India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணா பல்கலை மாணவி வன்கொடுமை வழக்கை விசாரிக்க 3 பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழுவை TN அரசு அமைத்துள்ளது. சிபிஐ விசாரணை கோரி தாக்கலான மனுக்களை நிராகரித்த ஐகோர்ட், சிறப்பு விசாரணைக் குழு அமைக்க உத்தரவிட்டிருந்த நிலையில், ஜமான் ஜமால், ஆவடி துணை ஆணையர், பிருந்தா, சேலம் துணை ஆணையர், சிநேக பிரியா, அண்ணாநகர் துணை ஆணையர் ஆகியோர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.
பொங்கலுக்கு ஜனவரி 14ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது. ஜனவரி 17ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆகும். ஜனவரி 18, 19ஆம் தேதிகள் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகும். இந்த 2 நாள்களும் அரசு ஊழியர்களுக்கு விடுமுறை ஆகும். இதை சுட்டிக்காட்டி, வெளியூர் சென்ற ஊழியர்களுக்கு வசதியாக ஜன.17க்கும் விடுமுறை விடக்கோரி ஸ்டாலினுக்கு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் கடிதம் எழுதியுள்ளது.
BGT 4வது டெஸ்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நிதிஷ் குமார் ரெட்டி சதம் அடித்தது பலரின் பாராட்டுகளை பெற்று வருகிறார். இதனை தொடர்ந்து, ஆந்திரா கிரிக்கெட் சங்கம் (ACA) அவருக்கு ₹25 லட்சம் பரிசுத்தொகை அறிவித்துள்ளது. இதனை ACA தலைவரும், விஜயவாடா எம்.பி.யான கேஷினேனி ஷிவ்நாத் அறிவித்திருக்கிறார். நிதிஷ் குமார் ரெட்டியின் சொந்த ஊர் ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம் ஆகும்.
பாமக இடம்பெறும் கூட்டணிதான் 2026இல் தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமகவின் சிறப்பு புத்தாண்டு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், “திமுக அரசு மக்கள் விரோத ஆட்சி நடத்துகிறது. ஒருநாள்கூட இந்த ஆட்சி நீடிக்கக்கூடாது. அடுத்து நம்முடைய கூட்டணி ஆட்சிதான். கூட்டணி குறித்து நான் பார்த்துக்கொள்கிறேன். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றும் முடிவோடு தேர்தல் பணி தொடங்க வேண்டும்” என்றார்.
ஸ்பெயின் அருகே நேரிட்ட படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 69ஆக உயர்ந்துள்ளது. மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு 80 பேருடன் படகு சென்றது. அந்தப் படகு நடுக்கடலில் கடந்த 19ஆம் தேதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் 11 பேர் மட்டுமே நீந்தி கரை சேர்ந்ததாகவும், எஞ்சியோர் இறந்து விட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பலியானோரில் பலர் தொழிலாளர்கள் என்று கூறப்படுகிறது.
நிதிஷ்குமார் ரெட்டியின் சதத்தை இன்று நாடே கொண்டாடி வரும் நிலையில், அவரது கடந்த கால பேட்டிகள் மீண்டும் கவனம் பெறுகின்றன. ‘‘சிறுவயதில் விளையாட்டாக கிரிக்கெட் ஆடத் தொடங்கினேன். ஆனால், அப்பா எனக்காக அவரது வேலை உள்பட பலவற்றை தியாகம் செய்தார். பணக் கஷ்டத்தால் அவர் அழுததை ஒருமுறை பார்த்திருக்கிறேன். அப்போது முதல் கிரிக்கெட்டை சீரியஸ் ஆக விளையாடத் தொடங்கினேன்’’ என நிதிஷ் பேசியுள்ளார்.
முகுந்தன் பரசுராமன், பாமக நிறுவனர் ராமதாஸின் மகளான ஸ்ரீகாந்தியின் மகன் ஆவார். முகுந்தன் பரசுராமனுக்கு, சில மாதங்களுக்கு முன்பு ஊடக பேரவை மாநிலச் செயலாளராகப் பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில் தனது சகோதரி மகனுக்கு கட்சியில் பொறுப்பு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அன்புமணி, பனையூரில் தனியாக ஆபீஸ், செல்போன் எண்ணை அறிவித்துவிட்டு பொதுக்குழுக் கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே நீண்ட நாள்களாக குடும்பப் பிரச்னை நிலவுவதாகக் கூறப்படுகிறது. 2 பேரும் சரியாக பேசிக் கொள்வதில்லை என்றும், கட்சியில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்பதில் பனிப்போர் நிலவுவதாகவும் கூறப்படுகிறது. பாமக சார்பில் அறிக்கை வெளியிடுவதிலும் 2 பேர் இடையே போட்டி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதுவே புதுச்சேரி கூட்டத்தில் மோதலாக வெடித்ததாகவும் கூறப்படுகிறது.
வன்னியர் சமூகத்திற்காக பல போராட்டங்களை முன்னெடுத்து அதன் அடிப்படையில் பாமக என்ற கட்சியை கட்டமைத்தவர் ராமதாஸ். பல ஆண்டுகளாக ஜி.கே.மணி கட்சியின் தலைவராக செயல்பட்டபோதும், மொத்த அதிகாரமும் ராமதாசிடமே இருந்தது. கட்சியில், ஆட்சியில் பொறுப்புகள் இல்லாதபோதும் ராமதாஸ்தான் அதிகார மையமாக இருந்து வருகிறார். தற்போது அன்புமணி தலைவராக இருக்கும் நிலையில் தந்தை, மகன் இடையே அதிகாரப் போட்டி எழுந்துள்ளது.
சென்னை அண்ணா யுனிவர்சிட்டியில் ஆளுநர் RN.ரவி நேரில் ஆய்வு மேற்கொண்டார். மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை அடுத்து, பாதுகாப்பு தொடர்பாக ஆளுநர் ஆய்வு செய்தார். அண்ணா பல்கலைக்கழக நிர்வாகத்திடம் விளக்கங்களை பெற்ற அவர், மாணவர்களிடமும் கருத்துக்களைக் கேட்டறிந்தார்.
Sorry, no posts matched your criteria.