India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்தித்த சபாநாயகர் அப்பாவு, ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். நடப்பாண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டம் வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது. ஆண்டின் முதல், பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்குவது மரபாக உள்ளது. கடந்தாண்டு அரசு வழங்கிய உரையை முழுவதும் வாசிக்காமல் கடைசி பக்கத்தை மட்டும் வாசித்தது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் ‘புஷ்பா 2’ திரைப்படம் இதுவரை ₹1,799 கோடி வசூலித்துள்ளதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன், ரஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம், 28 நாள்களைக் கடந்து தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டுள்ளது. பெரிய படங்கள் ரிலீஸாக இன்னும் 10 நாள்கள் இருப்பதால் வசூல் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மதுரையில் தடையை மீறி பேரணி சென்ற குஷ்பு உள்ளிட்ட பாஜகவினரை போலீசார் கைது செய்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இதில் குஷ்புவும் கலந்து கொண்டார். ஆனால், இதற்கு அனுமதி இல்லை என்று கூறி பேரணி நடத்திய அனைவரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வேலூரில் தனக்குச் சொந்தமான இடங்களில் ED அதிகாரிகள் சோதனை நடந்தி வரும் நிலையில், அமைச்சர் துரைமுருகன் CM ஸ்டாலினை சந்தித்துப் பேசினார். துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்துடன் காட்பாடியில் உள்ள வீட்டில் ஒன்றாக வசித்து வரும் நிலையில், 2019 தேர்தலின் போது, பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ₹11 கோடி சிக்கிய வழக்கில் சோதனை நடந்து வருகிறது.வந்திருப்பது யார் எனத் தெரியவில்லை என்று துரைமுருகன் கூறியிருந்தார்.
சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு ‘1965’ எனத் தலைப்பு வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் உருவாகவிருந்த இப்படத்திற்கு, ‘புறநானூறு’ எனப் பெயரிடப்பட்டது. ஆனால், இப்படத்தில் இருந்து சூர்யா விலகிய நிலையில், அந்த கேரக்டரில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்புக்கொண்டார். இப்படம், தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை கதைக்களமாக கொண்டிருக்கும்.
அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை கண்டுள்ளது. அதிகபட்சமாக நேற்றிரவு அதன் மதிப்பு 86 ரூபாய்க்கு கீழ் சரிந்து 86.09 என்று வர்த்தகம் ஆனது. ரூபாயின் தொடர் வீழ்ச்சியால் அதனை சீர் செய்யும் பணிகளை RBI முடுக்கிவிட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு 71ஆக இருந்த ரூபாயின் மதிப்பு 5 ஆண்டுகளில் ₹15 சரிந்துள்ளது.
5வது டெஸ்டில் ஓய்வு பெற்றுள்ள ரோஹித் ஷர்மாவை டெஸ்ட்டில் பார்ப்பது இதுவே கடைசியாக முறையாக கூட இருக்கலாம் என முன்னாள் வீரர்கள் சுனில் கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் கூறுகின்றனர். இந்திய அணி WTC பைனலுக்கு தேர்வாகவில்லை என்றால், இது தான் கடைசி டெஸ்ட் தொடராக இருக்கும் என்கிறார்கள். கேப்டானாகவும், பேட்ஸ்மேனாகவும் கடுமையான விமர்சனத்திற்கு ரோஹித் உள்ளாகியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலூரில் உள்ள வீட்டில் ED சோதனை நடைபெற்று வரும் நிலையில், சென்னை கோட்டூர்புரத்தில் அமைச்சர் துரைமுருகன் வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது திமுக நிர்வாகி பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் ரூ.11 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக, வேலூர் காந்தி நகரில் கதிர் ஆனந்துடன் வசிக்கும் அவரது வீடு, காட்பாடியில் உள்ள கல்லூரியில் ED சோதனையானது நடைபெற்று வருகிறது.
இன்னும் 10 நாள்களில் பொங்கல் பண்டிகை வர இருக்கிறது. இதற்கான அரசு விடுமுறை செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாள்களில் வர இருப்பதால் அலுவலகம் செல்வோர் மற்றொரு நாள் விடுமுறை எதிர்பார்க்கின்றனர். அதாவது, திங்கட்கிழமை (ஜன 13) அல்லது வெள்ளிகிழமை (ஜன 17) சுய விடுப்பு எடுத்துக் கொண்டால் சனி, ஞாயிறுடன் சேர்த்து 6 நாள்கள் விடுமுறை கிடைக்கும். ஜாலிதானே!
விஷால் பாடிய “மை டியர் லவ்வரு” பாட்டு எத்தனை பேருக்கு ஞாபகம் இருக்கு. இந்த பாட்டு வந்த போது ஸ்கூல் படித்து கொண்டிருந்த பலரும் தற்போது வேலைக்கே வந்துவிட்டார்கள். 2012ம் ஆண்டு எடுக்கப்பட்ட படம் நீண்ட காலமாக வெளிவராமல் முடங்கி கிடந்தது. இந்நிலையில், சுந்தர்.சி இயக்கிய ‘மதகஜராஜா’ படம் வரும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 12ம் வெளியாவதாக சந்தானம் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். எத்தனை பேர் வெயிட்டிங்?
Sorry, no posts matched your criteria.