India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
எவரெஸ்ட் மலை சிகரம் உலகின் பெரிய மலை என அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், அது உண்மை இல்லை. ஹவாய் தீவில் உள்ள Mauna Kea மற்றும் Mauna Loa ஆகிய எரிமலைகள் தான் உலகின் நீண்ட மலையாகும். இதன் 4.2 கி.மீ நீளம் கொண்ட பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. எவரெஸ்ட்டின் நீளம் 4.6 கி.மீ என்று இருக்கும் நிலையில், மேற்கூறிய எரிமலைகளின் மொத்த நீளம் 10.2 கி.மீ ஆக உள்ளது.
அரையாண்டு விடுமுறை முடிந்து நாளை (ஜன.2) அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டன. இதனிடையே, பள்ளி திறக்கப்பட்டு இரு நாட்களுக்கு பிறகு சனி, ஞாயிறு வார விடுமுறை வருவதால் ஒரேயடியாக திங்கள்கிழமை (ஜன.6) பள்ளியை திறக்க வேண்டும் என பெரும்பாலான பெற்றோரும், மாணவர்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை தற்போது அறிவித்துள்ளது.
சென்னை போயஸ் கார்டன் இல்லத்தில் நடிகர் ரஜினிகாந்தை ஓபிஎஸ் சந்தித்து பேசி வருகிறார். உடல்நலம் குறித்து விசாரிக்கவும், புத்தாண்டு வாழ்த்து சொல்லவும் ஓபிஎஸ் வந்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த சந்திப்பின் பின்புலத்தில் அரசியல் இருக்காது என்று உறுதியாக சொல்ல முடியாது. 2026 சட்டமன்றத் தேர்தல் கணக்கு, பாஜக கூட்டணி உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.
எப்புட்றா.. என்ற மாதிரியான ஒரு சம்பவம் நடந்துள்ளது. 2025ல் புறப்பட்ட விமானம் ஒன்று, 2024ல் தரையிறங்கிய தலைகீழ் விநோதம் நிகழ்ந்துள்ளது. அது எப்படி திமிங்கலம் என கேட்கிறீர்களா? ஹாங்காங்கில் 2025 ஜனவரி 1ஆம் தேதி 12.38PMக்கு புறப்பட்ட விமானம், லாஸ் ஏஞ்செல்ஸில் 2024 டிசம்பர் 31ஆம் தேதி 8PMக்கு தரையிறங்கியுள்ளது. ஹாங்காங்கில் 14 மணி நேரத்திற்கு முன்னதாகவே, புத்தாண்டு தொடங்கிவிட்டதுதான் அதற்கான காரணம்.
2025ஆம் ஆண்டில் பல வானியல் அதிசயங்கள் நிகழவுள்ளன. அதன்படி, ஜன.15-16 தேதிகளில் வானில் செவ்வாய்க்கிரகம் மிக பிரகாசமாக தெரியும். பிப்.28இல் புதன், வெள்ளி, சனி, செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன் என 7 கிரகங்கள் ஒரே நேர்கோட்டில் தெரியும். இதை வெறும் கண்ணால் பார்க்கலாம். அதேபோல, செப்.7-8 தேதிகளில் முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. அன்று ரத்த நிறத்தில் இருக்கும் சந்திரனை வெறும் கண்ணால் பார்க்கலாம்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட தஹாவூர் ஹுசைன் ராணாவை இந்தியாவிற்கு நாடு கடத்த அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. இதனையடுத்து, தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அமெரிக்க சிறையில் உள்ள ராணாவை நாடுகடத்த, இந்தியா மேற்கொண்ட நீண்ட போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியாக இது கருதப்படுகிறது. 2008ல் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 166 பேர் கொல்லப்பட்டனர்.
புத்தாண்டில் சனி-சுக்கிரனின் பெயர்ச்சிகள் 2 ராசிகளை படாத பாடு படுத்தும் என ஜோதிடர்கள் கணித்துள்ளனர். 1) கன்னி: செலவுகள் அதிகரிக்கும். விருப்பங்கள் நிறைவேறாமல் மன அழுத்தம் உண்டாகும். உடல்நலனில் அக்கறை தேவை. அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். 2) தனுசு: 3ஆம் வீட்டில் சுக்கிரன்-சனி இணைவதால் கடன் தொல்லை ஏற்படும். வாழ்க்கை துணையுடன் சண்டை – சச்சரவு உருவாகும். வார்த்தையில் கவனமாக இருப்பது நல்லது.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப் போனதற்கான காரணம் வெளியாகியுள்ளது. இரவு, பகலாக பின்னணி இசையமைக்கும் பணியில் அனிருத் ஈடுபட்டு வரும் நிலையில், 3 நாளில் முடிக்க படக்குழு அழுத்தம் கொடுத்துள்ளது. ஆனால், இசை மற்றும் சவுண்ட் மிக்ஸிங் செய்ய 15 நாள் ஆகும் என திட்டவட்டமாக கூறிவிட்டதால், படம் தள்ளிப்போனதாம். இதனால் ட்ரெய்லர் கூட இன்று வெளியாகாது என கூறப்படுகிறது.
பவுடர் பால் தயாரிப்பின் காரணமாக, ஆக்ஸிஜனேற்றப்பட்ட கொலஸ்ட்ரால் உருவாகிறது. அது பிற்காலத்தில் இதய நோய்க்கு வழிவகுக்கலாம். மேலும், குழந்தைகள் விரும்பும் வகையில் இந்த பாலில் சேர்க்கப்படும் flavourகளால் சர்க்கரை அளவு கூடுவதால், அது வகை 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கலாம் எனப்படுகிறது. பவுடர் பால் பொதுவாக தீங்கானது என்றாலும், அது fresh பாலை போல முழுமையானது அல்ல. அளவுக்கு மிஞ்சினால் அளவுக்கு நஞ்சு.
மாநிலத்தில் உள்ள 500 அரசுப் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கே. பாலகிருஷ்ணன், அமைச்சரின் அறிவிப்பு பேரதிர்ச்சி கொடுப்பதாகவும், அரசுப் பள்ளிகளை தனியாருக்கு தத்து கொடுக்கும் இந்த நடவடிக்கையை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் வலியறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.