India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
*உங்கள் வீட்டிற்கான பட்ஜெட்டை உருவாக்குங்கள். இதில் அத்தியாவசிய தேவைகளை அடக்கவும் *சிறிய சிறிய செலவுகள் என்றாலும் அதை கணக்கிடுங்கள் *உணவில் சிக்கனம் வேண்டாம், ஆனால் பட்ஜெட் கவனத்தில் இருக்கணும் *OTT தளங்களில் தேவையற்ற ஆட்டோமேடிக் பேமெண்ட் ஆப்ஷனை தவிருங்கள் *ஷாப்பிங்கின் போது, எது கட்டாயத் தேவையோ அதற்கு மட்டும் முன்னுரிமை அளியுங்கள் *சின்னதாக இருந்தாலும், சேமியுங்கள்.
‘குடும்பஸ்தன்’ திரைப்படம் முதல் நாளில் ₹1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராஜேஷ்வர் காளிசாமி இயக்கத்தில், மணிகண்டன் நடித்துள்ள இப்படம், குடும்ப ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இதனால், வரும் நாள்களில் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் குட் நைட், லவ்வர், குடும்பஸ்தன் என ஹீரோவாக ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்துள்ளார் மணிகண்டன்.
சென்னையில் நாளை குடியரசு தின நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு CM ஸ்டாலின் மதுரை அரிட்டாபட்டிக்கு செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசு, டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ததை கொண்டாடும் வகையில் பிற்பகல் 1 மணியளவில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது. தன்னை மீறி இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்தால் முதல்வர் பதவியில் இருக்க மாட்டேன் என மு.க.ஸ்டாலின் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.
நாளுக்கு நாள் கிரெடிட் கார்டு பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், வங்கிகள் கடந்த மாதத்தில் மட்டும் 8,16,195 கார்டுகளை விநியோகித்துள்ளது தெரியவந்துள்ளது. இது கடந்த நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 4,66,195 அதிகம். தற்போது நாடு முழுவதும் சுமார் 10.8 கோடி கார்டுகள் புழக்கத்தில் உள்ளதாக RBI கூறியுள்ளது. உங்களிடம் கிரெடிட் கார்டு இருக்கா?
தெலங்கானாவின் மீர்பெட் பகுதியில் மனைவியை வெட்டி குக்கரில் சமைத்ததாக வெளியான செய்தியில் புதிய ட்விஸ்ட் ஏற்பட்டிருக்கிறது. கைதாகி போலீசில் வாக்குமூலம் அளித்துவரும் கணவர் குருமூர்த்தி, மனைவி மாதவியை குக்கரில் சமைக்கவில்லை என்றும் பாத்ரூமில் பக்கெட் நீரில் போட்டு ஹீட்டர் போட்டு விட்டதாகவும் கூறியிருக்கிறார். விடிய விடிய யூடியூப் பார்த்து இந்த கொடூரத்தை அவர் செய்திருக்கிறார்.
<<15243861>>வேங்கைவயல்<<>> வழக்கில் 2 ஆண்டுகளாக ஆழ்ந்த தூக்கத்திலிருந்த தமிழக CBCID திடீரென தலித் சமூகத்தினர் மீதே வழக்கை திருப்பி யாரையோ காப்பாற்ற திட்டமிடுவதாக பா.ரஞ்சித் குற்றம் சாட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட தலித் மக்களையே குற்றவாளிகளாகச் சித்தரிப்பதை எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும், CBI (அ) சிறப்புப் புலனாய்வு குழு விசாரணை அமைக்க வேண்டும் என்றும் TN அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை பெறுவதற்கு இன்றே கடைசி என்று அமைச்சர் பெரிய கருப்பன் அறிவித்துள்ளார். பொங்கலை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக அரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை அடங்கிய பரிசுத் தொகுப்பை அரசு வழங்கியது. அதனைப் பெற 18ஆம் தேதி கடைசி என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், நீட்டிப்பு செய்து இன்று மாலை வரை வழங்கப்படவுள்ளது.
குடிபோதையில் சிலர் ஆங்கிலத்தை என்ன இவ்வளவு சூப்பராக பேசுகிறார்களே என பார்த்திருக்கிறோம். அது ஏன் தெரியுமா? தன்னிலை மறக்கும் குடியால், இலக்கண விதிகள் குறித்தோ, தவறுகளைப் பற்றியோ அவர்கள் கவலைப்படுவதில்லை. ஒரு நம்பிக்கையில் தான் பேசுவது சரியே என உளறுவார்கள். அவ்வளவே. உன்னிப்பாக கவனித்தால், பிழைகள் தெரியும். ஆனால், இதை ஒரு சாக்காக வைத்து யாரும் ஒரு மொழியை கற்கும் போது பாட்டிலை தேட வேண்டாம்!
சொத்துக் குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு உரிமை கோரி ஜெ.தீபா சுப்ரீம் கோர்ட்டை நாட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ.வுக்கு 4 ஆண்டுகள் சிறையுடன், ₹100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. அபராதத் தொகையை அவரது சொத்துக்களை ஏலம் விட்டு செலுத்த கோர்ட் ஆணையிட்டுள்ளது. இதனால், 27 கிலோ தங்கம், வைரம் உள்ளிட்ட நகைகள் அரசிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.
ஆயில் விலையைக் குறைப்பது அமெரிக்காவின் தலையாய கடமையென டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இதனால், கச்சா எண்ணெய்யின் விலை கடுமையான சரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு சரியும்பட்சத்தில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Sorry, no posts matched your criteria.