India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆண்கள் பலவீனமாகி வருகின்றனர். மனைவி உடன் நின்றால் மலையையே நொறுக்கும் கணவனால், மனைவியின் தொல்லைகளை தாங்கிக் கொள்ள முடிவதில்லை. டைவர்ஸ் விவகாரங்களில் தங்களுக்கு நீதி கிடைக்காது என்ற விரக்தியில் கணவர்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். சமீபத்தில் பெங்களூருவில் சுபாஷ் தற்கொலை செய்துகொண்டார். நேற்று டெல்லியில் புனீத் குரானா உயிரை மாய்த்துக் கொண்டார். ஆண்களின் இந்த நிலை பற்றி உங்க கருத்து என்ன?
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் புதிய வீட்டின் ஃபோட்டோ, சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சென்னை காட்டுப்பாக்கத்தில் அமைந்துள்ள வீடு சுமார் 20,000 சதுர அடியில் கட்டப்பட்டு வருகிறது. ஒரு அரசியல்வாதியை பார்க்க வரும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் நிற்க வசதியாக இந்த வீடு கட்டப்பட்டுள்ளது. விஜயகாந்த் மறைவதற்கு முன்னரே இந்த வீட்டில் குடியேறுவார் என தேமுதிகவினர் எதிர்பார்த்திருந்தனர்.
IT-யில் வேலை பார்ப்பவர்களுக்கு இணையாக கொள்ளை கும்பலிலும் சலுகைகள் இருக்கிறது என்றால் நம்பமுடிகிறதா? உ.பி.யில் செல்போன் திருடும் கும்பல் மாதம் ₹15,000, இலவச உணவு, பயணச் செலவு என சலுகைகள் வழங்குகிறது. கொள்ளை சம்பவத்தில் ஒன்றில் கைதான பிறகு, ஜார்கண்டை சேர்ந்த மனோஜ்குமார் என்பவரது இந்த கும்பல் பற்றி தகவல் வெளிவந்துள்ளது. உடனே நெட்டிசன்கள் வேலைக்கு நாங்க வரலாமா? என கலாய்த்து வருகிறார்கள்.
ரெட்ரோ படத்தின் போஸ்டரை வெளியிட்டு, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். சூர்யா, பூஜா ஹெக்டே, ஜெயராம், கருணாகரன் உள்ளிட்டோர் நடித்துள்ள இந்த படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. பீரியாடிக் கேங்ஸ்டர் மற்றும் காதல் பின்னணியை கதைக்களமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் கோடை விடுமுறையில் ரிலீஸாகும் என படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
IND vs AUS மோதும் 5ஆவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நாளை மறுநாள் (ஜன.3) நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கு தயாரான AUS அணியின் ஃபோட்டோக்கள் வைரலாகி வருகின்றன. மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், வீரர்கள் பிங்க் நிற தொப்பி அணிந்துள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சிட்னியில் நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டி, பிங்க் டெஸ்ட் என்ற பெயரிலேயே நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
பெண் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக செயல்படுத்தப்பட்டு வரும் ‘செல்வ மகள்’ சேமிப்பு திட்டத்தில் 8.1% வட்டி வழங்கப்படுவதால் கோடிக்கணக்கான பெண் பிள்ளைகளின் பெற்றோர் இதில் இணைந்திருக்கின்றனர். இதனிடையே, இந்த புத்தாண்டில் இத்திட்டத்தில் வட்டி குறைக்கப்படும் என செய்திகள் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின. இந்நிலையில், வரும் மார்ச் வரை செல்வ மகள் திட்டத்தில் மாற்றம் இருக்காது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
டாடா, மஹிந்திரா, ஹூண்டாய் உள்ளிட்ட நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி, தொடர்ந்து 3ஆவது மாதமாக அதிக EV கார்களை விற்ற டாப் பிராண்டாக MORRIS GARAGES உள்ளது. இந்தியாவில் கடந்த SEPTல் லான்ச் செய்யப்பட்டு, OCT முதல் டெலிவரி செய்யப்பட்ட MG Windsor EV கார்கள், கடந்த 3 மாதத்தில் 10,045 விற்பனையாகியுள்ளன. ₹13.50-15.50 லட்சம் பட்ஜெட்டில், அதிக Featureகள் இருப்பதால், இந்தியர்களின் ஃபேவரைட்டாக இவை மாறியுள்ளன.
ஒருவழியாக அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை (ஜன.2) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. 9 நாட்கள் விடுமுறையை கழித்த மாணவர்கள், பள்ளிக்கு செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், நாளை பள்ளி திறந்தால், இரு நாட்கள் மட்டுமே ஸ்கூல் இருக்கும். பிறகு வாரவிடுமுறை வந்துவிடும். எனவே, சொந்த ஊர் சென்றுள்ள மாணவர்களை கருத்தில்கொண்டு, ஜன.6 ஆம் தேதி பள்ளிகளை திறக்க பெரும்பாலான பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருடத்தின் முதல் நாள், என்னோட உடம்ப இரும்பாக்குகிறேன் என்றே குறிக்கோளை வைத்து ஜிம்மில் அடியெடுத்து வைக்கும் கூட்டம் அதிகம். ஆனால், ஏனோ கொஞ்ச நாளில் அதை கைவிடுவார்கள். பொதுவாக கூறவில்லை, அப்படி சிலர் நமது குரூப்பிலும் இருப்பார்களே. இவர்களை வைத்து ஒரு பெரிய பிசினஸே இன்று பெரிய கல்லாக்கட்டுகிறது. இவர்களை குறிவைத்து சில ஆஃபர்களும் வழங்கப்படுகிறது. அப்படி பார்த்தால் இன்று ஹாட் பிசினஸ் இதுதான்.
2024-ம் ஆண்டுக்குள் நாட்டின் சாலைகள் அமெரிக்காவில் இருக்கும் சாலைகள் தரத்திற்கு உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி 2022 டிசம்பரில் கூறியதை நெட்டிசன்கள் தற்போது நினைவு கூர்ந்து விமர்சித்து வருகின்றனர். அறிவிப்பு வந்து 2 ஆண்டுகள் முடிந்து விட்ட நிலையில், இன்னும் நாட்டின் பல சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதை பதிவிடும் நெட்டிசன்கள் இது குறித்து கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.
Sorry, no posts matched your criteria.