India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அண்ணா பல்கலை.யில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து, அனைத்து பல்கலை.கள், கல்லூரிகளுக்கு உயர்க்கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியிருந்தது. அதில் வெளிநபர்களை உள்ளே அனுமதிக்கக் கூடாதென்றும், அவ்வாறு வருவோரின் கைவிரல் ரேகையை கட்டாயமாக பயோமெட்ரிக் முறையில் பதிய வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, கைவிரல் ரேகை பதிவு தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லியில் குடிசைவாழ் மக்களுக்கான வீடு கட்டும் திட்டத்தை தொடங்கி வைத்த மோடி, மக்கள் மத்தியில் உருக்கமாக பேசினார். இத்தனை வருடங்களாக தனக்கென ஒரு வீடு கூட கட்டிக்கொண்டதில்லை எனக் கூறிய அவர், மக்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பதே தனது கனவு என்றார். மேலும், தான் நினைத்திருந்தால், மற்றவர்களை போல மாட மாளிகை கட்ட முடியும் என்றும், ஆனால் எல்லோருக்கும் வீடு என்பதே தனது கனவு எனவும் குறிப்பிட்டார்.
ATMல் பணம் எடுக்கும் வகையில், EPFO உறுப்பினர்களுக்கு மே- ஜூன் மாதத்திற்குள் டெபிட் கார்டு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேலும், உறுப்பினர்களுக்கு வங்கி சேவைகளை வழங்கும் EPFO 3.0 மொபைல் APP ஜூன் மாதத்திற்குள் அறிமுகப்படுத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதன் மூலம், வருங்கால வைப்பு நிதியில் இருந்து பணம் எடுக்கும் நடைமுறை மிகவும் எளிதாகும்.
ரோஹித் ஷர்மா 5ஆவது டெஸ்ட்டில் விளையாடாதது குறித்து பண்ட் Emotional ஆக பதில் கூறியுள்ளார். ரோஹித் தன்னலம் இல்லாமல் உணர்ச்சிப்பூர்வமாக முடிவு எடுத்ததாகவும், அந்த வகையில் உண்மையான தலைவராக அவரை தாங்கள் பார்ப்பதாகவும் பண்ட் தெரிவித்துள்ளார். மேலும், சில முடிவுகளில் நாம் தலையிட முடியாது எனவும், இதற்கு மேல் இது குறித்து விவரிக்க தேவையில்லை என நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
வறுமை ஒழிப்பில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக TN அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. கடந்த 40 மாதங்களில் புதிதாக 1,666 ரேஷன் கடைகள், ₹100 கோடியில் 230 நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், WDRA கீழ் அதிக எண்ணிக்கையில் சேமிப்புக் கிடங்குகளைப் பதிவு செய்த தமிழக அரசின் TNWC-க்கு, மத்திய அரசு முதல் பரிசு வழங்கி பாராட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
தவெக கட்சியில் மாவட்ட பாெறுப்பாளர்களை ஜனவரி மாத இறுதிக்குள் நியமிக்கும்படி தலைவர் விஜய் கெடு விதித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தவெகவை தொடங்கிய விஜய், கட்சியை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அனைத்து மாவட்டங்களுக்கும் இந்த மாதத்திற்குள் பொறுப்பாளர்களை நியமிக்கும்படி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு விஜய் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மீனாவிடம் ரசிகர்கள் தவறாக நடக்க முயன்றபோது, விஜயகாந்தே காப்பாற்றியதாக தயாரிப்பாளர் சிவா தெரிவித்துள்ளார். மலேசியாவில் முன்பு நட்சத்திர கலைவிழாவை விஜயகாந்த் நடத்தியதாகவும், அப்போது மீனாவை 1000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். விஜயகாந்த், அதிரடியாக ரசிகரின் மண்டையில் அடித்து, மீனாவை காப்பாற்றி அழைத்து சென்றதாகவும் சிவா நினைவு கூர்ந்துள்ளார்.
விக்கிரவாண்டியில் தனியார் பள்ளி கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து 4 வயது சிறுமி பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தனியார் பள்ளி வளாகத்தில் சிறுமி லியா லட்சுமி விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது கழிவுநீர் தொட்டியின் இரும்பு மூடி மீது ஏறியதாக கூறப்படுகிறது. இதில் மூடி உடைய உள்ளே விழுந்தார். இதில் பலியான சிறுமி உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக ஹாஸ்பிடலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கியில் (SBI) 14,191 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 13,735 பணியிடங்கள் ரெகுலர் பணியிடங்கள் ஆகும். இதற்கு கல்வித் தகுதியாக பட்டப்படிப்பும், குறைந்தபட்ச வயதாக 20 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேலைக்கான விண்ணப்பப்பதிவு <
டெலிவரி ஆப்பான Blinkit, ஆம்புலன்ஸ் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 நிமிடத்தில் வீட்டுக்கு வருகிற இந்த ஆம்புலன்ஸ் சேவை ஹரியானா- குருகிராமில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் முதன்மை நகரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். இந்த சேவையில் இலாப நோக்கமில்லை என Blinkit CEO அல்பிந்தர் தெரிவித்துள்ளார். உலகத்திலேயே இது முதல்முறை என zomato நிறுவனர் தீபிந்தர் கோயல் புகழ்ந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.