India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனக்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி தவறானது என நடிகர் <<15384258>>சோனு சூட்<<>> விளக்கமளித்துள்ளார். சம்பந்தமில்லாத விஷயத்தில் சாட்சி சொல்ல நீதிமன்றம் தன்னை அழைத்துள்ளதாகவும், இந்த வழக்கில் தான் எதற்கும் பிராண்ட் அம்பாசிடர் இல்லை எனவும் கூறியுள்ளார். மேலும், தனது பெயரை சிலர் விளம்பரத்துக்காக பயன்படுத்துவதாகவும், இது தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டு வருவதற்கு கண்டனம் தெரிவித்து, நாடாளுமன்ற வளாகத்தில் திமுக எம்.பிக்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். முன்னதாக, மீனவர் பிரச்னை பற்றி நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்த வலியுறுத்தி கனிமொழி நோட்டீஸ் அளித்திருந்தார். தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதற்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மாநில அரசின் மசோதாக்களுக்கு ஒப்புதல் தருவதில் ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. ஆளுநருக்கு எதிரான வழக்கை 3வது நாளாக விசாரித்து வரும் நீதிமன்றம், மசோதாக்கள் மீது ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்தால் அதற்கான காரணம் மாநில அரசுக்கு எப்படி தெரியும் என்று கேள்வி எழுப்பியது. அத்துடன், மசோதாவை நிறுத்தி வைப்பது குறித்து அரசியல் சாசனம் எதுவும் கூறவில்லை என்றது.
HDFC வங்கியில் 500 காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். RELATIONSHIP மேனேஜர் பதவிகளுக்கு 1-10 வருட அனுபவமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். டிகிரி முடித்து 21 – 35 வயதிற்குள் இருத்தல் வேண்டும். தேர்வானவர்களுக்கு தகுதியின் அடிப்படையில் வருடத்திற்கு ₹3 லட்சம் – ₹12 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படும். முழு விவரம் அறிய <
சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் இந்திய அணியின் ODI கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் விலகுவார் எனப்படுகிறது. அடுத்த கேப்டன் யார் என்ற கேள்வி எழும் நிலையில், அந்த இடத்தில் ஹர்திக் பாண்ட்யா பெயரே அதிகமாக அடிப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கே ஹர்திக்கை துணை கேப்டனாக்க கம்பீர் விரும்பியதாக தகவல் வெளியாகியுள்ளது. ரோஹித்திற்கு பிறகு, ODI கேப்டனாக ஹர்திக் ஜொலிப்பாரா?
மருத்துவத் துறை நாம் கனவில் கூட நினைக்காத அரிய சாதனைகளை செய்து அசத்தி வருகிறது. அதற்கு ஓர் உதாரணம்தான் இந்த சம்பவம். சோமாலியாவை சேர்ந்த 19 வயது இளைஞரின் முழங்கையிலிருந்து ஆணுறுப்பை உருவாக்கி, அவருக்கு பொருத்தி மறுவாழ்வு கொடுத்துள்ளது ஹைதராபாத் தனியார் ஹாஸ்பிட்டல். தனது 4 வயதிலிருந்து சிறுநீர் கூட கழிக்க முடியாமல் கஷ்டத்திலிருந்த இளைஞருக்கு இனி குழந்தை பிறப்புக்குக் கூட சிக்கல் இல்லையாம்.
நெல்லையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார் CM ஸ்டாலின். தொடர்ந்து, எந்த ஆட்சியாக இருந்தாலும் மிக முக்கியமான நகரமாக இருந்த ஊர் நெல்லை என்றார். தமிழரின் வரலாற்று பெருமைக்கு நெல்லை மண்தான் அடையாளம் என்று கூறிய அவர், நெல்லையில் ஈரடுக்கு பாலம் கட்டியது திமுக ஆட்சியில் தான் எனவும் நினைவுகூர்ந்தார். நெல்லை மழை பாதிப்புக்காக மத்திய அரசிடம் நிவாரணம் கேட்டும் கிடைக்கவில்லை என்றார்.
தைப்பூச தினத்தன்று பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என்று TN அரசு அறிவித்துள்ளது. சில மங்களகரமான நாட்களில் பொதுமக்கள் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்கள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. அதன் அடிப்படையில் வருகின்ற 11ம் தேதி தைப்பூசம் நாளில் ஆவண பதிவுகள் மேற்கொள்ள ஏதுவாக அனைத்து பத்திரப்பதிவு அலுவலங்களும் வழக்கம்போல் செயல்படும். எனினும், பத்திரப்பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பாக சாலையில் நடந்து செல்ல முடியவில்லை என EPS வேதனை தெரிவித்துள்ளார். ரயிலில், கர்ப்பிணி பெண்ணுக்கு இருவர் பாலியல் தொல்லை அளித்ததோடு, அந்த பெண் கூச்சலிட முயற்சி செய்ததால் ரயிலில் இருந்து தள்ளிவிட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக கூறியுள்ளார். பெண்களின் பாதுகாப்பில் அரசு கடுகளவு கூட கவனம் செலுத்தாததன் நீட்சியே இத்தகைய கொடுமைகள் தொடர்வதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
வங்கிகளின் குறுகியகால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25% குறைத்து இந்திய ரிசர்வ் வங்கி (RBI) அறிவித்துள்ளது. ரெப்போ வட்டி விகிதம் 6.50 சதவீதத்திலிருந்து 6.25% ஆக குறைக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளதால் வீடு, வாகன கடன்களுக்கான வட்டி விகிதம் கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. நீங்க லோன் வாங்கி இருக்கீங்களா?
Sorry, no posts matched your criteria.