India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர் அச்சம் கொள்ள வேண்டாம் என ஆளுநர் ரவி கூறியுள்ளார். அங்கு மேற்கொண்ட ஆய்வு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், மாணவர்கள் முன்வைத்துள்ள பாதுகாப்பு குறைபாடுகளை உடனடியாக களைய, பல்கலை., நிர்வாகத்திற்கு உத்தரவிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மாணவர்களின் பாதுகாப்பே பிரதானம் எனவும் அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மதுக்கடைகளை அதிகரிப்பதால் என்ன பயன் என்று மாநில அரசுக்கு சென்னை ஐகோர்ட் மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் அருகிலும் மதுக்கடைகள் இருப்பதாக நீதிமன்றம் தெரிவித்தது. மதுக்குடிப்பதால் உடல் நலனுக்கு கேடு என விளம்பரம் வெளியிடுவதை சுட்டிக்காட்டி, மதுக்கடைகளை அதிகரித்துவிட்டு அந்த விளம்பரத்தை வெளியிடுவதால் என்ன பயன் எனவும் நீதிமன்றம் வினவியது.
விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் அஞ்சலியில், கட்சி பேதமின்றி பங்கேற்ற அனைவருக்கும் பிரேமலதா நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பான பேட்டியில், கேப்டன் ஆசிர்வாதத்தால், தமிழகத்திற்கு இனி நல்லதே நடக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். மேலும், பிரபஞ்சம் இருக்கும்வரை விஜயகாந்த் நினைவிடத்தில் அன்னதானம் தொடரும் எனவும் கூறினார். DMDK தலைவர் விஜயகாந்த், கடந்தாண்டு இதே நாளில் காலமானார்.
விஜய் சேதுபதி அடுத்ததாக ‘சுந்தர பாண்டியன்’ பட இயக்குநர் பிரபாகரன் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள ‘சப்தம்’ படத்தை தயாரித்த 7ஜி ஃபிலிம்ஸ், இந்த படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விஜய் சேதுபதி தனது சினிமா கெரியரின் ஆரம்ப காலத்தில் ‘சுந்தர பாண்டியன்’ படத்தில் வில்லனாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் பெருமிதம் குகேஷ் என PM மோடி பாராட்டியுள்ளார். உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற அவர், PM மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பு குறித்து Xஇல் பதிவிட்டுள்ள மோடி, குகேஷின் தன்னம்பிக்கை ஊக்கமளிப்பதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், யோகா மற்றும் தியானம் எவ்வாறு மனிதர்களை உருமாற்றும் திறன் கொண்டுள்ளது என்பதை பற்றி இருவரும் கலந்தாலோசித்ததாகவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
வெற்றிலைகளை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது உங்களுக்கு தெரியுமா? அதில் உள்ள ஹைட்ராக்ஸி சவிகல், குளோரோஜெனிக் போன்ற வேதிப் பொருள்கள் புற்றுநோய் எதிர்ப்புப் பொருள்களாகச் செயல்படுவது கண்டறியப்பட்டுள்ளது. கம்மாறு வெற்றிலைச் சாறுடன் சீரகம், ஓமம், கிராம்பு ஆகியவற்றை சேர்த்து வெந்நீர் கலந்து கொடுக்க வயிறு உப்புசம், மந்தம், வயிற்றுவலி தீருமென சித்தா டாக்டர்ஸ் பரிந்துரைக்கின்றனர்.
அன்புச் சகோதரர் பத்மபூஷன் விஜயகாந்தின் நினைவுநாளில், அவரது பொதுவாழ்வின் சாதனைகளை நினைவுகூர்வதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்த் திரையுலக வரலாற்றில் தனக்கென தனித்த அடையாளம் கொண்டு கோலோச்சியதாகவும், தனது உயரிய மனிதநேயப் பண்புகளாலும், ஈகைப் பெருங்குணத்தாலும் தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றதாகவும் அவரை இபிஎஸ் நினைவு கூர்ந்துள்ளார். மேலும், பல்வேறு தலைவரும் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தில் அசம்பாவிதம் நிகழாமல் இருக்க சென்னை காவல்துறை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதின் ஒரு நடவடிக்கையாக சென்னையில் மெரினா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை உள்ளிட்ட கடல் பகுதிகளில் டிச. 31 மாலை முதல் ஜன. 1 காலை வரை கடலில் இறங்க, குளிக்க தடை விதித்துள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கவும் காவல்துறை ஆணையிட்டுள்ளது.
யார்-யாருக்கு <<15005578>>பொங்கல் பரிசு<<>> தாெகுப்பு வழங்கப்படும் என்பது குறித்து அரசு அறிவித்துள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் என்று அரசு குறிப்பிட்டுள்ளது. இதனால் 2,20,94,585 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் பயனடையும் எனக் கூறப்பட்டுள்ளது.
DIGITAL SCAM முறை மூலம் அப்பாவிகளிடம் சிலர் மாேசடி செய்கின்றனர். ஏப்ரல், அக்டோபர் மாதங்களில் தமிழகம் உள்ளிட்ட 10 மாநிலங்களை அதிகம் குறிவைத்து மோசடியாளர்கள் கைவரிசை காட்ட முயன்றது தெரிய வந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்17,164 முறையும், அக்டோபர் மாதத்தில் 23,406 முறையும் இத்தகைய முயற்சிகள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உங்களிடம் யாரும் கைவரிசை காட்ட முயன்றனரா? கீழே பதிவிடுங்க.
Sorry, no posts matched your criteria.