news

News December 30, 2024

பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பள உயர்வு!

image

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான அரசு மழலையர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு நிரந்தர ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள் என 300-க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில், இப்பள்ளிகளில் பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்கள் மாத சம்பளமாக ரூ. 11,970 பெற்று வந்த நிலையில், அது தற்போது ரூ.14,150ஆக உயர்த்தப்பட்டுள்ளது. தற்காலிக ஊழியர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளது.

News December 30, 2024

இஸ்ரேலுக்கு புதிய பிரதமர்

image

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தீடீர் உடல்நலக் குறைவால் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நீதித்துறை அமைச்சராக உள்ள யாரிவ் லெவின், தற்காலிக பிரதமராக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெதன்யாகுவிற்கு சிறுநீர் பாதையில் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், வெற்றிகரமாக ஆப்ரேஷன் செய்யப்பட்டுள்ளது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் ஹாஸ்பிடல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

News December 30, 2024

ராகுலை ரோஸ்ட் செய்த பாஜக.. களத்தில் இறங்கிய காங்.

image

மன்மோகன் சிங்கிற்கு துக்கம் அனுசரிக்கும் வேளையில், ராகுல் காந்தி புத்தாண்டை கொண்டாட வியட்நாம் செல்ல உள்ளதாக பாஜக விமர்சித்துள்ளது. சீக்கியர்களுக்கு எதிரான கட்சி காங். எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. இதற்கு எதிர்வினை ஆற்றியுள்ள காங்., யமுனை நதிக்கரையில் மன்மோகன் சிங்கை தகனம் செய்ய மறுத்துவிட்டு இப்போது அக்கறை உள்ளது போல் பேசுவதாகவும், திசைதிருப்பும் அரசியலை பாஜக எப்போது கைவிடும் எனவும் வினவியுள்ளது.

News December 30, 2024

வருமான வரி கணக்குத் தாக்கல்: நாளையே கடைசி நாள்

image

2024-25 ஆண்டுக்கான வருமான வரி கணக்குத் தாக்கல் அளிக்கப்பட்ட அவகாசம் ஜூலை 31ஆம் தேதி வரை வழங்கப்பட்டு இருந்தது. அதன்பிறகு ரூ.1,000 முதல் ரூ.5,000 வரை அபராதத்துடன் வருமான வரி கணக்குத் தாக்கல் செய்ய டிசம்பர் 31 வரை அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த அவகாசம் நாளையுடன் நிறைவடையவுள்ளது. நாளைக்குள் கணக்குத் தாக்கல் செய்யவில்லையெனில், 20% வரை அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். SHARE IT.

News December 30, 2024

ஜோசப் விஜய் ஆளுநரை சந்தித்தார்.. கவனிச்சீங்களா

image

அண்ணா பல்கலை. பாலியல் விவகாரம் தொடர்பாக ஆளுநர் ரவியை விஜய் சந்தித்து புகார் மனு அளித்திருந்தார். இது விஷயமல்ல. ஆனால், இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், ஜோசப் விஜய் ஆளுநரை சந்தித்ததாகவும், சட்டம்-ஒழுங்கு விஷயத்தில் தலையிடுமாறு ஜோசப் விஜய் கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் விஜய்யை ஜோசப் விஜய் என்றே ஆளுநர் மாளிகை குறிப்பிட்டுள்ளது.

News December 30, 2024

மன்சூர் அலிகான் மகனுக்கு ஜாமீன் இல்லை!

image

கஞ்சா, மெத்தமட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தியதாக நடிகர் மன்சூர் அலிகானின் மகன் அலிகான் துக்ளக் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தனக்கு ஜாமீன் வழங்கக் கோரி சென்னை போதைப்பொருள் சிறப்பு நீதிமன்றத்தில் அவர் மனு தாக்கல் செய்தார். இதுதொடர்பான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில், அலிகான் துக்ளக்கின் ஜாமீன் மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

News December 30, 2024

GOOD NEWS: எய்ட்ஸ்க்கு தடுப்பூசி வந்தாச்சு..!

image

AIDSக்கான தடுப்பூசி ஒரு வழியாக கண்டுபிடிக்கப்பட்டுவிட்டது. Gilead Sciences தயாரித்த Lenacapavir மருந்தை, USA மருத்துவ நிர்வாகம் அங்கீகரித்துள்ளது. தென் ஆப்பிரிக்கா, தாய்லாந்து நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில், நல்ல ரிசல்ட் கிடைத்துள்ளதால், இதற்கான டிமாண்ட் அதிகரித்துள்ளது. ஆண்டுக்கு இருமுறை எடுக்க வேண்டிய இந்த தடுப்பூசியின் விலை, சாதாரண மக்களுக்கு கட்டுப்படியாகாது என்ற கவலையும் எழுந்துள்ளது.

News December 30, 2024

AIDSஆல் பாதிக்கப்பட்டவர்கள் இத்தனை பேரா?

image

எய்ட்ஸ் முதன்முதலாக கடந்த 1983ல் அமெரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கிருந்து உலகநாடுகளுக்கு பரவி, மிகப்பெரும் அச்சுறுத்தலாக மாறியது. இந்த நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படாததால், உலகம் முழுவதும் இதுவரை 4.20 கோடி பேர் உயிரிழந்துள்ளனர். தரவுகளின் படி, 2023ல் 3.99 கோடி பேர் AIDSல் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நோய்க்கு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.

News December 30, 2024

1ஆம் தேதி முதல் இந்த வங்கிக் கணக்குகள் செயல்படாது

image

2025ஆம் ஆண்டு ஜன 1 முதல் 3 வகை வங்கிக் கணக்குகள் செயல்படாது. அவை எந்தெந்த கணக்குகள் என்பதைப் பார்க்கலாம். 1) 2 ஆண்டுகள் (அ) கூடுதலான நாள்கள் பரிவர்த்தனை இல்லாத வங்கிக் கணக்குகள் செயல்படாது. 2) 12 மாதத்திற்கு மேல் பயனில் இல்லாத கணக்குகள் செயல்படாது 3) குறிப்பிட்ட காலத்திற்கும் மேல் கணக்கில் பணமில்லாத வங்கிக் கணக்குகளும் செயல்படாது. SHARE IT.

News December 30, 2024

முருங்கைக்காய் ரகசியத்தை உடைத்த பாக்யராஜ்

image

சிறுவயதில் முருங்கைக்காயின் ரகசியத்தை தனது பாட்டி மூலம் அறிந்து கொண்டதாக பாக்யராஜ் தெரிவித்துள்ளார். அப்போதே, இதை எதிர்காலத்தில் சினிமாவில் பயன்படுத்த வேண்டும் என எண்ணி முந்தானை முடிச்சு படத்தில் யூஸ் செய்ததாகவும், அது உலக லெவலில் தன்னை ஃபேமஸ் ஆக்கியதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், இந்த ரகசியத்தை தனக்கு சொல்லிக் கொடுத்த பாட்டிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!