India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சுகுமார்-அல்லு அர்ஜுன் கூட்டணியில் டிச.5ஆம் தேதி வெளியான ‘புஷ்பா 2 தி ரூல்’ பெயருக்கு ஏற்ப இந்திய சினிமாவை ரூல் செய்து வருகிறது. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என வெளியான 25 நாட்களில் உலக அளவில் ரூ.1,760 கோடி வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதன்மூலம் இந்திய பாக்ஸ் ஆபீஸ் ஹீரோ என அல்லு அர்ஜுன் தன்னை நிரூபித்துள்ளார்.
சீன அரசின் நிதியுதவி பெற்ற ATP ஹேக்கர்கள் அமெரிக்க கருவூலத் துறையின் அமைப்புக்குள் நுழைந்து சைபர் தாக்குதலை நடத்தி இருப்பது உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிச. 2 அன்று இந்த தாக்குதலின்போது, சில ரகசிய ஆவணங்களை அவர்கள் திருடியுள்ளதாக CIA கண்டறிந்துள்ளது. அமெரிக்க ஏஜென்சி இந்த மீறலை ‘பெரிய சம்பவம்’ நடந்தேறியுள்ளதென விவரித்து அந்நாட்டின் சட்ட அமலாக்கத்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது.
தமிழகத்தில் ஸ்மார்ட் மின் மீட்டர் கொள்முதலுக்கான டெண்டர் ரத்து செய்யப்பட்டுள்ளது. குறைந்த தொகையை அதானி நிறுவனம் குறிப்பிட்டிருந்த போதிலும், அந்நிறுவனத்தின் ஊழல் புகார் சர்ச்சை காரணமாக டெண்டர் வழங்கப்படவில்லை. விவசாய இணைப்புகள் தவிர மற்ற மின் இணைப்புகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படவுள்ளன. இத்திட்டத்தை அதானி நிறுவனத்திற்கு வழங்கக் கூடாது என அன்புமணி உள்ளிட்டோர் TN அரசிடம் வலியுறுத்தி இருந்தனர்.
இந்திய ரசிகர்களுக்கு இந்தாண்டு தொடக்கத்தில் இந்திய அணி மீது இருந்த நம்பிக்கை இப்போது உள்ளதா என்றால் கேள்வி குறிதான். இந்தாண்டு இலங்கை அணிக்கு எதிரான ODI தொடரை 2-0 என 27 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா இழந்தது. மொத்தமாகவே இந்தாண்டும் வெறும் 3 ODIயில் மட்டுமே ஆடிய இந்திய அணி 45 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு ODI போட்டியில் கூட வெல்லவில்லை என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
மனிதர்களின் துயர்களை நீக்கி அவர்களுக்கு அன்னையின் பரிபூரண அருளினை அளிக்கும் ஆற்றல் ஸ்ரீசக்கரத்திற்கு உண்டு என சாக்த சாஸ்திரம் கூறுகிறது. மகாமேருவின் உருவைக் கொண்ட திரிசக்கரம் ஸ்தாபிக்கப்பட்ட புதுக்கோட்டை புவனேஸ்வரி கோயிலுக்கு பிரதமையன்று விரதமிருந்து சென்று, குங்குமம் சாற்றி, நெய் தீபமேற்றி, நவா ஆவரண மந்திரத்தை 11 முறை சொல்லி வணங்கினால் நினைத்த மங்கல காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம்.
* சமையல் கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றம்
* UPI 123 pay மூலம் இனி ₹10,000 வரை பரிமாற்றம் செய்யலாம்.
* விவசாயிகள் இனி ₹2 லட்சம் வரை unsecured லோன் பெற்றுக் கொள்ளலாம்
* NSE பங்குச்சந்தை தனது expiry தேதிகளில் மாற்றம் செய்துள்ளது
* PF பணத்தை ஏடிஎம் மையங்களில் எடுக்கும் வசதி 2025 முதல் நடைமுறைக்கு வரவுள்ளது.
* வருமான வரியில் பல மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளன.
தனிநபர் வருமான வரி விகிதத்தை குறைக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய நிறுவனங்கள் வலியுறுத்தியுள்ளன. அப்போதுதான், நடுத்தர வர்க்கத்தினரின் கைகளில் செலவழிப்புக்கான அதிக வருமானம் கிடைக்கும் என்று கேட்டுக்கொண்டுள்ளன. வரும் பிப்ரவரி மாதம் 2025-26ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்பாக பல்வேறு தொழில்துறை பிரதிநிதிகள் அவரை சந்தித்து வருகின்றனர்.
2025ஆம் ஆண்டு 23 நாள்களை பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. ஜன 1 – புத்தாண்டு, ஜன 14 – தைப் பொங்கல், ஜன 15 – திருவள்ளுவர் நாள், ஜன 16 – உழவர் திருநாள், ஜன 26 – குடியரசு தினம், பிப் 11 – தைப்பூசம், மார்ச் 30 – தெலுங்கு வருடப்பிறப்பு, மார்ச் 31 – ரம்ஜான், ஏப்ரல் 1 – கணக்கு முடிப்பு, ஏப்ரல் 10 – மகாவீர் ஜெயந்தி, ஏப்ரல் 14 – தமிழ் புத்தாண்டு, ஏப்ரல் 18 – புனித வெள்ளி
மே 1 – மே தினம், ஜூன் 7 – பக்ரீத், ஜூலை 6 – முஹர்ரம், ஆகஸ்ட் 15 – சுதந்திர தினம், ஆகஸ்ட் 16 – கிருஷ்ண ஜெயந்தி, ஆகஸ்ட் 27 – விநாயகர் சதுர்த்தி, செப் 5 – மிலாதுன் நபி, அக் 1 – ஆயுத பூஜை, அக் 2 – விஜயதசமி, அக் 20 – தீபாவளி, டிச 25 – கிறிஸ்துமஸ் ஆகிய நாள்களில் அரசு பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
TVK தலைவர் விஜய் நேற்று ஆளுநரை சந்தித்து மனு அளித்தார். அதுகுறித்த செய்தி வெளியீட்டில் ஆளுநர் மாளிகை அவரை ‘ஜோசப் விஜய்’ என்று குறிப்பிட்டுள்ளது. அவர் தனது பெயரை விஜய் என்றே பயன்படுத்தும் நிலையில் மத சாயம் பூசுவதற்காக சிலர் ‘ஜோசப்’ விஜய் என்று அழுத்தமாக கூறுவதுண்டு. ஆனால், ஆளுநர் மாளிகை தெரிந்தோ தெரியாமலோ ஜோசப் விஜய் என்று பயன்படுத்தியிருக்கும் விவகாரம் சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகியிருக்கிறது
Sorry, no posts matched your criteria.