India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விருதுநகர் அரசுப் பள்ளிக்கு வந்த குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர்கள், பாலியல் தொந்தரவுகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு அளித்து, child helpline எண் 1098ஐ பகிர்ந்தனர். இதனையடுத்து, மாணவிகள், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க, உடனே கைது நடவடிக்கை பாய்ந்தது. இதேபோல் மாற்றம் வர, மாநிலம் முழுவதும், அனைத்து பள்ளிகளிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிக்கை எழுந்துள்ளது.
நேஷனல் க்ரஷ் ரஷ்மிகா மந்தனா, சத்ரபதி சிவாஜி மகன் சாம்போஜி மகாராஜின் கதையை தழுவி உருவான Chhaava படத்தில் நடித்துள்ளார். இதன் டிரெய்லர் வெளியீட்டில் பேசியவர், மகாராஜின் மனைவி யேசுபாய் கேரக்டரில் நடித்தது, தன் வாழ்வின் சிறப்புமிக்க தருணம் எனவும், இந்த படத்தோடு ஓய்வு பெறுவது என்றாலும் சந்தோஷத்தோடு ஓய்வு பெறுவேன் என்றார். ரஷ்மிகாவுக்கு காலில் காயம் ஏற்பட்டு அவர் ஓய்வில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க, இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்ததாக, 2024 நவம்பரில் மத்திய அரசு அறிவித்தது. இதனால், பல்லுயிர் பாரம்பரிய தலங்கள் அழிய வாய்ப்புள்ளதாக மக்கள் போராட்டத்தில் இறங்கினர். TN அரசும் கடந்த டிச.9ல் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றியது. நேற்று மதுரை மக்கள் மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து பேசிய நிலையில், இன்று ரத்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நாகையில் விளை நிலத்திலேயே விவசாயி மாரடைப்பால் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கனமழையால் சேதமடைந்த நெற்பயிர்களை பார்த்த விவசாயி தயாநிதிக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு, அங்கேயே உயிரிழந்தார். ‘விவசாயம் இந்தியாவின் முதுகெலும்பு’ என்பது உண்மையானால் விவசாயிகளின் இன்றைய நெருக்கடிகளை அறிந்து, சரியான நடவடிக்கை எடுத்து இழப்பீடு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நமக்கே தெரியாமல், நம் பெயரில் மோசடியாளர்கள் கடன் பெறுவதுண்டு. இதனால் பெரிய சிக்கலில் மாட்ட நேரிடும். இதை தடுக்க, உங்கள் பெயரில் என்னென்ன கடன்கள் உள்ளன என்பதை நீங்களே கண்டறியலாம். TransUnion CIBIL, Equifax, Experian, CRIF High Mark ஆகிய இணையதளங்களில் ஏதாவது ஒன்றுக்கு செல்லுங்கள். பெயர், பான் எண், முகவரி ஆகிய விவரங்களை கொடுத்து புதிய user id தொடங்கினால், உங்களின் அனைத்து கடன் விவரங்களையும் பெறலாம்.
4 வயது பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்ததாக மலையாள நடிகர் ஜெயச்சந்திரனுக்கு எதிராக கேரள போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். சுப்ரீம் கோர்ட்டில் அவரது முன்ஜாமின் மனு விரைவில் விசாரிக்கப்பட உள்ள நிலையில், போலீசார் இதை அறிவித்துள்ளனர். 2024ல் போக்சோ வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், போலீசார் ஆக்ஷன் எடுக்க தாமதப்படுத்தியதாக, குழந்தையின் பெற்றோர் குற்றஞ்சாட்டியிருந்தனர்.
சோஷியல் மீடியா ஆபத்து என பேசப்படும் நிலையில், அதையே பயன்படுத்தி பல உயிர்களை காப்பாற்றியுள்ளனர் உ.பி. போலீசார். ஜன.1 முதல் தற்போது வரை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராமில் தற்கொலை போஸ்ட்களை பதிவிட்ட 656 பேரை உடனடியாக தேடிச் சென்று போலீசார் மீட்டுள்ளனர். META நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின்படி, தற்கொலை போஸ்ட் பதிவிடுவோரின் விவரங்கள் உடனடியாக உ.பி. போலீஸுக்கு கிடைத்துவிடுமாம். TN போலீஸும் இதை பின்பற்றலாமே..
சட்டவிரோத குடியேற்றத்தை எதிர்ப்பதாக மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். USAவில் சட்டவிரோதமாக இந்தியர்கள் குடியிருந்தால், அவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ள அவர், ஒரு நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுவது நல்லதல்ல என்றார். முன்னதாக இந்தியர்கள் 18,000 பேர் USAவில் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாக தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.
திருப்பரங்குன்றம் மலையை அபகரிக்கும் முயற்சியை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். திருப்பரங்குன்றம் மலை, முருகனின் மலை என்பதில் யாருக்கும் எந்த சந்தேகமும் தேவையில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், இந்துக்களை ஏமாற்றிவிடலாம் என நினைத்தால், முருக பக்தர்கள் திமுக அரசுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள் என்றும் எச்சரித்துள்ளார்.
பசுவின் கோமியம் நல்லது எனக் கூறிய சென்னை ஐஐடி இயக்குநர் காமக்கோடிக்கு ஆதரவாக ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்புவும் கருத்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், இதனை பிரபல கல்லீரல் டாக்டரான சிரியாக் அபி பிலிப்ஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். ஏய்.. பூமர் அங்கிள்.. எத்தனை நாட்களுக்குத்தான் உங்களை ஃபாலோ செய்பவர்களை தவறாக வழிநடத்தி, உங்களை நீங்களே முட்டாளாக்கி கொள்வீர்கள்? என தனது பதிவில் அவர் சாடியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.