India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
CSK அணியில் தொடர்ந்து சொதப்பி வரும் ராகுல் திரிபாதி அணியில் இருந்து கழட்டிவிடப்பட்டார். அவருக்கு பதில் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே அணியில் இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே ஷேக் ரசீத்துக்கு சென்னை அணி கடந்த போட்டியில் வாய்ப்பளித்த நிலையில் தற்போது மற்றொரு இளம் கன்றுக்கு CSK வாய்ப்பு கொடுத்துள்ளது. என்ன செய்ய காத்திருக்கிறார் ஆயுஷ் என பொறுத்திருந்து பார்க்கலாம்…. இந்த முடிவு சரியா? நீங்க சொல்லுங்க..
சிஎஸ்கே இன்று விளையாடுவது 8-வது போட்டியாகும். இதில் மும்பை இந்தியன்ஸை சிஎஸ்கே எதிர்கொள்கிறது. இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் சிஎஸ்கே 2-ல் மட்டும் வென்றுள்ளது. 5 போட்டிகளில் தோல்வியைச் சந்தித்துள்ளது. ஆதலால், அடுத்த சுற்றுக்கு முன்னேற இன்று வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சிஎஸ்கே உள்ளது. ஆதலால் இந்த போட்டி, சிஎஸ்கே-வுக்கு வாழ்வா, சாவா போட்டியாகும். இன்று வெற்றி பெறுமா?
சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. நடப்பு சீசனின் முதல் பாதியில் மும்பை – சென்னை அணிகளுக்கு சிறப்பாக அமையவில்லை. 7 போட்டிகளில் மும்பை 3 வெற்றிகளையும், சென்னை 2 வெற்றிகளையும் மட்டுமே பெற்றுள்ளன. இதனால் இரு அணிகளுக்குமே இது வாழ்வா? சாவா? ஆட்டம். யார் ஜெயிக்க போறா? உங்க கணிப்பு என்ன?
உள்ளாட்சி அமைப்புகள் இதுவரை ரூ.1,618 கோடி மின் கட்டணம் செலுத்தாமல் நிலுவையில் வைத்துள்ளன. இதில் தாமதக் கட்டணம் ரூ.137 கோடி ஆகும். இந்த தாமதக் கட்டணத்தை தள்ளுபடி செய்யக்கோரி மின் வாரியம் மனுத் தாக்கல் செய்திருந்தது. அதை விசாரித்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம், அந்த மனுவை தள்ளுபடி செய்தது. அத்துடன், அரசு அலுவலகங்களில் உடனடியாக ப்ரீபெய்டு மீட்டர்களைப் பொருத்தவும் உத்தரவிட்டுள்ளது.
எளிய இலக்கை நோக்கி விளையாடிய பெங்களூரு அணி 5-வது வெற்றியை பதிவு செய்தது. முதலில் விளையாடிய பஞ்சாப் அணி 157 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணியில் விராட் – படிக்கல் ஜோடி சிறப்பாக விளையாடியது. இருவரும் அரைசதம் அடிக்க, அணி எளிதாக வெற்றி பெற்றது. விராட் கோலி 73 ரன்களுடன் கடைசி வரை களத்தில் இருந்தார்.
RCB-க்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கத்தில் அதிரடி காட்டினாலும் பின் பஞ்சாப் வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியவில்லை. முக்கியமாக சொல்ல வேண்டும் என்றால் கடைசி 4 ஓவரில் வெறும் 22 ரன்களை மட்டுமே புவனேஷ்வர் குமாரும், ஹேஷல்வுட்டும் விட்டுக்கொடுத்தனர். இதில் ஒரு சிக்ஸர் மட்டுமே பஞ்சாப் அணியால் அடுக்க முடிந்தது. துல்லியமாக இருவரும் 17 யார்க்கர்களை வீசியதால் பஞ்சாப் ரன்களை சேர்க்க முடியவில்லை.
RCB அணிக்கு முதல் ஓவரிலேயே விக்கெட் விழுந்தாலும் விராட் – படிக்கல் ஜோடி ஆட்டத்தின் போக்கை மாற்றியது. இருவரும் நிதானமாக ஆடினாலும் தேவைப்படும் நேரங்களில் பவுண்டரிகளையும் விளாசினார். 31 பந்துகளில் தேவ்தத் படிக்கல் அரை சதம் அடித்தார். 12 ஓவர்கள் முடிவில் RCB 108/1 என வலுவான நிலையில் உள்ளது. எளிய இலக்கு என்பதால் RCB வெற்றி வெகு தூரத்தில் இல்லை.
கடந்த ஜன. 1-ம் தேதி 1 கிராம் தங்கம் ₹7,150 ஆகும். அதேபோல், 1 சவரன் தங்கம் ₹57,200 ஆகும். இந்த விலை கடந்த மூன்றரை மாதங்களில் கிடுகிடுவென அதிகரித்து வந்தது. அதன்படி இன்று 1 கிராம் ₹8,945ஆகவும், 1 சவரன் தங்கம் ₹71,560ஆகவும் விற்கப்படுகிறது. அதாவது 1 கிராம் தங்கம் விலை ₹1,795 அதிகரித்துள்ளது. அதேபோல், 1 சவரன் தங்கம் ₹14,360 உயர்ந்துள்ளது. வரும் நாள்களில் மேலும் உயரும் எனக் கூறப்படுகிறது.
தவெக ராமநாதபுரம் மாவட்ட பொறுப்பாளர் முள்ளிமுனை P.P.ராஜா அதிமுகவில் இணைந்தார். தனது ஆதரவாளர்களுடன் அதிமுக மாவட்டச் செயலாளர் எம்.ஏ.முனியசாமி முன்னிலையில் அதிமுகவில் தன்னை இணைத்து கொண்டார். விஜய் கட்சி தொடங்கி இன்னும் தேர்தலையே சந்திக்காத நிலையில், தவெக கட்சியிலிருந்து சிலர் விலகுவதும், கட்சிப் பொறுப்புக்கு பணம் வாங்குவதாக புகார் எழுவதும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை தனியார் நிறுவன மேலாளருக்கு, டேட்டிங் செயலி மூலம் அறிமுகமான பெண், வீடியோ காலில் நிர்வாணமாக வந்துள்ளார். அவரையும் நிர்வாணமாக நிற்கும்படி கூற, அந்நபரும் செய்துள்ளார். இதை ரெக்கார்ட் செய்த பெண், மிரட்டி முதலில் ரூ.20,000 பறித்துள்ளார். பின்னர் ரூ.30,000 கேட்டுள்ளார். மறுக்கவே உறவினர்களுக்கு நிர்வாண வீடியோவை அனுப்பியுள்ளார். இதையடுத்து அவர் அளித்த புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.
Sorry, no posts matched your criteria.