news

News January 25, 2025

வாயில் TAPE ஒட்டினால் தூக்கம் ஜம்முனு வருமாமே..!

image

பணம் இல்லாமல் தவிப்பவர்களை விட, தூக்கம் இல்லாமல் தவிப்பவர்களே இன்று ஏராளம். அவ்வாறு தூக்கம் சரிவர இல்லாதவர்கள், வாயில் டேப்பால் ஒட்டிக் கொண்டு படுத்தால் தூக்கம் கண்ணை சொக்கும் என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. வாயை திறந்து தூங்கும் போது, மூச்சு விடுவதில் ஏற்படும் மாற்றமே தூக்கத்தை கெடுக்கிறதாம். எனவே, இந்த டிப்ஸ் அவர்களுக்கு கைகொடுக்கும். எனினும், டாக்டர்களின் ஆலோசனை ரொம்ப முக்கியம்.

News January 25, 2025

பவதாரணியின் ஒரே கடைசி ஆசை இதுதான்!

image

இளையராஜாவின் மகள் பவதாரணி புற்றுநோயால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் உயிரிழந்தார். இந்நிலையில், அந்த நேரத்தில் நடந்த நெகிழ்ச்சியான சம்பவம் குறித்து அவரது கணவர் சபரிராஜ் கூறியுள்ளார். பவதாரணி உடல்நிலை மோசமடையவே, தந்தை இளையராஜாவை சந்திக்க அவர் ஆசைப்பட்டார். அதை அவரிடம் சொல்லவில்லை. ஆனால், ஒரு கச்சேரிக்காக இலங்கை வந்த இளையராஜா, பவதாரணியை சந்தித்தார். அதுவே அவரது கடைசி ஆசையாக மாறிப்போனது என அவர் கூறினார்.

News January 25, 2025

செவ்வாய் கிரகத்தில் இப்படி ஒரு பிரச்சனையா?

image

செவ்வாய் கோளில் ஆய்வில் ஈடுபட்டுள்ள ரோவர்ஸ் சந்திக்கிற பிரச்னை டயர் பஞ்சர் தானாம். செவ்வாயின் கரடுமுரடான பரப்பு ரோவர்ஸின் சக்கரங்களை பழுதாக்குவதால் ஆய்வு முழுவீச்சில் செய்ய முடிவதில்லை. இதற்கு தீர்வாக என்ன நடந்தாலும் தனது வடிவத்துக்கு திரும்பிவிடும், அலுமினிய Shape Memory Tyres உருவாக்கத்தில் மும்முரம் காட்டி வருகிறது நாசா. இந்த டயர்களை நிலவிலும் பயன்படுத்தும் ஐடியா இருக்கிறதாம்.

News January 25, 2025

ராசி பலன்கள் (25-01-2025)

image

➤மேஷம் – நற்செய்தி ➤ரிஷபம் – பரிசு ➤மிதுனம் – ஆர்வம் ➤கடகம் – மேன்மை ➤சிம்மம் – இன்பம் ➤கன்னி – உழைப்பு ➤துலாம் – தனம் ➤விருச்சிகம் – வாழ்வு ➤தனுசு – பாசம் ➤மகரம் – பக்தி ➤கும்பம் – செலவு ➤மீனம் – மறதி.

News January 24, 2025

தலையணையின் கீழ் இந்த 5 பொருட்களை வைத்தால்..

image

தூங்கும் போது தலையணையின் கீழ் இந்த 5 பொருட்களை வைத்திருந்தால் அதிர்ஷ்டமும், பாசிட்டிவ் எனர்ஜியும் தேடி வரும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. 1) இரும்பு: பயத்தையும், கெட்ட கனவுகளையும் நெருங்க விடாது. 2) பூண்டு: நேர்மறை சிந்தனைகளை கொடுக்கும். 3) சதகுப்பி விதைகள்: ராகு தோஷத்தை போக்கும். 4) பச்சை ஏலக்காய்: ஆழ்ந்த உறக்கத்தை தரும். 5) கல் உப்புடன் ஒரு ரூபாய் நாணயம்: உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

