India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
3 நாள்கள் விடுமுறைக்கு பிறகு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. காலை 9:30 மணிக்கு பேரவைக் கூடியதும் கேள்வி நேரம் நடைபெறவுள்ளது. அதன்பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களுக்கு அத்துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார்.
அடுத்த 4 நாள்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் என IMD எச்சரித்துள்ளது. வட தமிழகம் உள்ளிட்ட பகுதிகளில் வழக்கத்தை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படக்கூடும். எனவே, மதியம் 11 மணி முதல் 3 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அதிகளவில் தண்ணீர், மோர், இளநீர் போன்றவற்றை குடிக்க வேண்டும்.
திமுக கூட்டணியில் பாமக இணைய உள்ளதாக வெளியான தகவலுக்கு மறுப்பு தெரிவித்து முதல்வர் ஸ்டாலின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திமுக கூட்டணியில் தற்போதைய நிலையே தொடரும் என்று விளக்கியுள்ளதன் மூலம் புதியவர்களுக்கு இடமில்லை என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அரசியல் நோக்கர்கள் கருத்து கூறி வருகின்றனர். இதனால் பாமக, அதிமுக கூட்டணியில் இணையவே அதிக வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது. உங்கள் கருத்து என்ன?
ஜம்மு – காஷ்மீரின் ரம்பன் மாவட்டத்தில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஜம்மு–ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால், பல கிமீ தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. மழை விடாமல் பெய்து வருவதால் மீட்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை நீடிக்கும் என்பதால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சேப்பாக்கம் மைதானத்தில் CSK, SRH அணிகள் மோதும் போட்டி ஏப். 25-ல் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று தொடங்க உள்ளது. காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணையதளத்தின் மூலம் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். இந்த சீசனில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5-வது போட்டி இதுவாகும். இதிலாவது CSK வெல்லுமா?
பல்கலை.களின் வேந்தராக கவர்னர் ஆர்.என்.ரவியே தொடர்கிறார் என கவர்னர் மாளிகை தெரிவித்துள்ளது. உதகையில் ஏப். 25, 26-ல் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெறும் என்றும், துணை வேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் மட்டும் அரசுக்கு கொடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, கவர்னரை கண்டித்த உச்சநீதிமன்றம், முதல்வரே பல்கலைக்கழக வேந்தராகும் மசோதாவுக்கு ஒப்புதல் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
திமுகவை மட்டுமே நம்பி விசிக இல்லை என திருமாவளவன் கூறிய நிலையில், கூட்டணியில் எந்த பிரச்னையும் இல்லை என CM ஸ்டாலின் தெரிவித்திருந்தார். தற்போது, TN அரசின் காலி பணியிடங்களை நிரப்பவும், மின்வாரிய ஒப்பந்த ஊழியர்கள் தொடர்பான திமுகவின் தேர்தல் வாக்குறுதியை விரைந்து நிறைவேற்றவும் திருமா வலியுறுத்தியுள்ளார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற திமுகவிற்கு அவர் அழுத்தம் கொடுப்பதில் அரசியல் கணக்கு இருக்குமா?
சராசரிக்கும் குறைவான ஸ்கோர் எடுத்ததே MI உடனான தோல்விக்கு காரணம் என CSK கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். லீக் சுற்றில் மீதமுள்ள 6 போட்டிகளிலும் வென்று பிளே ஆஃப்-க்கு முன்னேற முயற்சிப்போம் என தெரிவித்த அவர், ஒருவேளை வெற்றி பெறவில்லை என்றால் அடுத்த சீசனுக்காக அணியை கட்டமைக்கும் பணியை தொடங்குவேன் எனக் குறிப்பிட்டுள்ளார். 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே CSK வென்றுள்ளது.
காசா மீதான தாக்குதலை மீண்டும் தீவிரப்படுத்தி இருக்கும் இஸ்ரேல், போரிடுவதை தவிர வேறு வழியில்லை எனத் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 51,000-க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், ஹமாஸ் முற்றிலுமாக அழிக்கப்பட்டு, பிணைக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படும் வரை போரை முடிவுக்கு வர முடியாது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார். காசா மக்களுக்கு என்றுதான் விடிவுகாலம் வருமோ?
நாசாவின் மூத்த வீரர் டான் பெட்டிட் தனது 70-வது பிறந்த நாளை கொண்டாட விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ளார். ரஷ்யாவின் சோயூஸ் விண்கலம் மூலம் கடந்தாண்டு அக்டோபரில் அவர் விண்வெளிக்குச் சென்றார். சக ரஷ்ய வீரர்களுடன் விண்கலத்தில் பூமி திரும்பிய அவர், கஜகஸ்தான் அருகே கடலில் பத்திரமாக தரையிறங்கினார். விமானம் மூலம் அவரை அமெரிக்கா அழைத்து வர நாசா திட்டமிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.