India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

Women’s WC-ல் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றதாக SM-ல் தவறான தகவல் பரவுகிறது. நவ.2-ம் தேதி ஃபைனல் நடக்கவுள்ள நிலையில், விக்கிபீடியாவில் சிலர் எடிட் ஆப்ஷனை பயன்படுத்தி இந்தியா முதலில் பேட்டிங் செய்து 326 ரன்கள் குவித்ததாக குறிப்பிட்டுள்ளனர். இலக்கை துரத்திய SA அணி 285 ரன்கள் மட்டுமே எடுத்ததாக, பதிவிட்டு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளனர். இறுதிப்போட்டியில் யார் ஜெயிப்பாங்க?

கழகத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் செங்கோட்டையன் செயல்பட்டதாக கூறி அவரை அதிமுகவில் இருந்து EPS நீக்கியுள்ளார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வைக்கக்கூடாது என தெரிந்தும், செங்கோட்டையன் அவர்களுடன் ஒன்றிணைந்து கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு உண்டாக்கியதாக EPS தெரிவித்துள்ளார். முன்னதாக, அதிமுக ஈரோடு புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர் பதவியும் செங்கோட்டையனிடம் இருந்து பறிக்கப்பட்டது.

‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸை கொண்டாடி தீர்க்க காத்திருந்த அஜித் ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இன்று ரீ-ரிலீஸிற்கு திட்டமிடப்பட்டிருந்த ‘அட்டகாசம்’ படத்தின் Qube வெர்ஷனை தியேட்டர்களுக்கு வழங்க விநியோகஸ்தர் தரப்பு தவறியதாக கூறப்படுகிறது. பல தியேட்டர்களில் ‘அட்டகாசம்’ ரீ-ரிலீஸின் முன்பதிவு ஹவுஸ்ஃபுல் ஆன நிலையில், விநியோகஸ்தரின் தவறால் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.

₹50,000 வரை பரிசுகளை வெல்லும் வினாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நவ.5(புதன்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூழல் அறிவோம்’ என்ற தலைப்பில் 6 – 9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த வினாடி வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 2 மாணவர்களை உள்ளடக்கிய 5 குழுக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

OPS, சசி, டிடிவி ஆகியோரை சமாளித்து வந்த EPS-க்கு, செங்கோட்டையனின் கலகக்குரல் முதலில் கொஞ்சம் தடுமாற்றத்தையே ஏற்படுத்தியது. உடனடியாக ஆக்ஷன் எடுத்தால் தொண்டர்களிடம் அவருக்கு அனுதாபம் ஏற்படலாம் என கணித்த EPS, முதலில் கட்சிப் பதவியை மட்டும் பறித்தார். கட்சியில் பெரிய சலசலப்பு ஏற்படாத நிலையில், சரியான தருணத்துக்கு காத்திருந்த அவர், நேற்றைய நிகழ்வை காரணமாக்கி இன்று செங்கோட்டையனை நீக்கியுள்ளார்.

வாகனத்தின் டயர்கள் ரப்பரில் செய்யப்படுகின்றன. வெள்ளை நிறம் கொண்ட இவை கருப்பாக மாற்றப்படுவது ஏன் என நீங்கள் கேட்கலாம். இதற்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் இருக்கிறது. ரப்பரால் ஆன டயர்கள் விரைவில் பழுதடைந்துவிடும். எனவேதான் Carbon Black எனப்படும் கெமிக்கலை அதன் மேல் பூசுகின்றனர். இதன்மூலம், டயர்கள் வலுவாக இருக்கும். சீக்கிரம் பழுதடையாது. 1% பேருக்கு மட்டுமே தெரிந்த இத்தகவலை SHARE பண்ணுங்க.

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக நாளை விளக்கம் அளிக்க இருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். காலை 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேசவிருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான அவர், அண்மை காலமாகவே இபிஎஸ் உடன் மோதல்போக்கை கடைபிடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 9 மசோதாக்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். முன்னாள் எம்.எல்.ஏ-க்களின் ஓய்வூதியத்தை உயர்த்துவது, சிறுகுற்றங்களுக்கு தண்டனைக்கு பதிலாக அபாரம் விதிப்பது உள்ளிட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இருமுறை நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட தமிழக நிதி நிர்வாக பொறுப்புடைமை சட்டத்திற்கும் கவர்னர் ஒப்புதல் தந்துள்ளார்.

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங்கின் மரணம் குறித்து, அவரின் சகோதரி ஸ்வேதா சிங் பரபரப்பான குற்றச்சாட்டுகளை எழுப்பியுள்ளார். சுஷாந்தின் மரணம் தற்கொலையல்ல, அவரை 2 பேர் சேர்ந்து கொலை செய்ததாக அமானுஷ்ய ஆய்வாளர்கள் இருவர் தெரிவித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார். சுஷாந்தின் படுக்கைக்கும் ஃபேனுக்கும் இடையே உள்ள தொலைவை வைத்துப் பார்க்கையில், அவர் தூக்கு போட்டுக்கொள்ள வாய்ப்பே இல்லை என்கிறார்.

ORSL, ORSL PLUS, ORS FIT ஆகிய கரைசலை விற்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இவற்றை குடித்தால் நோயின் தன்மை மேலும் தீவிரமாகும் என FSSAI தடை விதித்திருந்த நிலையில், அதை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது. உலக பொது சுகாதார அமைப்பு பெயர் அச்சிடப்பட்ட ORS-ஐ மட்டுமே விற்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ORSL கரைசலை மருந்தகம், கடைகளில் இருந்து பறிமுதல் செய்ய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.