India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாகரீகம் இல்லாத வகையில் செந்தில் பாலாஜி பேசினால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று EX அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் எச்சரித்துள்ளார். அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டும் என பலமுறை கேட்டு, அதில் தோற்றுப்போய் திமுகவில் சேர்ந்த செந்தில் பாலாஜி, அதிமுகவுக்கு பாடம் எடுக்க தேவையில்லை என்றும் சாடியுள்ளார். முன்னதாக, தரை தேயும் அளவுக்கு ஊர்ந்து சென்றவர் இபிஎஸ் என செந்தில் பாலாஜி விமர்சித்திருந்தார்.
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பாக பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். நான்கு ஓவர்கள் பந்து வீசிய அவர், 23 ரன்கள் விட்டுக்கொடுத்து இங்கிலாந்து அணியின் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். 34 பந்துகளில் 79 ரன்கள் (எட்டு சிக்சர், 5 பவுண்டரி) எடுத்த அபிஷேக் ஷர்மாவுக்கு ஆட்ட நாயகன் விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தமிழகத்தில் பாமகவை விட பெரிய கட்சியாக தமிழக வாழ்வுரிமை கட்சி வளர்ந்து விட்டதாக அக்கட்சி தலைவர் வேல்முருகன் கூறியுள்ளார். பாமகவில் ஏற்பட்டுள்ள தந்தை, மகன் பிரச்னை தொடர்பாக எவ்வித கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும், அக்கட்சியில் இருந்து விலகி நீண்டநாள் ஆகிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். குறைகளை சுட்டிக் காட்டினாலும், திமுக கூட்டணியிலேயே தொடர்ந்து இருக்கிறோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் லக்சயா சென் அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். ஜப்பானின் தகுமா ஒபயாஷியை எதிர்த்து விளையாடிய அவர், 21-9, 21-14 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து, வியட்நாமை சேர்ந்த குயென் துய் லின்னிடம் 22-20, 21-12 என்ற புள்ளி கணக்கில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
திமுக அரசை குறை கூறுவதை தவிர இபிஎஸ்-க்கு வேறு எந்த வேலையும் கிடையாது என அமைச்சர் சேகர் பாபு குறை கூறியுள்ளார். இபிஎஸ் போன்று யாரையும் குறைகூற வேண்டிய அவசியம் திமுகவுக்கும் இல்லை என்றும், மக்கள் பணியாற்றவே அரசுக்கு நேரம் சரியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தான் செய்திகளில் வரவேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே இபிஎஸ் அரசை விமர்சித்து வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
* முறையற்ற உணவு முறை. * மன அழுத்தம் முடி உதிர்வுக்கு முக்கிய காரணியாக அமைகிறது. *தலைமுடியில் அதிக கெமிக்கல் பயன்பாட்டை தவிருங்கள். *முடியின் தன்மைக்கு ஏற்ப ஷாம்பு அல்லது கண்டிஷனரை பயன்படுத்துங்கள். *உடம்பில் ஏதாவது நோய் அல்லது தொற்றுப் பரவினால் அதன் தாக்கமும் முடியை பாதிக்க வாய்ப்புள்ளது.
கள்ளக்குறிச்சி விஷச் சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பான சிபிஐ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். கடந்த ஆண்டு ஜூன் 19இல் மெத்தனால் கலந்த விஷ சாராயம் குடித்து 69 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரித்து வந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், சிபிஐ அதிகாரிகள் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிலரிடம் விசாரணை நடத்தினர்.
*ஆவி பிடிப்பதால் சரும துளைகள் திறந்து, அடைபட்டிருக்கும் எண்ணெய் மற்றும் அழுக்கு வெளியேறும் என்கிறார்கள் மருத்துவர்கள். *சருமத்தில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, இது முகப்பருக்களை குணப்படுத்த உதவுகிறது. *ஆவி பிடிப்பதால் இறந்த சரும செல்கள் நீங்கி, புதிய சரும செல்கள் வளர்ச்சிக்கு உதவுகிறது. *இதனால் சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும். *மேலும், சைனஸ் பிரச்னைகள் குறைய வாய்ப்புள்ளது.
தனது மனைவியுடனான டைவர்ஸ் விவகாரம் பெரிதாக பேசப்படும் நிலையில் சஹால் போட்ட இன்ஸ்டா பதிவு ஒன்று பேசு பொருளாகியுள்ளது. ‘‘உண்மையான காதலை கண்டுபிடிப்பது கடினம், எனது பெயரை போலவே’’ என அவர் பதிவிட்டுள்ளார். இங்கிலாந்து எதிரான டி20 தொடரிலும், சாம்பியன்ஸ் டிராபியிலும் அணியில் அவரது பெயர் இடம்பெறாததை குறித்தே அவர் இதை பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. அதனால், BCCI மீது ரசிகர்கள் வன்மத்தை கொட்டி வருகின்றனர்.
1.தன்னம்பிக்கையற்றவர்கள் 2. கடமையைச் செய்யாதவர்கள், 3. குலதர்மம் தவறியவர்கள், 4. செய்நன்றி மறந்தவர்கள், 5. புலனடக்கம் இல்லாதவர்கள், 6. பொறாமை கொண்டவர்கள், 7. பேராசை கொண்டவர்கள், 8. கோபம் கொள்பவர்கள், 9. சான்றோரை மதிக்காதவர்கள், 10. பெற்றோரை உதாசீனம் செய்பவர்கள். 11. குரு நிந்தனை செய்பவர்கள், 12. உண்மைக்குப் புறம்பாக நடப்பவர்கள், 13. பிறர்மனை விரும்புகிறவர்கள், 14 ஆணவம் கொண்டவர்கள்.
Sorry, no posts matched your criteria.