India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பிரபல நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் சிரிஸ் வால்சங்கர், துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூரை சேர்ந்த அவர், இந்தியா முழுமைக்கும் பிரபலமானவர். வீட்டில் இருந்தபோது திடீரென கைத்துப்பாக்கியை எடுத்து தலையில் சுட்டுத் தற்காெலை செய்து கொண்டார். இதற்கான காரணம் தெரியாத நிலையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று (ஏப்ரல் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
இன்று (ஏப்ரல் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க!
பள்ளி வளாகங்களில் மாணவர்களின் ஜாதியை வெளிப்படுத்தும் வகையிலான சின்னங்களை பயன்படுத்த அரசு தடை விதித்துள்ளது. அனைத்து மாவட்ட தலைமைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஜாதி அடையாளங்களை வைத்து மாணவர்கள் அடிக்கடி மோதுவதாகவும், ஆதலால் ஜாதிய பாடல்களை ஒளிபரப்பவோ, ஜாதியைக் குறிக்கும் வகையிலான ஆடைகளை அணியவோ அனுமதிக்கக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
➤மேஷம் – தாமதம் ➤ரிஷபம் – உதவி ➤மிதுனம் – மறதி ➤கடகம் – நஷ்டம் ➤சிம்மம் – பெருமை ➤கன்னி – முயற்சி➤துலாம் – ஆதாயம் ➤விருச்சிகம் – நன்மை ➤தனுசு – பயம் ➤மகரம் – பரிசு ➤கும்பம் – சினம் ➤மீனம் – பாராட்டு.
நைஜீரியாவில் 56 விவசாயிகள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெனியூ மாகாணத்தில் கால்நடை மேய்ப்பர்கள், விவசாயிகள் இடையே கடந்த சில நாள்களாக அடுத்தடுத்து மோதல்கள் நடந்த வண்ணம் உள்ளன. கிறிஸ்தவ மதத்தினர் விவசாய தொழிலிலும், கால்நடை மேய்க்கும் தொழிலில் இஸ்லாமியர்களும் ஈடுபட்டுள்ளனர். இருதரப்பினர் இடையே நடந்த மோதலில் 56 விவசாயிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய சென்னை அணி 176 ரன்கள் எடுத்தது. ஜடேஜா(53), ஷிவம் துபே (50) அரைசதம் அடித்தனர். தொடந்து ஆடிய மும்பை அணி தொடக்கம் முதலே அதிரடி காட்டியது. அரைசதம் அடித்த ரோஹித்(76) மற்றும் சூர்யகுமார் யாதவ்(68) அணியின் வெற்றியை உறுதி செய்தனர். சென்னை அணி 6-வது தோல்வியை சந்தித்ததால் ஃப்ளேஆஃப் செல்வதில் சிக்கல் எழுந்துள்ளது.
நடப்பு சீசனில் தொடர்ந்து தடுமாறி வந்த ரோஹித்
சர்மா சென்னைக்கு எதிரான ஆட்டத்தில் அரைசதம் அடித்தார். மும்பைக்கு 5 கோப்பைகளை கேப்டனாக பெற்று தந்த ரோஹித் பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பிவந்தார். இதனால் தொடர்ந்து விமர்சனங்களை எதிர்கொண்டு வந்த அவர் இன்றைய போட்டியில் பேட்டால் பதில் அளித்துள்ளார். ரோஹித் 31 பந்துகளை அரைசதம் அடிக்க, மும்பை அணி 13 ஓவர்களில் 127 ரன்கள் சேர்த்துள்ளது.
பெனின் நாட்டில் அல்கொய்தா தீவிரவாதிகள் நடத்தியத் தாக்குதலில் 70 வீரர்கள் பலியாகினர். ராணுவச் சாவடிகளில் அண்மைகாலமாக அல்கொய்தா, ஐஎஸ் தீவிரவாதிகள் அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு மாகாணத் தலைநகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் 70 வீரர்களை கொன்று விட்டதாக அல்கொய்தா அமைப்பு தெரிவித்துள்ளது. ராணுவம் தரப்பில் பதில் இல்லை.
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நடிகர் காதல் சுகுமார் மீது துணை நடிகை ஒருவர் மோசடி புகார் அளித்திருந்தார். திருமணம் செய்து கொள்வதாக கூறி பணம், நகைகளை பெற்று ஏமாற்றி விட்டதாகவும் கூறியிருந்தார். புகாரை விசாரித்த மாம்பலம் மகளிர் போலீசார் 3 பிரிவுகளில் சுகுமார் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில் காதல் சுகுமாரன் தலை மறைவாக, போலீசார் அவரை தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.