News January 24, 2025

கிரிப்டோகரன்சி: Jio Coin மதிப்பு எவ்வளவு தெரியுமா?

image

அம்பானியின் Relaince- Jio நிறுவனம், Polygon Labs உடன் இணைந்து பணியாற்றும் அறிவிப்பு வெளியானது முதல், இணையத்தில் Jio Coin பெயர் அடிபட தொடங்கியது. Bitcoin போலவே ஆன்லைனில் இது அறிமுகம் ஆகலாம், இதன் தொடக்க மதிப்பு ரூ.43ஆக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. Blockchain, Web3-ஐ இந்தியாவுக்கு கொண்டுவர Jio திட்டமிடுவதாகவும் CoinDCX தளம் குறிப்பிட்டுள்ளது. Jio, இதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

News January 24, 2025

தளபதி 69 படத்தின் டைட்டில் இதுவா?

image

விஜய்யின் கடைசி படமான தளபதி 69இன் டைட்டில் என்னவாக இருக்கும் என சோஷியல் மீடியாவில் டாக் போகிறது. அவரது அடுத்தகட்ட அரசியல் பாதைக்கு அடித்தளமாக இருக்க வேண்டும் என்கிற நோக்கில், விஜய்யின் முதல் படத்தலைப்பான ‘நாளைய தீர்ப்பு’ என்பதே கடைசி படத்துக்கும் வைக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹெச்.வினோத் இயக்கும் இந்த படம் பாலய்யா படத்தின் தழுவல் எனவும் கூறப்படுகிறது. டைட்டில் எப்படி இருக்கு?

News January 24, 2025

சிம் கார்டுகள் இனி காலாவதியாகாது.. குட் நியூஸ்

image

சிம் கார்டு காலாவதியாவதை தடுக்க 90 நாட்களுக்கு ஒரு முறை ஏதேனும் ஒரு பேக்கின் கீழ் ரீசார்ஜ் செய்வது அவசியம். தவறினால் அந்த நம்பரை மறந்துவிட வேண்டியதுதான். 2 சிம்கார்டுகளை பயன்படுத்துவோர் சந்திக்கும் முக்கிய பிரச்னையாகவே இது இருந்தது. இந்நிலையில், இந்த விதியை மாற்றி, ஈஸியான முறையை ட்ராய் கொண்டு வந்துள்ளது. அதன்படி, மாதம் ஒரு முறை ரூ.20-க்கு ரீசார்ஜ் செய்தாலே சிம்கார்டு காலாவதி ஆகாதாம். SHARE IT.

News January 24, 2025

ஸ்டாலின் மாடல் காவல்துறை மீது நம்பிக்கை இழப்பு: டி.ஜெ.,

image

வேங்கைவயல் வழக்கில் ஸ்டாலின் மாடல் காவல்துறை மீது கூட்டணி கட்சியினரே நம்பிக்கை இழந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மக்கள் பிரச்னையை உணர்ந்து திமுக கூட்டணி கட்சிகளான விசிக, CPIM குரல் கொடுத்ததை வரவேற்கிறேன். அதுதான் அதிமுகவின் நிலைப்பாடும். உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய இந்த வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

News January 24, 2025

வீராங்கனைகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்க: இபிஎஸ்

image

பஞ்சாபில் தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனைகள் மீது தாக்குதல் நிகழ்ந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்று இபிஎஸ் வேதனை தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளான நமது வீராங்கனைகளின் பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்திய அவர், விளையாட்டில் சமத்துவம் இருக்க வேண்டுமே தவிர சண்டைகள் இருக்கக்கூடாது என்று தெரிவித்துள்ளார். முன்னதாக நமது பிள்ளைகளின் கண்ணீர் விடும் வீடியோ வைரலானது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!