India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களை 24 மணி நேர ஹாஸ்பிட்டல்களாக விரிவாக்கம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 2024 மார்ச் மாதம் தொடங்கி, தற்போது வரை 12,348 சுகாதார மையங்கள் 24மணி நேர ஹாஸ்பிட்டல்களாக மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது. குக்கிராமங்களுக்கு அத்தியாவசிய மருத்துவ சேவைகள் உடனடியாக கிடைக்கும் வகையில், மத்திய அரசு இந்நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
சுமார் 16 லட்சம் வருடங்களுக்கு முன்பே மனிதன் மொழி வடிவில் பேசத் தொடங்கியதாக பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர் ஸ்டீவன் மிதன் தெரிவித்துள்ளார். ஹோமோ சேபியன்ஸ் மூளையில் அப்போதே பேசுவதற்கான Broca’s area வளர்ச்சிகள் இருந்ததாக அவர் குறிப்பிடுகிறார். செய்கை மொழி இவற்றிற்கு முன்பே வழக்கத்தில் இருந்திருக்கும் எனவும் சுட்டிக்காட்டுகிறார். அப்படி பேச ஆரம்பித்ததும் மனிதன் முதலில் என்ன வார்த்தை சொல்லியிருப்பான்?
மத்திய அமைச்சர் பதவியிலிருந்து விலக நேரிடும் என அமைச்சர் ஜிதன் ராம் மஞ்சி பேசியுள்ளது BJP கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. பிஹாரில் வரவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தனது HAMS கட்சிக்கு 40 தொகுதிகளை ஒதுக்கும்படி அவர் வலியுறுத்தியுள்ளார். 243 தொகுதிகளை கொண்ட பிஹாரில் HAMS கட்சிக்கு தற்போது 4 MLAக்கள் உள்ளனர். அவரது மகன் சந்தோஷ்குமார் சுமன், IT துறை மினிஸ்டராக இருப்பது கவனிக்கத்தக்கது.
கம்பீர் பயிற்சியாளரான பிறகு, இந்திய அணி டெஸ்ட், ஒரு நாள் போட்டிகளில் தொடர் தோல்விகளை சந்திப்பதாக விமர்சனங்கள் இருக்கிறது. ஆனால், எதனால் கம்பீர் பயிற்சியாளராக வந்தார். IPL கோப்பை வெற்றி முக்கிய காரணம். அது T20 தொடர். அவர் வருகைக்கு பிறகு, இந்திய அணி T20 போட்டிகளில் தொடர்ந்து 7 போட்டிகளில் வெற்றியை பதிவு செய்துள்ளது. இதையும் ரசிகர்கள் கொஞ்சம் கவனிக்க வேண்டுமல்லவா!! இதுவும் கம்பீர் Era தான்.
இயக்குநர் சுந்தர்.சி தனது 57ஆவது பிறந்தநாளை கடந்த 21ஆம் தேதி கொண்டாடினார். அக்கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்களை அவரது மனைவி குஷ்பு சோசியல் மீடியாக்களில் பகிர்ந்துள்ளார். அதில், குஷ்புவும் சுந்தர்.சியும் மாறி மாறி முத்த மழை பொழிந்துக் கொண்டனர். சினி உலகின் பெரும்பாலான நடிகர், நடிகைகள் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றனர்.
மகாராஷ்டிரா ரயில் விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ₹1.5 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000மும் வழங்கப்படும் என ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார். ஜல்கான் அருகே சென்றுகொண்டிருந்த EXP ரயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக பரவிய வதந்தியால், கீழே குதித்தவர்களில் 12 பேர் மற்றொரு ரயில் மோதி உயிரிழந்தனர்.
பணம் செலவழிப்பதில் கவனம் இல்லையென்றால், அவசர காலங்களில் பாதிப்புகளைக் சந்திக்க நேரிடலாம். சம்பளம் அல்லது வருமானத்தை 50:30:20 விதிப்படி ஒதுக்குவது நல்லது. 50% பணம் வாடகை, உணவு போன்றவைக்கு. 30% ஆசைகள், சுற்றுப்பயணங்களுக்கு. 20% சேமிப்பு. ஒரு பெஸ்ட் ஃப்ரீ அட்வைஸ், ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று தோன்றினால், ஒரு 24 மணி நேரம் காத்திருங்கள். பிறகு யோசியுங்கள் அது தேவையா என்று, பதில் கிடைக்கும்.
தமிழர் நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்தை விட பழமையானதும் அறிவார்ந்ததும் என தமிழக அரசு கண்டுபிடித்துள்ளது. சிந்து சமவெளி நாகரிகத்தில் வெண்கல காலம் நடைபெற்றபோதே, தமிழர் நாகரிகத்தில் இரும்பு காலம் தொடங்கிவிட்டதாக கார்பன் டேட்டிங் ஆய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இதைதான் முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவுள்ளார்.
டிஜிட்டல் பண பரிவர்த்தனை வாயிலாக அதிக தொகை பெற்ற குறு, சிறு வர்த்தகர்களுக்கு, வணிக வரித்துறை நோட்டீஸ் அனுப்பி வருவதால், TN முழுவதும் உள்ள சிறு, குறு வர்த்தகர்கள் கலக்கமடைந்துள்ளனர். காய்கறி, மளிகைக் கடை என அனைத்திலும் UPI பரிவர்த்தனை பயன்படுத்தப்படுகிறது. இதில் GST பதிவு செய்யாத, ஆண்டுக்கு ₹40 லட்சத்திற்கு மேல் UPI பரிவர்த்தனை நடைபெற்ற வர்த்தகர்களுக்கு வணிக வரித்துறை நோட்டீஸ் அளித்து வருகிறது.
புவனேஷ்வர், பும்ரா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி T20 போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய வீரர் என்ற சாதனையை ஹர்திக் பாண்டியா படைத்துள்ளார். நேற்று ENGக்கு எதிரான முதல் T20 போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹர்திக், மொத்தம் 91 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இந்தப் பட்டியலில் புவனேஷ்வர் 90 விக்கெட்டுகளையும், பும்ரா 89 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.