India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
BGTயில் இந்திய அணியாக தனியாளாக தூக்கி சுமந்து வரும் பும்ரா மற்றுமொரு சாதனையை படைத்துள்ளார். ஆஸி.யில் நடந்த டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை அவர் படைத்தார். ஆஸி.யின் முதல் இன்னிங்சில் கவாஜாவின் விக்கெட்டை வீழ்த்திய போது 46 ஆண்டுகளுக்கு முன் பிஷன் சிங் பேடி படைத்த சாதனையை முறியடித்தார். இதுவரை அவர், 32 விக்கெட்டுகளை இந்த BGTயில் எடுத்துள்ளார்.
தனது வாழ்வில் குஷ்பு மட்டும் வராமல் இருந்திருந்தால் நடிகை சௌந்தரியாவுக்கு ப்ரோபோஸ் பண்ணியிருப்பேன் என்று இயக்குநர் சுந்தர்.சி பேசியிருக்கிறார். முறை மாமன் படத்தின்போது குஷ்புவும் சுந்தர்.சி-யும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால், அதற்கு முன்பே சௌந்தரியாவின் அமைதியான சுபாவம் மிகவும் பிடிக்கும் என்று சுந்தர்.சி தெரிவித்துள்ளார். பரிதாபமாக அவர் உயிரிழந்துவிட்டார்.
2ம் நாள் உணவு இடைவேளையில் பேசிய ரோஹித், தான் ஓய்வு பெறவில்லை என அழுத்தமாக கூறி, இப்போட்டியில் இருந்து மட்டும் விலகியிருப்பதாக கூறினார். இப்பொது சரியாக விளையாடாமல் இருக்கலாம், ஆனால் அதுவே தொடராது என தெரிவித்தவர், செய்தி எழுதுபவர்கள் என்னுடைய ஓய்வு பற்றி முடிவெடுக்க முடியாது என தெரிவித்து பும்ராவின் கேப்டன்ஷிப் தன்னை கவர்ந்ததாக தெரிவித்தார். ரோஹித் அணியில் தொடரலாமா, நீங்க என்ன சொல்றீங்க?
விஷாலின் ‘மதகஜராஜா’ படத்தின் ரிலீஸ் பொங்கலுக்கு திடீரென அறிவிக்கப்பட்டு பலருக்கும் அடேங்கப்பா என ‘Nostalgic’ உணர்வை கொடுத்து விட்டது. படம் வெளியாகும் என கூறப்பட்டு 12 வருடங்கள் கழித்தே வெளிவர இருக்கிறது. அப்போதே பெரிய வைரலான “மை டியர் லவ்வரு” பாட்ட நீங்க பாடும் போது என்ன பண்ணிட்டு இருந்தீங்க… ஞாபகம் இருக்குறவங்க சொல்லிட்டு போங்க
அண்ணா பல்கலை. மாணவி வன்கொடுமை சம்பவத்தைக் கண்டித்து மதுரையில் தடையை மீறி பேரணி நடத்திய நடிகையும், பாஜக நிர்வாகியுமான <<15058402>>குஷ்பு<<>> உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை மேற்கு கிராம உதவியாளர் ஜலபதி அளித்த புகாரின் பேரில், திலகர் நகர் காவல் நிலையத்தில் பாஜகவினர் 319 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விக்கிரவாண்டி தனியார் பள்ளியில் மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மூன்று பேரை கைது செய்துள்ளனர். நேற்று பள்ளிக்கு சென்ற LKG மாணவி லியோ லட்சுமி (3), திறந்து கிடந்த கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் செயிண்ட் மேரீஸ் பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அலட்சிய மரணம் என்ற பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா தற்போதைய கேப்டன் பும்ராவுக்கு ஆலோசனை வழங்கினார். மோசமான ஆட்டம் காரணமாக ரோஹித் BGT 5ஆவது போட்டியில் இருந்து தானாக விலகியதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் டிரிங்ஸ் இடைவேளையின்போது எந்தவித ஈகோவும் இல்லாமல் ரோஹித் ஆலோசனை வழங்கினார். அதனை பும்ராவும் அடக்கத்துடன் கேட்டுக் கொண்டார். இதனை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
எந்த நேரமும் கையில் போனுடனே வாழ்கிறோம். தூங்கும் போது கூட பக்கத்திலேயே இருக்கிறது. 3வது கையாகவே மாறிவிட்ட இந்த ஆண்ட்ராய்டு போன் இனி யூஸ் பண்ண கூடாது, மீண்டும் பழையபடி சாதாரண மொபைல் தான் அனைவரும் உபயோகிக்கணும் என்ற நிலைமை உருவானால் என்ன செய்வீர்கள்? அது எப்படி நடக்கும் என லாஜிக் கேள்வியெல்லாம் கேட்க கூடாது. ஒரு முறை யோசித்து பாருங்கள். தோன்றுவதை கமெண்ட்டில் பதிவிடவும்….
பும்ரா போன்ற பந்துவீச்சாளர்களை உற்சாகப்படுத்துவது ஆஸி.,க்கு ஆபத்தானது என முன்னாள் வீரர் மார்க் வாக் கூறியுள்ளார். இச்சம்பவத்திலிருந்து கான்ஸ்டாஸ் பாடம் கற்க வேண்டும், கடைசி ஓவரில் பும்ராவை தூண்டிவிட வேண்டிய அவசியம் இல்லை என்றார். அவரால் இந்திய வீரர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்ததாகவும், கான்ஸ்டாஸ் தன் நாக்கைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் எதிர் அணிக்கு இலக்காகிவிடுவார் என்றும் அறிவுறுத்தினார்.
பொங்கல் பரிசு தொகுப்பாக அந்தந்த மாவட்ட விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை தெரிவித்துள்ளது. இதற்கான பணம் நேரடியாக விவசாயிகளுக்கு வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்றும் கூறியுள்ளது. விவசாயிகள் https://rcs.tn.gov.in/rcsweb/sugarcane-form என்ற இணைய முகவரி வாயிலாகவோ, மாவட்ட இணை பதிவாளர்களை தொடர்பு கொண்டோ கரும்பை விற்பனை செய்யலாம் என்றும் அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.