India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

OPS, சசி, டிடிவி ஆகியோரை சமாளித்து வந்த EPS-க்கு, செங்கோட்டையனின் கலகக்குரல் முதலில் கொஞ்சம் தடுமாற்றத்தையே ஏற்படுத்தியது. உடனடியாக ஆக்ஷன் எடுத்தால் தொண்டர்களிடம் அவருக்கு அனுதாபம் ஏற்படலாம் என கணித்த EPS, முதலில் கட்சிப் பதவியை மட்டும் பறித்தார். கட்சியில் பெரிய சலசலப்பு ஏற்படாத நிலையில், சரியான தருணத்துக்கு காத்திருந்த அவர், நேற்றைய நிகழ்வை காரணமாக்கி இன்று செங்கோட்டையனை நீக்கியுள்ளார்.

வாகனத்தின் டயர்கள் ரப்பரில் செய்யப்படுகின்றன. வெள்ளை நிறம் கொண்ட இவை கருப்பாக மாற்றப்படுவது ஏன் என நீங்கள் கேட்கலாம். இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. ரப்பரால் ஆன டயர்கள் விரைவில் பழுதடைந்துவிடும். எனவேதான் Carbon Black எனப்படும் கெமிக்கலை அதன் மேல் பூசுகின்றனர். இதன்மூலம், டயர்கள் வலுவாக இருக்கும். சீக்கிரம் பழுதடையாது. 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை விளக்கம் அளிக்க இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், அண்மை காலமாகவே இபிஎஸ் உடன் மோதல்போக்கை கடைபிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது, சிறுகுற்றங்களுக்கு தண்டனைக்கு பதிலாக அபாரம் விதிப்பது உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இருமுறை நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்டத்திற்கும் கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து, அவரின் சகோதரி ஸ்வேதா சிங் பரபரப்பான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். சுஷாந்தின் மரணம் தற்கொலையல்ல, அவரை 2 பேர் சேர்ந்து கொலை செய்ததாக அமானுஷ்ய ஆய்வாளர்கள் இருவர் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுஷாந்தின் படுக்கைக்கும் ஃபேனுக்கும் இடையே உள்ள தொலைவை வைத்துப் பார்க்கையில், அவர் தூக்கு போட்டுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்கிறார்.

ORSL, ORSL PLUS, ORS FIT ஆகிய கரைசலை விற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இவற்றை குடித்தால் நோயின் தன்மை மேலும் தீவிரமாகும் என FSSAI தடை விதித்திருந்த நிலையில், அதை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. உலக பொது சுகாதார அமைப்பு பெயர் அச்சிடப்பட்ட ORS-ஐ மட்டுமே விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ORSL கரைசலை மருந்தகம், கடைகளில் இருந்து பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக EPS அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் விடுவிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார். கட்சி நிர்வாகிகள் யாரும் செங்கோட்டையனுடன் தொடர்பு வைத்துக் கொள்ள வேண்டாம் எனவும் EPS அறிவுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு பூச்சிக்கும் தனித்துவமான வடிவம், வண்ணம் உண்டு. இவை, அளவில் சிறியதாக இருந்தாலும், இயற்கையில் மிக முக்கியம் பங்கு வகிக்கின்றன். மலர்கள் மலர, மண் வளம் பெருக, உணவு சங்கிலியை சமநிலைப்படுத்துவது உள்ளிட்டவைகளில் பெரிதும் உதவுகின்றன. மிகவும் வித்தியாசமான அரிய பூச்சிகள் ஏராளமாக உள்ளன. அவற்றில் சிலவற்றை, போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். உங்களுக்கு பிடித்த பூச்சி எது?

TN-ல் நடைபெற்ற மணல் கொள்ளை தொடர்பாக ED தொடர்ந்த வழக்கு விசாரணை ஐகோர்ட்டில் நடைபெற்றது. அப்போது, மணல் கொள்ளை தொடர்பான தகவல்களின் அடிப்படையில் வழக்குப்பதிய TN DGP-க்கு எப்படி உத்தரவிட முடியும் என ED-க்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. மணல் குவாரிகளில் ₹4,730 கோடிக்கு முறைகேடு நடைபெற்றதற்கு ஆதாரம் உள்ளதாக ED தெரிவித்த நிலையில், 3 வாரங்களில் பதிலளிக்க TN அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ₹5,000 வழங்க தமிழக அரசு திட்டமிட்டு வருவதாக செய்திகள் பரவி வருகின்றன. இந்நிலையில், அமைச்சர் சக்கரபாணியிடம் பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, CM ஸ்டாலின் இதுகுறித்து அறிவிக்க இருப்பதாக மகிழ்ச்சியான தகவலை அவர் தெரிவித்துள்ளார். இதனால், பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.