India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பள்ளியில் படிக்கும் போதிருந்தே தனது கணவர் ஆண்டனி தட்டிலை காதலித்து வந்ததாக நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார். தன்னை விட 7 வயது மூத்தவரான ஆண்டனி, கத்தாரில் இருந்தபோது கூட காதல் குறையவில்லை எனவும், தங்களது 12 ஆண்டுகள் காதலுக்கு, தனது அப்பா உடனே சம்மதம் தெரிவித்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், காதலித்த நபரையே திருமணம் செய்து கனவை நனவாக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி <<15055253>>தனியார் பள்ளி <<>>கழிவுநீர் தொட்டிக்குள் தவறி விழுந்து பலியான சிறுமியின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கழிவுநீர் தொட்டிக்குள் விழுந்து சிறுமி பலியான செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்ததாக ஸ்டாலின் கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர், உறவினர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட விடாமுயற்சி படம், ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. விடாமுயற்சிக்காக, குட் பேட் அக்லி முன்பே தள்ளிப் போனது. 2 ஆண்டுகளாக படம் எதுவும் வராததால் அஜித் ரசிகர்கள் விரக்தியில் உள்ளனர். விடாமுயற்சி ஜனவரி இறுதியில் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது. குட் பேட் அக்லி ஏப்ரல் மாதம் 10-ம் தேதி வெளியாகக்கூடும்.
நாடு முழுவதும் நக்சல்களை வேட்டையாடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில், சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்த் மாவட்டத்தில் நக்சல் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், போலீசார், சிஆர்பிஎஃப் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அங்கு சென்ற போது, அவர்கள் மீது நக்சல்கள் தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 3 நக்சல்கள் கொல்லப்பட்டனர்.
பிராண்ட் நிறுவனங்களின் விளம்பர தூதர்களாக இருப்பதற்கே பல பிரபலங்கள் கோடிகளில் வருமானம் ஈட்டுகின்றனர். இதில் கிரிக்கெட் வீரர்கள், நடிகர்களை தாண்டி, மற்ற துறை பிரபலங்கள் முன்னணி வகிக்கின்றனர். அந்த வகையில், ஃபுட் பால் வீரர் டேவிட் பெக்கம், கடந்த 2024ல் மட்டும் ₹308 கோடி வருமானம் ஈட்டியுள்ளார். இவரது பெயரை யூஸ் பண்ணுவதால் கம்பெனிகள் வருமானம் ஈட்டுவதோடு, அவருக்கும் நல்ல தொகை கிடைக்கிறது.
கேங்ஸ்டர் சோட்டா ராஜன் கும்பலைச் சேர்ந்த விலாஸ் பவார், 32 ஆண்டுகளுக்குப் பின் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். 1980களில் மும்பை, கோவண்டி பகுதிகள் பவாரின் கோட்டையாக இருந்தது. சோட்டா ராஜன் கொடுக்கும் அசைன்மெண்ட்களை கச்சிதமாக முடித்து கொடுப்பவராக அவர் இருந்தார். பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த பவார், இத்தனை ஆண்டுகளாக டிமிக்கி கொடுத்தது எப்படி என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த டிச.31ஆம் தேதி 1 லட்சம் ஆணுறைகள் ஆர்டர் செய்யப்பட்டதாக BLINKIT தளம் தெரிவித்திருந்தது. அதற்கு ‘இந்த காலத்தில் கன்னிப்பெண்களை பார்ப்பது அரிது’ என நெட்டிசன் ஒருவர் கமெண்ட் செய்திருந்தார். அப்படியானால், திருமணத்திற்கு முன் எந்த பெண்ணிடமும் உறவு வைத்துக் கொள்ளாதீர்கள், இதையே உங்களது நண்பர்களிடமும், சகோதரர்களிடமும் கூறுங்கள் என சின்மயி காட்டமாக பதிவிட்டுள்ளார்.
‘விடாமுயற்சி’ ரிலீஸ் திடீரென தள்ளிப் போனதாலும், 2 ஆண்டுகளாக அஜித் படம் வெளியாகாததாலும் அவரது ரசிகர்கள் அதிருப்தியில் இருக்கின்றனர். அவர்களை சமாதானப்படுத்த விரைவில் ‘விடாமுயற்சி’ டிரெய்லரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2.24 நிமிடங்கள் கொண்ட டிரெய்லருக்கு சென்சார் சான்றிதழையும் வாங்கிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் இன்று தாெடங்கியுள்ளது. இதையடுத்து வரும் 9ஆம் தேதி முதல் ரேஷன் கடைகளில் அந்தத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தோகை வெட்டாமல் கரும்பை முழுதாக வழங்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளார். மேலும், பச்சரிசி, சர்க்கரை தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் பிரபலமானவர் சுப உதயகுமார். அவர் பச்சைத் தமிழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வந்தார். தற்போது தனது கட்சி இயக்கமாக மாறி, சுற்றுச்சூழலுக்காக போராடும், தவாக-வுடன் இணைந்து செயல்படும் என்று அறிவித்துள்ளார். கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் சுப உதயகுமார் மீது வழக்குகள் பதியப்பட்டன. எனினும் போராட்டத்தை தொடர்ந்தார்.
Sorry, no posts matched your criteria.