India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கடந்த டிச.27ல் ஹோட்டன் மாகாணத்தில் 2 புதிய மாவட்டங்களை சீனா அறிவித்தது. ஆனால், இவை லடாக் யூனியன் பிரதேச எல்லைக்குள் வருவதாகவும், இந்திய மண்ணை சீனா ஆக்கிரமிக்க விடமாட்டோம் எனவும் மத்திய வெளியுறவுத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அதேபோல் பிரம்மபுத்ரா நதியின் குறுக்கே சீனாவின் Hydropower திட்டத்தால், இந்தியாவின் எல்லை மாநிலங்கள் பாதிக்கப்படுமா என்பதை உன்னிப்பாக கவனிப்பதாகவும் தெரிவித்துள்ளது.
காதலர் நவநீத் மிஸ்ராவை நடிகை சாக்ஷி அகர்வால் திருமணம் செய்து கொண்டார். கோவாவில் வைத்து 2 பேரின் திருமணம் நடைபெற்றுள்ளது. இதுதொடர்பான புகைப்படங்களை சாக்ஷி அகர்வால், சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். மேலும் அதில், தனது சிறு வயது நண்பரான நவ்நீத்தும், தானும் “என்றென்றும் என்றானோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். ராஜா ராணி, கெஸ்ட் உள்ளிட்ட படங்களில் சாக்ஷி நடித்துள்ளார்.
விஜய் ஹசாரே தொடரில் மிசோரம் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் TN அணி வென்றது. மிசோரம் 21.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 71 ரன்களே எடுத்தது. வருண் சக்கரவர்த்தி 9 ரன் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து களமிறங்கிய TN அணி, 10 ஓவரில் விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டியது. வரும் 5ம் தேதி TN அணி, அடுத்த லீக் ஆட்டத்தில் சத்தீஸ்கரை எதிர்கொள்ள உள்ளது.
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து மதுரையில் குஷ்பு தலைமையில் பாஜக மகளிரணி பேரணி நடைபெற்றது. போலீஸ் தடையை மீறி இந்தப் பேரணியை நடத்தியதால் குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிரணி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், 3 மணிநேரத்திற்கு பிறகு குஷ்பு உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். அப்போது நிருபர்களிடம் பேசிய குஷ்பு, தங்களை ஆடுகள் வைக்கும் இடத்தில் அடைத்திருந்ததாக குற்றஞ்சாட்டினார்.
கடந்த 2023 USA பயணத்தின் போது, பிரதமர் மோடி அந்நாட்டு அதிபர் ஜோ பைடனின் மனைவிக்கு ₹17.15 லட்சம் மதிப்புள்ள சிந்தடிக் வைரத்தை பரிசளித்தார். ஆனால், அந்த பரிசை ஜில் பைடன் இனி பயன்படுத்த முடியாது. வரும் 20ஆம் தேதி டிரம்ப் அதிபராக பதவியேற்க உள்ள நிலையில், வைரத்தை தேசிய காப்பகத்தில் ஜில் பைடன் ஒப்படைத்தார். அந்நாட்டு விதிகளின் படி, காஸ்ட்லி பரிசுகளை பதவிக்காலம் முடிந்ததும் அரசிடம் ஒப்படைக்க வேண்டும்.
ஆண்களுக்கு பெண்கள் எந்த வகையிலும் குறைந்தவர்கள் இல்லை என அனைத்துத் துறைகளிலும் பெண்கள் வந்து விட்டனர். உணவு டெலிவரியிலும் தற்போது அவர்கள் கால் பதித்துள்ளனர். இதை கருத்தில் காெண்ட உணவு ஆர்டர் நிறுவனமான SWIGGY, 2030ஆம் ஆண்டுக்குள் 1,00,000 டெலிவரி உமேன்களை பணிக்கு தேர்வு செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இதனால் ஆண்டுதோறும் தலா 20,000 பேர் என அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்வு செய்யவுள்ளது.
ஏகலைவனை போல, இளைஞர்களின் கட்டை விரலை BJP அரசு துண்டிப்பதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். அரசு வேலைகள் அறிவிக்கப்படுவதில்லை, அறிவிக்கப்பட்டாலும் தேர்வுகள் நடப்பதில்லை, நடந்தாலும் தேர்வுக்கு முன்பே வினாத்தாள் கசிவு உள்ளிட்ட முறைகேடுகள் நடப்பதாகவும் அவர் சாடியுள்ளார். UP, MP, பீகாரில் இளைஞர்களின் போராட்டத்தை சுட்டிக்காட்டி, எந்த விலை கொடுத்தாவது பாஜகவின் அடக்குமுறையை எதிர்ப்போம் என்றார்.
புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் காட்சியை பார்க்க வந்த அல்லு அர்ஜுனால் ஹைதராபாத்தில் உள்ள திரையரங்கில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். இதனால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண் ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து, அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு, பின்னர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில், அவரை ரூ.1 லட்சம் பிணைத்தொகை வழங்க உத்தரவிட்ட ஹைதராபாத் நீதிமன்றம், அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.
பாலாவின் ‘வணங்கான்’ படம், வரும் 10ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இந்நிலையில், யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த பாலாவிடம், “நான் கடவுள் படத்திற்கு தேசிய விருது கிடைத்ததற்காக கடவுளுக்கு நன்றி சொன்னீர்களா? என நெறியாளர் கேட்டார். அதற்கு, “படத்தில் கடவுளா வந்து நடித்தார்? கடவுளா வந்து மேக்கப் போட்டார்? கஷ்டப்பட்டவர்கள் நடிகர்களும், டீமும்தான். இல்லாத ஒருவருக்கு ஏன் நன்றி சொல்ல வேண்டும்” என பதிலளித்தார்.
ஜனநாயக முறையில் போராடும் பாஜகவினரை தமிழக ஆட்சியாளர்கள் கைது செய்வதாக பாஜக மூத்த தலைவர் ராஜீவ் சந்திரசேகர் குறை கூறியுள்ளார். சென்னையில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை அதிர்ச்சி அளிப்பதாகவும், தமிழகத்தில் குற்றப்பின்னணி உள்ளவர்கள் பாதுகாக்கப்படுவதாகவும் விமர்சித்துள்ளார். கைது நடவடிக்கைக்கு பாஜக ஒருபோதும் அஞ்சாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.