India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இன்று (ஜன.4) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
கேரளாவில் இளைஞர் காங்.நிர்வாகிகள் 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் 10 பேருக்கு, எர்ணாகுளம் சிபிஐ நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்துள்ளது. முன்னாள் CPM எம்எல்ஏ உள்ளிட்ட 4 CPM நிர்வாகிகளுக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், மொத்தம் ரூ. 21.40 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. இரட்டை கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி கேரள உயர்நீதிமன்றம் செப்.2019இல் உத்தரவிட்டிருந்தது.
மாலத்தீவு அதிபர் முய்சு ஆட்சியை கவிழ்க்க இந்தியா சதி செய்ததாக அமெரிக்க ஊடகம் வைத்த குற்றச்சாட்டை இந்தியா நிராகரித்துள்ளது. அந்த குறிப்பிட்ட ஊடகமும், நிருபரும் இந்தியாவிற்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக தெரிவதாகவும், அவர்களின் செயல்பாடுகளில் இருக்கும் பேட்டர்னை வைத்து, இதை நம்பலாமா, வேண்டாமா என்பதை நீங்கள் முடிவு செய்து கொள்ளுங்கள் என்றும் மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தமிழக அரசு அறிவிக்கப்படாத அவசர நிலையை பிரகடனப்படுத்தி விட்டதா என CPM மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் சாடியுள்ளார். தமிழகத்தில் போராட்டம், ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எதிராக திமுக அரசு செயல்பட்டால், தாங்கள் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார். திமுக கூட்டணிக்குள் எழுந்துள்ள இந்த விமர்சனம் TN அரசியலில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
நீர்நிலைகளை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தனிநபர்கள், அறக்கட்டளைகள் நீர்நிலைக் காப்பாளர் விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என TN அரசு அறிவித்துள்ளது. https://awards.tn.gov.in மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். வரும் 17ஆம் தேதிக்குள் விண்ணப்பிப்பது அவசியம். மேலதிக தகவல்களுக்கு http://www.environment.tn.gov.in, https:/tnclimatechangemission.in ஆகிய தளங்களை பார்வையிடவும்.
தூங்கும் போது கனவுகள் வருவது இயல்புதான். ஆனால், நீங்கள் மோசமாக தூங்கும் போது, உங்களது கனவுகள் மீண்டும் நினைவுக்கு வரலாம் என மனநல நிபுணர்கள் கூறுகின்றனர். மோசமாக தூங்கி, ஒரு இரவில் அதிக முறை முழிப்பு வந்தால், உங்களது கனவுகளை நினைவுகூறுகிறீர்கள் என்று அர்த்தம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் எழும்போதும், கனவுகளை மீண்டும் நினைவில் கொள்ள வாய்ப்பு உள்ளது.
Squid Game 2-ம் பாகம் சமீபத்தில் வெளியானது. அதையடுத்து அந்த சிரீஸில் வர்ற ‘Red Light Green Light’ விளையாட்டை தனது பயனர்களுக்கு Google அறிமுகப்படுத்தியுள்ளது. Search Box-ல் Squid Game Red Light Green Light எனத் தேடி இந்த கேம் விளையாடலாம். வெப் சிரீஸில் வர்றது போல, காசெல்லாம் தரப்பட மாட்டாது. ஆனா விளையாடி மகிழலாம். வெளியான ஒரு வாரத்தில் 6.8 கோடி பார்வைகளை கடந்துள்ளது இந்த தொடர்.
முன்னாள் கிரிகெட் கேப்டன் செளரவ் கங்குலியின் மகள் சனா கங்குலி, பெரும் விபத்தில் தப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ள பெகலாவில் சனா கங்குலி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த பஸ், நிலைத்தடுமாறி சனா கார் மீது வேகமாக மோதியது. எனினும், இந்த விபத்தில் சிறு காயங்களுடன் அதிர்ஷடவசமாக அவர் உயிர் தப்பினார். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
➤மேஷம் – வெற்றி
➤ ரிஷபம் – அன்பு
➤மிதுனம் – சாந்தம்
➤கடகம் – நன்மை
➤சிம்மம் – சுகம்
➤கன்னி – உயர்வு
➤துலாம் – நிம்மதி
➤விருச்சிகம் – கவனம்
➤தனுசு – அனுகூலம் ➤மகரம் – பரிசு
➤கும்பம் – முயற்சி ➤மீனம் – சலனம்
இந்திய விமானங்களில் தற்போது இணையதள வசதி இல்லாததால், பயணிகள் சமூகவலைதளங்களை பயன்படுத்துவது போன்றவற்றை செய்ய முடியாது. இதனால் பயணிகள் சிரமத்தை சந்தித்த வேளையில், இந்தியாவில் முதல் முறையாக ஏர் இந்தியா நிறுவனம் உள்நாட்டு விமானங்களிலும் WI-FI அறிமுகம் செய்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் முதல்முறையாக அந்த வசதியை கொண்டு வந்த நிறுவனம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.