India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான SBI, மூத்த குடிமக்களுக்கான நிரந்தர வைப்புத் தொகை மீதான வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. இதேபோல், தனியார் வங்கியான HDFC, வட்டியை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்துள்ளது. மேலும், பேங்க் ஆப் இந்தியா, ICICI, ஆக்சிஸ் வங்கிகளும் வட்டியை குறைத்துள்ளன. இதனால் வங்கிகள் தரும் வட்டியை நம்பியிருக்கும் பொது மக்கள் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.
கவர்னரை CM ஸ்டாலின் தபால்காரர் என கூறியதற்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார். கவர்னர் பதவி என்பது மத்திய மாநில அரசுகளின் அங்கீகாரம் மிக்கது என்றும் கவர்னரை கொச்சைப்படுத்தி பேசுவது முதல்வருக்கு அழகல்ல என்றும் அவர் கூறியுள்ளார். உறையூரில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 3 பேர் உயிரிழந்ததை சுட்டிக்காட்டிய அவர் இனியாவது திமுக அரசு கவனமாக இருக்கவேண்டும் என வலியுறுத்தினார்.
ஓராண்டில், ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹20,000 உயர்ந்திருப்பதால், மக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சிலர் தங்கத்தின் விலை குறையும் என்று காத்திருக்கின்றனர். ஆனால், தங்கத்தின் விலை எப்போது எப்படி நகரும் என்பதை கணிக்க முடியாது என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன். விரைவில், ஒரு கிராம் தங்கம் ₹10,000க்கும் போகலாம் அல்லது குறையவும் செய்யலாம். சிறுக சிறுக தங்கத்தை வாங்குவதே சிறந்த முதலீடாக இருக்கும்
ஹர்திக் பாண்டியாவுடன் பிரபல நடிகை ராஷ்மிகா மந்தனா திருமணம் செய்து மாலையும், கழுத்துமாக 2 பேரும் நிற்பது போன்ற புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. விஜய் தேவர கொண்டாவுடன் மந்தனா டேட்டிங் செய்வதாக கூறப்படும் நிலையில், இந்த படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதை பேக்ட் செக் செய்து பார்த்தபோது, இது ஏஐ உருவாக்கிய போலி படம் எனத் தெரிய வந்துள்ளது. ஆதலால் இதுபோன்ற படங்களை நம்ப வேண்டியதில்லை.
கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம்பிரகாஷை (68) கத்தியால் குத்திக் கொலை செய்த அவரின் மனைவியை பிடித்து போலீஸ் விசாரித்து வருகிறது. பெங்களூருவில் உள்ள வீட்டில் ஓம்பிரகாஷ் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று மனைவி பல்லவிக்கும் அவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த மனைவி, கத்தியை எடுத்து வந்து துடிக்க துடிக்க குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் ஓம்பிரகாஷ் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி 176 ரன்கள் சேர்த்துள்ளது. ரச்சின் ரவீந்திரா சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தாலும், களமிறங்கிய முதல் போட்டியிலேயே ஆயுஷ் மாத்ரே அதிரடியாக 32 ரன்கள் சேர்த்தார். முதலில் மெதுவாக விளையாடிய ஷிவம் துபே பின்னர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்து ஆட்டம் இழந்தார். 3 ஓவர்களை வீசிய சாண்ட்னர் 14 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
ராஜஸ்தானில் 19 வயது தலித் இளைஞர் மீது இரண்டு பேர் சிறுநீர் கழித்து துன்புறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட இளைஞர் தனியே வெளியே சென்றபோது வழிமறித்த இரண்டு பேர், இவரின் ஆடைகளை கழற்ற சொல்லி பாலியல் துன்புறுத்தலிலும் ஈடுபட்டதாக புகாரில் பதிவாகியிருக்கிறது. அப்போது, அவர்கள் ஜாதி பெயரைச் சொல்லி திட்டியதாகவும் கடுமையாக தாக்கியதாகவும் பாதிக்கப்பட்டவர் கூறியிருக்கிறார்.
கடந்த சில ஆட்டங்களாக தடுமாறி வந்த ஷிவம் துபே மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் தனது அதிரடி பாதைக்கு திரும்பியுள்ளார். முதலில் நிதானமாக ஆட்டத்தை தொடங்கிய அவர் பின் அதிரடி காட்ட தொடங்கினார். 31 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் அரைசதத்தை துபே பதிவு செய்தார். தோல்விகளால் துவண்டு போயிருந்த சென்னை ரசிகர்களுக்கு தூபே தற்போது அறுதல் கொடுத்துள்ளார்.
2025-ம் ஆண்டு ஹாலிவுட் உலகிற்கு பெரும் துயரமாகி உள்ளது. பல்வேறு நடிகர், நடிகைகள் அடுத்தடுத்து கடந்த மூன்றரை மாதங்களில் உயிரிழந்துள்ளனர். அவர்களில் டெனிஸ் தி மெனேஸ் படத்தில் நடித்த ஜே நார்த், பேட்மேன் ஃபாரெவர் பட நடிகர் வால் கில்மர், ஸ்டார் வார்ஸ் நடிகை பேட் மலோன், ஹாரிபார்ட்டர் பட நடிகர் சைமன் பிஸர் பெக்கர், நடிகை பமீலா பாக், ஆஸ்கர் விருது நடிகர் ஜீன் ஹேக்மேன் உள்ளிட்டோரும் அடங்குவர்.
IPL வரலாற்றில் அதிக அரைசதம் அடித்த வீரர் என்ற சாதனையை விராத் கோலி படைத்துள்ளார். பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தனது 67-வது அரைசதத்தை ( 8 சதங்கள்) விராத் பதிவுசெய்தார். இந்த பட்டியலில் 66 சதங்களுடன் டேவிட் வார்னர் 2-வது இடத்திலும், 53 சதங்களுடன் ஷிகர் தவான் 3-வது இடத்திலும் உள்ளனர். IPL-லில் அதிக சதம்(8) அடித்தவரும் விராட் கோலிதான் என்பது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.