India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2024ஆம் ஆண்டுக்கான சிறந்த டி20 அணியை ICC அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு சிறப்பாக விளையாடிய வீரர்களை தேர்வு செய்து, ஒரு அணியாக உருவாக்கியுள்ளது. இதில் 4 இந்திய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். சிறந்த டி20 அணியின் கேப்டனாக ரோஹித் ஷர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். ஆல்ரவுண்டர் வரிசையில் ஹர்திக் பாண்டியாவும், பவுலர்கள் வரிசையில் பும்ராவும், அர்ஷ்தீப் சிங்கும் இடம்பிடித்துள்ளனர்.
பிரபல இசையமைப்பாளர் டி. இமான், தனது உடல் உறுப்புகளை தானமாக அளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அவர் 42ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி தனது உடல் உறுப்புகளை தானம் செய்து, அதுதொடர்பான வீடியோ பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தன்னுடைய காலத்துக்குப் பிறகு தமது உடல் உறுப்புகள் யாருக்காவது பயன்படுவது போல இருந்தால், பயன்படுத்திக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார்.
சூடானில், ஹாஸ்பிட்டல் மீது நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 30 பேர் உடல்சிதறி பலியாகினர். மேலும் 12 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை. 2023 முதல் சூடானில், ராணுவம், துணை ராணுவ படையான RSF இடையே உள்நாட்டு போர் நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகியுள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்.
நாட்டின் உயர்ந்த சிவிலியன் விருதுகளான பத்ம விருதுகள் 1954-ம் ஆண்டு முதல், ஆண்டுதோறும் குடியரசு தினத்தில் வழங்கப்படுகின்றன. 2-வது உயரிய விருதான பத்ம விபூஷன் துறையில் மிகச் சிறந்தவர்களுக்கு (லெஜெண்ட்ஸ் போன்றவர்கள்) வழங்கப்படுகிறது. துறையின் சிறந்த ஆளுமைகள், கலைஞர்களை அங்கீகரிக்க பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது. பத்ம ஸ்ரீ விருது அனைத்து துறைகளிலும் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவின் சிவிலியன் குடிமக்களுக்கான மதிப்புமிகு விருது, பத்ம விருதாகும். கலை, சமூகப் பணி, பொதுச் சேவை, அறிவியல், வணிகம், இலக்கியம், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மிகச்சிறந்த பங்களிப்புகளை வழங்குபவர்களை கவுரவிக்க பத்ம விருதுகள் வழங்கப்படுகின்றன. கடந்த ஆண்டில் பத்ம விபூஷன் -5 பேருக்கு, பத்ம பூஷன் -17, பத்மஸ்ரீ -110 பேருக்கும் வழங்கப்பட்டது.
டெல்லியில் திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தமிழக விரோதப் போக்கை மத்திய அரசு கடைப்பிடித்து வருவதாக விமர்சித்தார். மேலும், இந்தியை திணிக்கும் மத்திய அரசை எதிர்த்து டெல்லியில் திமுக எம்.பி.க்களும், திமுக மாணவரணியும் மாபெரும் போராட்டத்தை நடத்துவார்கள் எனவும் ஸ்டாலின் அறிவித்தார்.
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தளபதி 69’ திரைப்படம் தான் தற்போதைய ஹாட் டாப்பிக். அரசியலில் குதித்துள்ள விஜய்யின் கடைசிப் படம் என்பதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. இந்நிலையில், ‘தளபதி 69’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. ‘தளபதி 69’ படத்திற்கு நீங்கள் என்ன டைட்டில் வைப்பீர்கள்?
புதுச்சேரியைச் சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்சிணாமூர்த்தி உள்பட 12 பேருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் தட்சிணாமூர்த்தி தவில் வாசித்துள்ளார். அதேபோல் மதுரையைச் சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசானுக்கு பத்மஸ்ரீ விருது. பறை இசையை உலகளவில் கொண்டு செல்வதில் முக்கிய பங்கு வகித்தவர் வேலு ஆசான். பெண்கள் மத்தியிலும் பறை இசையை கொண்டு சென்றவர்.
மொழிப்போர் தியாகிகளின் நினைவு தினத்தையொட்டி சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் ஆவேசமாக பேசியுள்ளார். நிதி, கல்வி என அனைத்து விஷயங்களிலும் தமிழகத்தை புறக்கணித்துவிட்டு, இங்கு இந்தியை திணிக்கலாமா, சமஸ்கிருதத்தை திணிக்கலாமா என ஒன்றிய அரசு தத்தளித்து வருவதாக ஸ்டாலின் கூறினார். மேலும், எந்த மொழியை திணித்தாலும் தமிழை அழிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
கோடை காலத்தில் ஒட்டுமொத்த மின்சாரத் தேவை 22,000 மெகாவாட்டாக அதிகரிக்கக்கூடும் என கணக்கிடப்பட்டு உள்ளது. இதனால் மின்சாரத் தேவையை சமாளிக்க TN மின்பகிர்மான கழகம் (TNPDCL) 2,000 மெகாவாட் மின்சாரத்தை பிப். 15 முதல் வாங்குவது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. இதில் 700 மெகாவாட் மின்சாரம் 24 மணி நேர தேவையை சமாளிக்கவும், 1,300 மெகாவாட் உச்சபட்ச தேவையை சமாளிக்கவும் கணக்கிடப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.