India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆட்டோ மீது அரசு பஸ் மோதிய கோர விபத்தில், பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திண்டுக்கல் நத்தம் அருகே நடந்த இந்த விபத்தில், ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. அதில் இருந்த டிரைவர், பள்ளி மாணவ, மாணவியர் உள்பட 11 பேர் அரசு ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். முன்னால் சென்ற ஆட்டோ மீது அரசு பஸ் மோதியதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து போலீஸ் விசாரித்து வருகிறது. SO SAD.

வான்வழி போர் திறன்களை வலுப்படுத்த இந்தியா பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ரஃபேல் போர் விமானங்களை மேலும் பலப்படுத்த, சுமார் 200 கி.மீ. தூரத்தில் இருக்கும் எதிரி விமானங்களை தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ‘Meteor’ ஏவுகணைகளை வாங்க முடிவெடுத்துள்ளது. இதுமட்டுமல்லாமல், தேஜஸ், சுகோய் Su-30 போன்ற இந்திய விமானங்களுக்கு, ‘அஸ்திரா மார்க் 2’ என்ற புதிய ஏவுகணைகளை சேர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

திமுக அரசு பிஹார் மக்களை அவமதிப்பதாக PM மோடி பேசியது சர்ச்சையான நிலையில், பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்கு TN வரும்போது, PM மோடி இதே கருத்தை சொல்லட்டும் என்று திமுக MP கனிமொழி சவால் விடுத்துள்ளார். தமிழ்நாடு தங்களை எப்படி வைத்துள்ளது என்று தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பதை தடுக்க அரசு புதிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, ரொக்கம், கார்டு, UPI மூலம் MRP விலையில் மட்டுமே மது பாட்டில்களை விற்க வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. மேலும், அனைத்து கடைகளிலும் டிஜிட்டல் பரிவர்த்தனை பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE IT.

மேலே உள்ள புகைப்படங்களை பார்த்து ‘பில்லா 3’ ஷூட்டிங் என்று நினைத்துவிட வேண்டாம். ஆங்கில இதழ் ஒன்றுக்காக மாஸ் & கிளாஸ் கலந்த ஸ்டைலிஷ் ஆன லுக்கில் அஜித் போட்டோஷூட் எடுத்துள்ளார். இதற்கு ஃபயர் விடும் அவரது ரசிகர்கள் SM-ல் ‘THALA IS BACK’ என்று டிரெண்ட் செய்து வருகின்றனர். புகைப்படங்களை SWIPE செய்து பார்க்கவும்.

<<18121841>>பள்ளிக்கரணை<<>> சதுப்பு நிலத்தில் கட்டுமான பணிகளை அனுமதிக்கக்கூடாது என அதிமுக மனு தாக்கல் செய்திருந்தது. இதனை விசாரித்த சென்னை HC, SC உத்தரவை பின்பற்றாமல் கட்டுமானத்தை CMDA அனுமதித்தது எப்படி என கேள்வி எழுப்பியதோடு, குடியிருப்பு கட்டும் பணிகள் செய்யக்கூடாது என அறிவுறுத்தியது. இதற்கு, சதுப்பு நிலத்தின் எல்லையை தீர்மானிக்க ஆய்வு நடக்கிறது, 2 வாரங்களில் பணிகள் முடியும் என TN அரசு பதிலளித்துள்ளது.

பிரேசிலின் வடகிழக்கே அமைந்துள்ள மராஜோ தீவில் உள்ள சோர் நகரில், காவல்துறை அதிகாரிகள் ரோந்துப் பணிகளுக்கு, கார்களோ அல்லது குதிரைகளோ பயன்படுத்துவதில்லை. மாறாக எருமைகளில் சவாரி செய்கிறார்கள். வாகனங்கள் ஈரநிலங்கள் வழியாக எளிதாகச் செல்ல முடியாததால், எருமைகளை பயன்படுத்துகின்றனர். ரோந்து பணிக்கு, எருமைகளைப் பயன்படுத்தும் உலகின் ஒரே போலீஸ் படை இவர்கள்தான். “எருமை ரோந்து” பற்றி உங்கள் கருத்து என்ன?

மொன்தா புயல் எதிரொலியாக சென்னை, திருவள்ளூரில் கடந்த 28-ம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை ஈடுசெய்யும் விதமாக நாளை(சனிக்கிழமை) பள்ளிகள் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சென்னையில் பள்ளிகள் இயங்காது என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், திருவள்ளூரில் பள்ளிகள் திறக்கப்படும் என ஏற்கெனவே அறிவிப்பு வெளியானது. அதில் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியாகலாம்.

ஒரு பிரதமர் தேர்தல் ஆதாயத்திற்காக, எப்படி இப்படியான ஒரு அண்ட புளுகை, ஆகாச புளுகை பேசுகிறார் என்று தெரியவில்லை என திருமாவளவன் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் பிஹார் மக்களை அச்சுறுத்துவதாக பேசிய மோடிக்கு கண்டனம் தெரிவித்த அவர், இது ஆபத்தான அணுகுமுறை என்று குறிப்பிட்டுள்ளார். பிஹாரில் வாக்குகளை பெறுவதற்காக பாஜக இந்த அரசியலை செய்வதாக அவர் சாடியுள்ளார்.

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள 2,623 Apprentice பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன ✦வயது: 18- 24 ✦கல்வித்தகுதி: 10-வது, 12-வது, ITI, ஏதாவது ஒரு டிகிரி ✦தேர்ச்சி முறை: Merit List & Certificate Verification ✦சம்பளம்: ₹8,200- ₹12,300 வரை ✦முழு விவரங்களுக்கு <
Sorry, no posts matched your criteria.