India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே அத்திமரத்துப்பாலம் பகுதியில் ஏற்பட்ட கோர விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மகாராஷ்டிராவில் இருந்து சென்னை வந்த லாரியும் ஆந்திராவில் இருந்து கேரளா சென்று கொண்டிருந்த லாரியும் நேருக்கு நேர் மோதிய இந்த விபத்தில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அவர்கள் ஹாஸ்பிட்டலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கோவா சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த லிபியா லோபோ சர்தேசாய் (100) என்பவருக்கு பத்ம ஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1924ல் கத்தோலிக்க கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த அவர், போர்த்துகீசிய ஆட்சியில் இருந்து கோவாவின் விடுதலைக்காக பிரச்சாரம் செய்தார். 1955ல் Voz da Liberdade என்ற பெயரில் சீக்ரெட்டாக வானொலி நிலையத்தைத் தொடங்கி மக்களையும் போராட்டத்திற்காக திரட்டினார்.
2025இன் முதல் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை யார் வெல்வார் என்ற எதிர்பார்ப்பு, டென்னிஸ் ரசிகர்களிடம் அதிகரித்துள்ளது. மெல்போர்னில் கடந்த 6ஆம் தேதி தொடங்கிய ஆஸி., ஓபன் டென்னிஸ் தொடர், இன்றுடன் நிறைவடைகிறது. இதில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில், நடப்பு சாம்பியனும் முதல் நிலை வீரருமான ஜானிக் சின்னாரும், 2ஆம் நிலை வீரருமான Zverevவும் இன்று 2 PMக்கு மோதுகின்றனர். CUP யாருக்கு? Cmt Here.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த செஃப் தாமுவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்துள்ளது. பிரபல சமையல் நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’க்கு நடுவராக வரும் அவர், தன்னுடைய நகைச்சுவையான பேச்சாலும் எளிமையான சமையல் பயிற்சியாலும் அனைவரையும் கவர்ந்துள்ளார். இவர், தனிநபரின் மிக நீண்ட சமையல் மாரத்தானுக்காக கின்னஸ் சாதனையும் படைத்துள்ளார்.
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 9- 12 வரை பயிலும் மாணவர்களுக்கு மத்திய அரசு மாதம் ₹1,000 உதவித் தொகை வழங்குகிறது. இதற்காக 8வது பயிலும் மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழித் தேர்வு நடத்துகிறது. இதில் வெற்றி பெறுவோருக்கு அந்த உதவித் தொகை அளிக்கப்படுகிறது. இதற்கு ஜன.25க்குள் விண்ணப்பிக்க தேர்வுத்துறை அறிவித்திருந்தது. இந்நிலையில், மாணவர்கள் நலன் கருதி ஜன.29ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
*சுதந்திர தினத்தில் கீழிருந்து கொடி மேலே சென்று, முடிச்சு திறந்து பறக்கவிடப்படுவது ‘கொடியேற்றம்’. குடியரசு தினத்தில் கம்பத்தின் உச்சியில் இருக்கும் கொடி அவிழ்க்கப்பட்டு பறக்கவிடப்படுவது ‘கொடியை பறக்கவிடுதல்’ *சுதந்திர தினத்தில் பிரதமரும், குடியரசு தினத்தில் ஜனாதிபதியும் கொடியை பறக்கவிடுவார்கள் *சுதந்திர தினத்தில் டெல்லி செங்கோட்டையிலும், குடியரசு தினத்தில் ராஜ்பாத்திலும் கொடி பறக்கவிடப்படும்.
76வது குடியரசு தினத்தையொட்டி கூகுள் விசேஷ டூடுல் வெளியிட்டு கவுரவித்துள்ளது. நாட்டின் ஜனநாயகம், பன்முகத்தன்மையைப் பறைசாற்றும் வகையில் விலங்குகள், பறவைகளுக்கு பல வண்ணங்களில் இவை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை உருவாக்கிய புனேவை சேர்ந்த ரோஹன் டத்தோருக்கு உலகின் முன்னணி தேடுபொறி நிறுவனமான கூகுள் பாராட்டு தெரிவித்துள்ளது.
*எழுந்தவுடன் தண்ணீர் குடிக்கவும். தண்ணீர் உடலில் இருக்கும் நச்சை நீக்க உதவும். இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கிறது *மனதை அமைதியடைய தியானம் செய்யுங்கள் *15-30 நிமிடங்கள் வரை உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது உடலுக்கு சோம்பலை முறித்து புத்துணர்ச்சியை கொடுக்கும் *அன்றைய நாளில் என்ன செய்ய போகிறோம் என்பதை பட்டியலிட்டு வைத்து கொள்ளுங்கள். SHARE IT.
தனுஷ்கோடி – தலைமன்னார் இடையே மீன் பிடித்துக் கொண்டிருந்த 33 ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை சிறைபிடித்துள்ளது. எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அவர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. தீராத பிரச்னையாக இருக்கும் மீனவர்கள் கைது குறித்து மத்திய மாநில அரசுகள் தனி கவனம் செலுத்த வேண்டும் என்று சிறைபட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
*சோற்றுக் கற்றாழையை சிறு துண்டுகளாக (5-6) எடுத்துக்கொள்ளவும்.
*கற்றாழை தோலை சீவிவிட்டு உள்ளே இருக்கும் பசையை பிரித்தெடுக்கவும்.
*அதனுடன் அரை எலுமிச்சை பழச் சாறை பிழிந்து விடவும்.
*இரண்டையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
*இந்த பானத்தை மாதம் 3 முறை குடித்து வரை, வயிறு, கல்லீரல் பிரச்னை உள்பட உடலில் உள்ள அனைத்து பிரச்னைகளும் குணமாகும்.
Sorry, no posts matched your criteria.