news

News December 30, 2024

Monday எப்படி வாரத்தின் முதல் நாளானது?

image

மக்களிடம் பொதுவான வழக்கங்கள் இல்லாத போது, மத வழிபாடுகளின் அடிப்படையில் விடுமுறை தினங்கள் இருந்தது. ஞாயிற்றுகிழமை வார முதல் நாளாக இருந்தது. ஆனால், 2 நாள் விடுமுறையாக சனி, ஞாயிற்றை 1926ல் ஹாரிசன் போர்ட் கொண்டு வந்த பிறகு, அது பெரிய புரட்சியை ஏற்படுத்தியது. அதன் பிறகே, வாரம் என்பது திங்கள் – வெள்ளி என மாற, 1988ல் தரப்படுத்தலுக்கான சர்வதேச அமைப்பு (ISO) இதனை அதிகாரபூர்வமாக உலகெங்கும் அமல்படுத்தியது.

News December 30, 2024

பள்ளிகளுக்கு தேர்வுத்துறை உத்தரவு

image

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் பெயர்ப் பட்டியலில் ஜன. 2ம் தேதிக்குள் திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டுமென தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இத்தேர்வை எழுதவுள்ள மாணவர்களின் தேர்வெண்ணுடன் கூடிய பெயர்ப்பட்டியல் டிச.24ம் தேதி வெளியிடப்பட்டது. இதில், விடுப்பட்ட மாணவர்களை சேர்க்கவும், மாற்றுச் சான்றிதழ் பெற்ற மாணவர்களை நீக்கவும் பள்ளிகளுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

News December 30, 2024

அனுமன் ஜெயந்தியில் இதை மட்டும் செய்தால் போதும்…

image

அனுமன் ஜெயந்தி தினமான இன்று விரதம் இருந்து வழிபட்டால், அவரை அருள் கிடைக்கும். வெற்றிலை மாலை, வடை மாலை, வெண்ணெய் சாற்றி வழிபடுவதால் வழிபடலாம். இவை அனைத்தையும் விட சக்திவாய்ந்தது ராம நாமத்தை உச்சரிப்பது. 13 முடிச்சுகள் போட்ட கயிறு ஒன்றை கையில் வைத்து “ஓம் நமோ வாயுநந்தனாய ஓம்” என்ற மந்திரத்தை 9, 11, 27 முறை சொல்லி, கழுத்தில் அணிந்து கொண்டால் அனுமன் எப்போதும் துணையாக நிற்பார் என்பது நம்பிக்கை.

News December 30, 2024

தங்கைகளுக்கு அண்ணனின் கடிதம்

image

தமிழக பெண்களுக்கு “அன்புத் தங்கைகளே” என்று குறிப்பிட்டு உருக்கமான கடிதத்தை எழுதியிருக்கிறார் தவெக தலைவர் விஜய். அதில், “அண்ணனாகவும், அரணாகவும் நான் உங்களுடன் உறுதியாக நிற்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். தாய்மார்கள், பெண் குழந்தைகள், தங்கைகள் என அனைவரும் தினந்தோறும் பல கொடுமைகளை அனுபவிப்பதாகவும் ஆட்சியாளர்கள் அதனை கண்டுகொள்வதில்லை என்றும் கடிதத்தில் குற்றம்சாட்டியிருக்கிறார்.

News December 30, 2024

கல்வி ஞானத்தை அருளும் பிரம்மபுரீஸ்வரர்

image

தேவாரம் பாடல் பெற்ற 14ஆவது காவிரி வடகரை தலமாக சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோயில் போற்றப்படுகிறது. பிரம்மனுக்கு சிருஷ்டியை படைப்பதற்கான ஆற்றலை ஈசன் வழங்கிய இந்த திருத்தலம் 1,800 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என்கிறது தலப்புராணம். சட்டைநாதர், பிரம்மபுரீஸ்வரர், தோணியப்பர் என 3 நிலைகளில் அருள் பாலித்து வரும் இறைவனுக்கு பவளமல்லி மலர் சூட்டி, நெய் ஞானம் கைகூடும் என்பது ஐதீகம்.

News December 30, 2024

பெண்களுக்கு ஆதரவாக விஜய் கைப்பட கடிதம்

image

அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார். அதில், “யாரிடம் நாம் பாதுகாப்பு கேட்பது? ஆட்சியாளர்களை கேட்டு பயனில்லை. எல்லா சூழலிலும் நான் உங்களுடன் நிற்பேன். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். இதை நாம் இணைந்தே சாத்தியப்படுத்துவோம்” என்று உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.

News December 30, 2024

இன்று விண்ணில் பாய்கிறது PSLV

image

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று இரவு 9.58 மணிக்கு PSLV C-60 ராக்கெட் விண்ணில் ஏவப்படவுள்ளது. இதற்கான 25 மணி நேர கவுன்ட்-டவுன் நேற்றிரவு 8.58 மணிக்கு தொடங்கியது. இந்த ராக்கெட்டின் மூலம் Spadex A & B என்று தலா 200 கிலோ கொண்ட இரண்டு சிறிய செயற்கைக் கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்படவுள்ளன. இதுவரை 4 நாடுகள் மட்டுமே வைத்திருக்கும் இந்த Space Docking சாதனையில் இன்று முதல் இந்தியாவும் தடம் பதிக்கவுள்ளது.

News December 30, 2024

மாநிலம் முழுவதும் 1 லட்சம் போலீசார் குவிப்பு

image

புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். சென்னை மெரினா கடற்கரையில் தற்காலிக தடுப்புகள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் இரண்டு நாள்கள் கடலில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், கோயில்கள், தேவாலயங்கள் ஆகிய பகுதிகளில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடவுள்ளனர்.

News December 30, 2024

அண்ணா பல்கலை. வழக்கை CBIயிடம் கொடுங்க: எல்.முருகன்

image

அண்ணா பல்கலை. மாணவி வழக்கை தமிழக அரசால் விசாரிக்க முடியவில்லை என்றால் சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். இவ்விவகாரம் வன்மையாக கண்டிக்கத்தக்கது என்று கூறிய அவர், மாணவிக்கு நீதி கிடைக்கும் வரை பாஜக போராடும் என்றும் உறுதி அளித்துள்ளார். மேலும், குற்றவாளிகள் யாராக இருந்தாலும், கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

News December 30, 2024

BGT 4வது டெஸ்ட்: ஓப்பனிங்கே 2 விக்கெட் காலி

image

340 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு பெரிய ஏமாற்றமாக கேப்டன் ரோஹித் சர்மா 9 (40) ரன்கள் மட்டுமே எடுத்து, பட் கம்மின்ஸ் பந்துவீச்சில் மார்ஸிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாக, அடுத்து களமிறங்கிய கே.எல்.ராகுல் 0 (5) கம்மின்ஸ் பந்துவீச்சில் அவுட்டாகினார். களத்தில் ஜெய்ஸ்வால் 12 (57) ரன்களுடன் இருக்கிறார். இந்தியா 25/2 ரன்களுடன் தடுமாறி வருகிறது. வெற்றிக்கு இன்னும் 315 ரன்கள் தேவை

error: Content is protected !!