India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்கவுள்ளது. அதிமுக மூத்த தலைவர்கள் ஜெயக்குமார், பாலகங்கா ஆகியோர் இதில் பங்கேற்கவுள்ளதாக தெரிகிறது. மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி மலரும் என திமுக கூறி வரும் நிலையில், இந்த தேநீர் விருந்தில் அதிமுக பங்கேற்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆளுநரின் தேநீர் விருந்தை திமுக, அதன் கூட்டணிக் கட்சிகள் மட்டுமல்லாமல் தவெகவும் புறக்கணித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
வளர்ந்து வரும் நடிகர் கவின் பற்றியான ஒரு கெட்ட செய்தி சினிமா வட்டாரங்களில் பரவி வருகிறது. சமீபத்தில் சென்னையில் நடந்த ‘கிஸ்’ படத்தின் ஷூட்டிங்கில், கவின் சென்ற லிஃப்ட் மெதுவாக சென்றதாம். அதில் கடுப்பான அவர், லிஃப்ட் நின்றதும் இறங்கிவிட்டு, அதை சரிசெய்ததும் தன்னை ஷூட்டிங்கிற்கு கூப்பிடுங்கள் என சொல்லிவிட்டு கேரவனில் போய் படுத்து கொண்டாராம். இத்தனைக்கும் 2ஆவது மாடியில் தான் ஷூட்டிங் நடந்ததாம்.
2016 தேர்தலில் சொத்து உள்ளிட்டவை குறித்து இபிஎஸ் பொய் தகவலை அளித்திருப்பதாகவும், ஆதலால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி தேனியை சேர்ந்த மிலானி சேலம் கோர்ட்டில் வழக்கு தொடுத்திருந்தார். அதை விசாரித்த கோர்ட், அறிக்கை தாக்கல் செய்ய போலீசுக்கு உத்தரவிட்டது. இபிஎஸ் வேட்புமனுவில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் என கையெழுத்து போட்டுள்ள ஓபிஎஸ்சிடம் போலீஸ் விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.
பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மனைவியுடன் சண்டை வந்துவிட்டால், இவற்றை ஃபாலோ பண்ணுங்க *அவர்களுடன் மல்லுக்கட்டாமல் சரணடைந்து விடுவது நல்லது *மறந்து கூட விடாப்பிடியாக தர்க்கம் செய்து, அவர்களுக்கு எதிர் பேச்சு பேச வேண்டாம் *சண்டைக்கான காரணங்களை குறித்து பேசி மேலும் பிரச்னையை தூண்டி விட வேண்டாம் *விட்டுக்கொடுத்து போய்விடு மிகவும் நல்லது. உங்க கிட்ட ஏதாவது tricks இருந்தா கமெண்ட் பண்ணுங்க!!
சுவிட்சர்லாந்தில் நடந்த உலகப் பொருளாதார அமைப்பின் கூட்டத்தில் ஸ்டாலின் அரசு சாதித்தது என்ன? என இபிஎஸ் கேள்வி எழுப்பியுள்ளார். முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் எதுவும் போடவில்லை எனவும், அமைச்சர் TRB ராஜா எதிலும் கையெழுத்திடவில்லை என்பதும் வருத்தம் தருவதாக கூறியுள்ளார். முதலீட்டாளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
மறைந்த திக தலைவர் பெரியார் குறித்து நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து தெரிவிக்கும் கருத்துகள், சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதற்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தங்களது கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன. எனினும் சீமான் தனது கருத்துகள் சரிதான் எனக் கூறி வருகிறார். இதுகுறித்து உங்கள் கருத்து என்ன? பெரியார் குறித்த சீமானின் விமர்சனம் சரியா? தவறா? கீழே கமெண்ட் பதிவிடுங்க.
வேங்கைவயல் மக்களுக்கு நியாயம் கிடைக்க ஐகோர்ட் நேரடி கண்காணிப்பில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைத்து விசாரிக்க விஜய் வலியுறுத்தியுள்ளார். ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டால் அதனை மறு விசாரணை நடத்துவதில் எவ்வித தவறும் இல்லை எனவும், CBI விசாரணைக்கு உத்தரவிட்டால் அது மேலும் கால தாமதம் ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் கருத்து குறித்து உங்கள் கருத்து என்ன?
மகளிர் U19 டி20 உலகக்கோப்பை தொடரில் வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. BAN 65 ரன்கள் டார்கெட் வைத்த நிலையில், அதை 7.1 ஓவர்களிலேயே இந்திய மகளிர் அணி கடந்தது. ஓப்பனிங் இறங்கி அதிரடி காட்டிய கொங்கடி த்ரிஷா அதிகபட்சமாக 40 ரன்களை விளாசினார். அதேபோல், பவுலிங்கில் வைஷ்ணவி ஷர்மா அதிகபட்சமாக 3 விக்கெட்களை கைப்பற்றினார்.
பாலிவுட் நடிகர் சயிப் அலிகானை கத்தியால் குத்தியதாக வங்கதேசத்தை சேர்ந்த சரிபுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக சயிப் வீட்டில் சேகரிக்கப்பட்ட 19 கைவிரல் ரேகைகளுடன் சரிபுல்லின் ரேகையை அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்தனர். ஆனால் அதில் எதுவும் சரிபுல்லின் ரேகை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் உண்மையில் அவர்தான் சயிப்பை கத்தியால் குத்தினாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு வலுத்துள்ளது.
ஆப்டிகல் இல்யூஷன் என்பது ஒரு வகையான கேம். கிரியேட்டிவிட்டி மிக்க இந்த கேமை விளையாடும்போது, நமது மூளையின் செயல்திறன் அதிகரிப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இது நமது எண்ணத்தை ஒருங்கிணைப்பதால், ஒருவித மனத்தெளிவு கிடைக்கும் என்கிறார்கள். சரி விளையாடி பார்ப்போமா. மேலே கொடுக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் என்ன வாக்கியம் இருக்கிறது என்பதை கண்டறிந்து கமெண்டில் பதிவிடுங்கள்.
Sorry, no posts matched your criteria.