news

News January 4, 2025

பரவும் ‘ஸ்க்ரப் டைபஸ்’: இதை செய்யாதீங்க!

image

தமிழகத்தில் <<15060077>>ஸ்க்ரப் டைபஸ்<<>> தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால், விவசாயிகள், புதர் மண்டிய, வனப்பகுதிகளுக்கு அருகே வசிப்போர், கர்ப்பிணியர், பூச்சி கடிக்குள்ளாகும் சூழலில் இருப்போர் கவனமாக இருக்க சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. புதர் மண்டிய இடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. பூச்சிகள் ஏதேனும் கடித்தால், அலட்சியம் காட்டாமல் உடனடியாக சிகிச்சை பெறுவது அவசியம் என்றும் கூறியுள்ளது.

News January 4, 2025

விவசாயிகளுக்கு ஆதார் போல அடையாள எண்!

image

மத்திய அரசு ஆணைப்படி, TNல் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் அடையாள எண் வழங்குவதற்கான பணிகளை, வேளாண் துறை தொடங்க உள்ளது. இதற்காக ‘பார்மர்ஸ் ரிஜிஸ்டரி’ என்ற பெயரில் மொபைல் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்ற அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இந்த எண்ணை வைத்து தான், வரும் காலங்களில் விவசாயத்திற்கு தேவையான உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கும்.

News January 4, 2025

ஜன.4: வரலாற்றில் இன்று

image

▶1493 – கொலம்பஸ் தான் கண்டுபிடித்த புதிய உலகை விட்டுப் புறப்பட்டார்.
▶1643 – விஞ்ஞானி ஐசாக் நியூட்டன் பிறந்தநாள்.
▶1954 – எழுத்தாளர் ஞாநி சங்கரன் பிறந்தநாள்.
▶1984 – நடிகர் ஜீவா பிறந்தநாள்.
▶1974 – இந்திய அறிவியலாளர் ஜி.டி.நாயுடு காலமானார்.

News January 4, 2025

சென்னைக்கு வருகிறது ‘ஏர் டாக்சி’!

image

சென்னையில் ‘ஏர் டாக்சி’ எனப்படும் சிறிய விமானங்களை இயக்கும் திட்டத்தை செயல்படுத்த TN அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நகரத்திற்குள் வான்வழியாக விரைவாக பயணிக்க முடியும். மருந்து உள்ளிட்ட சரக்குகளையும் விரைந்து எடுத்துச் செல்ல முடியும். இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான பாதுகாப்பு அம்சம், வழிகாட்டு நெறிமுறைகளை போயிங் நிறுவனத்துடன் இணைந்து அரசின் டிட்கோ நிறுவனம் தயாரிக்க உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

News January 4, 2025

ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி

image

TN தொடக்கக் கல்வித்துறையில் கற்றல் – கற்பித்தல் திறனை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன்படி, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 30 நாள் சான்றிதழ் படிப்பை பெங்களூருவை சேர்ந்த RIESI நிறுவனம் வழங்க உள்ளது. இதற்கு TN அரசு பள்ளி ஆசிரியர்களில் ஆர்வமுள்ள 50 பேர் தமிழகம் முழுவதிலும் இருந்து தேர்வு செய்யப்பட உள்ளனர். வரும் 16ம் தேதி முதல் பெங்களூருவில் இந்த பயிற்சி வழங்கப்பட உள்ளது.

News January 4, 2025

கிராமங்களில் வறுமை வேகமாக குறைகிறது: SBI

image

இந்தியாவில் ஏழ்மையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 5%க்கும் கீழ் குறைந்துள்ளதாக SBI ஆய்வறிக்கையில் கூறியுள்ளது. நாட்டின் ஏழ்மை நிலவரம் குறித்த புள்ளிவிபர அறிக்கையை 2023ம் ஆண்டுடன் ஒப்பிட்டு SBI வெளியிட்டுள்ளது. அதில், நகர்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் வறுமை வேகமாக குறைந்து வருவதாகவும், கிராமப்புறங்களில் பணம் செலவிடும் பழக்கம் அதிகரித்து இருப்பது வறுமை குறைப்புக்கு வழிவகுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News January 4, 2025

தினம் ஒரு பொன்மொழி!

image

✦எதிரிகளை அழிப்பதற்கான சிறந்த வழி அவர்களை நண்பர்களாக்குவதுதான். ✦ஒரு வாக்குச்சீட்டு தோட்டாவை விட வலிமையானது. ✦எல்லோரையும் நம்புவது பயங்கரமானது; யாரையும் நம்பாமல் இருப்பது அதிபயங்கரமானது. ✦ஏமாற்றுவதைக் காட்டிலும், தோற்றுப்போவது மரியாதைக்குரியது. ✦சட்டப்பூர்வமாக சரியான சில விஷயங்கள், நியாய ரீதியாக பார்த்தால் சரியானவை அல்ல – ஆபிரகாம் லிங்கன்.

News January 4, 2025

எல்லையில் மீண்டும் சீண்டும் சீனா

image

லடாக் எல்லையில், சீனா அறிவித்துள்ள இரண்டு புதிய மாவட்டங்கள் இந்தியாவுக்கு உட்பட்ட பகுதிக்குள் வருவதாக மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் இதுபோன்ற சட்டவிரோத ஊடுருவல்களை, நாம் ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது என்றும் கூறியுள்ளது. லடாக் மற்றும் திபெத் எல்லையில் உள்ள ஹோட்டன் மாகாணத்திற்கு உட்பட்ட பகுதியில் ஹீயான், ஹீகாங் என்ற 2 புதிய மாவட்டங்களை சீனா அறிவித்துள்ளது.

News January 4, 2025

இனி இதற்கு பெற்றோர் அனுமதி தேவை

image

இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் சமூகவலைதள கணக்கை தொடங்குவதற்கு பெற்றோரின் அனுமதி பெற வேண்டும் என மத்திய அரசு வெளியிட்ட டிஜிட்டல் தரவு பாதுகாப்பு வரைவு விதிமுறைகளில் கூறியுள்ளது. கணக்கு துவங்கப்படுவதற்கு முன்னர் இதனை வலைதளங்கள் உறுதி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. முன்னதாக, ஆஸி.,யில் 16 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சமூக வலைதளங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

News January 4, 2025

எதிர்கால திட்டத்தில் ரோஹித் இல்லை: கவாஸ்கர்

image

இந்திய தேர்வுக்குழுவின் எதிர்கால திட்டத்தில் ரோஹித் ஷர்மா இல்லை என கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார். வரும் நாட்களில் அணியில் பெரிய மாற்றங்கள் இருக்கும் என்றும் கணித்துள்ளார். ரோஹித்துக்கு தற்போது 37 வயதாகும் நிலையில், அடுத்த WTC போட்டிக்குள் 41 வயதை அடைந்துவிடுவார். அந்த வயதில் அவர் டெஸ்ட் விளையாடுவது சந்தேகம் என்பதால், அவருக்கு பதிலாக இளம் தலைமையை BCCI தயார் செய்யும் என்றார்.

error: Content is protected !!