India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சிறுவயதில் முருங்கைக்காயின் ரகசியத்தை தனது பாட்டி மூலம் அறிந்து கொண்டதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார். அப்போதே, இதை எதிர்காலத்தில் சினிமாவில் பயன்படுத்த வேண்டும் என எண்ணி முந்தானை முடிச்சு படத்தில் யூஸ் செய்ததாகவும், அது உலக லெவலில் தன்னை ஃபேமஸ் ஆக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த ரகசியத்தை தனக்கு சொல்லிக் கொடுத்த பாட்டிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசுப் பஸ்களில் போலீஸ் இலவச பயணம் செய்வது தொடர்பாக டிரைவர்கள், கண்டக்டர்களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது. பாேலீஸார் பணிபுரியும் காவல் மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் மாநகர, நகர பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி தரப்பட்டுள்ளது. இதற்கான அட்டையை காண்பிக்கும் போலீஸாரை அனுமதிக்க வேண்டும். அட்டையை காட்டவில்லையேல் அபராதம் விதிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
சமீபத்திய விபத்துகளால், விமான போக்குவரத்தின் பாதுகாப்பு பற்றிய கவலைகள் எழுந்துள்ளன. இந்த சூழலில் அமெரிக்காவின் ‘Aviation Disaster Law’ மற்றும் ‘Popular Mechanics’ இதழின் ஆய்வு தரவுகள் முக்கியத்துவம் பெறுகின்றன. அதன்படி, முன் சீட்களில் அமர்பவர்களின் இறப்பு விகிதம் 38% ஆகவும், நடுத்தர சீட்களின் இறப்பு விகிதம் 39% ஆகவும் உள்ளது. ஆனால், பின் சீட்களில் அது 32% ஆக குறைந்து காணப்படுகிறது.
BSFஇல் 275 கான்ஸ்டபிள் பணியிடங்களுக்கு விண்ணப்பம் வரவேற்கப்பட்டு இருந்தன. இதற்கு கல்வித் தகுதியாக 10ஆம் வகுப்புத் தேர்ச்சி அறிவிக்கப்பட்டு இருந்தது. விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் கூறப்பட்டு இருந்தது. வயது வரம்பாக 18-23 வரை நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இதற்கான விண்ணப்பப்பதிவு செய்ய இன்றே கடைசி நாளாகும். வேலையில் சேர விரும்புவோர் www.rcttd.bsf.gov.in இல் விண்ணப்பிக்கலாம்.
2024ஆம் ஆண்டுக்கான ICC-யின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கான பரிந்துரை பட்டியலில், பும்ரா (71 விக்கெட்கள்) இடம்பிடித்துள்ளார். இவரைச் சேர்த்து, இந்த பட்டியலில் மொத்தம் 4 பேர் உள்ளனர். ENGன் ஜோ ரூட் (1556 ரன்கள்), SLன் கமிண்டு மெண்டிஸ் (1049 ரன்கள்), ENGன் ஹேரி ப்ரூக் (1100 ரன்கள்) ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். உங்களுக்கு பிடித்தவருக்கு வாக்களிக்க இங்கே <
காமெடியன் டூ ஹீரோவாக மாறி கலக்கி வரும் நடிகர் சூரி, தனது சொந்த ஊரான மதுரையில் அம்மன் ஹோட்டலை நடத்தி வருகிறார். இங்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் உணவருந்தி வரும் நிலையில், அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையில் சூரியன் ஹோட்டல் அமைந்துள்ளதாக மதுரை ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, அந்த ஹோட்டலுக்கு சீல் வைக்கக் கோரியும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தவெகவினர் கைது செய்யப்பட்டதற்கு விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது கடித நகல்களை பொதுமக்களிடம் த.வெ.க. நிர்வாகிகள் மாநிலம் முழுவதும் வழங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார். ஆனால் சென்னையில் ஜனநாயக வழியில் விநியோகம் செய்த கட்சியினரை கைது செய்தது கண்டனத்துக்கு உரியது என குறிப்பிட்டுள்ளார். இது போன்ற ஜனநாயக விரோத நடவடிக்கையை மக்கள் வேடிக்கை பார்க்க மாட்டார்கள் எனவும் கூறியுள்ளார்.
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை தொடர்பாக விஜய் தனது கைப்பட எழுதிய கடிதத்தை, பொதுமக்களிடம் விநியோகித்ததாக புஸ்ஸி ஆனந்த் உட்பட 300-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர், 2 மணிநேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்ட நிலையில், அவர்களுடன் விஜய் போனில் பேசினார். அப்போது “தைரியமாக இருங்கள்.. நான் எப்போதும் உங்களுடன்தான் இருக்கிறேன்” என விஜய் பேசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சினிமாவிற்கு மட்டும் வரவில்லை என்றால் தான் கொல்லப்பட்டிருப்பேன் அல்லது இயற்கை மரணமடைந்திருப்பேன் என இயக்குநர் பாலா அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார். இளம் வயதில் போதைப்பழக்கத்தின் EXTREME நிலைக்குச் சென்றதாகவும், இன்னும் 1 வருடம் தான் தாங்குவான் என குடும்பத்தினர் நினைத்ததாகவும் அவர் நினைகூர்ந்துள்ளார். மேலும், சினிமா ஆர்வம் தான் தன் உயிரை காப்பாற்றியதாக தெரிவித்துள்ளார்.
அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், போலீஸை குற்றம் சொல்லமாட்டேன் என அவரது உறவினரும், ஆந்திரா துணை முதல்வருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு தான் போலீசாருக்கு முக்கியம் எனவும், சட்டம் என்பது அனைவருக்கும் ஒன்றுதான் எனவும் கூறியுள்ளார். மேலும், கூட்டநெரிசலில் உயிரிழந்த ரேவதியின் வீட்டிற்கு, அல்லு அர்ஜுன் சார்பாக யாராவது சென்றிருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.