவலுக்கு https://sbi.co.in/ சென்று பார்க்கவும்.
ஈஷா சார்பில் நடத்தப்படும் 16வது கிராமோத்சவ விளையாட்டுத் திருவிழாவில் சிறப்பு விருந்தினராக பிரபல கிரிக்கெட் வீரர் வீரேந்தர் சேவாக் கலந்துகொள்ள இருக்கிறார். வாலிபால், த்ரோபால் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளின் ஃபைனல்கள் டிச., 29இல் ஆதியோகியின் முன்பு நடைபெற உள்ளன. மேலும், நாதஸ்வரம், தவில், பஞ்சரி மேளம், சிலம்பம், வள்ளி கும்மி, ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி மந்தநிலையை அடைந்ததற்கு RBI காரணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நுகர்வு தேவை குறைந்ததே முதல் 2 காலாண்டில் வளர்ச்சி குறையக் காரணம் எனவும், RBI-இன் பணக்கொள்கை நடவடிக்கைகளே தேவைகள் குறையக் காரணமாகி இருக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. வட்டியைக் குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியும் முன்னாள் RBI கவர்னர் சக்தி காந்ததாஸ் குறைக்கவில்லை எனவும் கூறியுள்ளது.
கொடுக்குற தெய்வம் கூரையை பிச்சிட்டு கொடுக்கும் என்பார்கள். துபாயில் வாட்ச்மேனாக பணிபுரியும் ஹைதராபாத்தை சேர்ந்த ராஜமலையாவிற்கு பிக் டிக்கெட் மில்லியனர் எலக்ட்ரானிக் லக்கி டிராவில் சுமார் ₹2 கோடியே 32 லட்சத்தி 76 ஆயிரத்தி 460 பரிசு கிடைத்துள்ளது. தன் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை என்ற அவர், உதவிய நண்பர்களுக்கும் தனது குடும்பத்தின் எதிர்காலத்திற்கும் இந்த தொகையை பயன்படுத்தப் போவதாக கூறினார்.
Sorry, no posts matched your criteria.