India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சென்னை அண்ணா யுனிவர்சிட்டிக்கு மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததைத் தொடர்ந்து மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். சுமார் 2 மணிநேர தீவிர சோதனைக்குப் பிறகு, வெடிகுண்டு மிரட்டல் புரளி என்பது தெரியவந்துள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில், அண்மையில் மாணவி ஒருவர் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹360 குறைந்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ₹58,080க்கு விற்பனையான நிலையில் இன்று அதன் விலை ₹57,720ஆக உள்ளது. நேற்று ₹7,260க்கு விற்கப்பட்ட ஒரு கிராம் தங்கம், இன்று ₹45 குறைந்து ₹7,215க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை கிராமுக்கு ₹1 குறைந்து ₹99க்கு விற்கப்படுகிறது.
பிரபல நடிகர் பிரபாஸ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது குறித்து அவரது தாயாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், பிரபாசுக்கு ரவி என்கிற நண்பர் இருப்பதாகவும் அவரது திருமண வாழ்க்கை கசப்பாக முடிந்ததாகவும் கூறியுள்ளார். அந்த தாக்கத்தினாலேயே பிரபாஸ் திருமணத்தின் மீது ஆர்வம் காட்டாமல் இருக்கிறாராம். எல்லோருக்கும் அப்படி நடப்பதில்லையே பிரபாஸ். தைரியமா கட்டிக்கோங்க.
எல்லையில் சீனா, தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது. 2023இல் அருணாச்சல் எல்லைக் கோட்டில் 11 இடங்களுக்குப் பெயர் சூட்டியதோடு, புதிய மேப்பை வெளியிட்டு நம்மைச் சீண்டியது. இந்தச் சூழலில் தான், 1947 முதலே லடாக்கின் வடமேற்கில் உள்ள அக்சாய் சின் நிலப்பகுதி யாருக்கு சொந்தம் என சர்ச்சை நீடித்து வரும் நிலையில், சீனா புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. இதற்கு, இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
நடிகை சீதாவின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார். இதுகுறித்து இன்ஸ்டாகிராமில் சீதா உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். கடந்த வாரம் தாயுடன் எடுத்த போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்த சீதா, “என் சாமி” என்று குறிப்பிட்டிருந்தார். அவர் பதிவிட்ட ஒரு வார காலத்திற்குள் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. செய்தியறிந்து அவருடைய விருகம்பாக்கம் இல்லத்திற்கு திரைத்துறையினர் விரைந்துள்ளனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி வன்கொடுமைக்கு எதிராக போராடுவோரை திமுக அரசு தொடர்ச்சியாக கைது செய்து வருகிறது. கடந்த வாரம் அதிமுக, நாதகவினர் கைதான நிலையில் நேற்று மதுரையில் போராடிய பாஜகவினர் கைது செய்யப்பட்டனர். ஆனால், அதே மதுரையில் நேற்று டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக வைகோ போராடினார். மத்திய அரசுக்கு எதிராக போராடினால் மட்டும் அனுமதி வழங்கும் திமுக அரசு, அவர்களுக்கு எதிரான போராட்டத்தை தடுப்பது ஏன்?
இந்தியாவின் பி.வி.சிந்து 2024ல் மட்டும் சுமார் ₹60 கோடி நிகர மதிப்புடன் உலகிலேயே பணக்கார பேட்மிண்டன் வீராங்கனை என்ற பெருமையை பெற்றுள்ளார். எப்போதும் இந்திய ஒலிம்பிக் தொடருக்கு செல்லும் போது, நாட்டிற்காக நிச்சயமாக பதக்கங்களை கொண்டு வருவார் என எதிர்பார்க்கப்படும் வீரராக இருக்கும் சிந்து இதுவரை 2 ஒலிம்பிக் பதக்கங்கள், 5 BWF உலக சாம்பியன்ஷிப் பட்டங்களை வென்றுள்ளார்.
கடும் பனிப்பொழிவின் காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. இன்று காலை காற்றின் தரக்குறியீடு வெகுவாக குறைந்ததால், அதனை சுவாசிக்கும் மக்களுக்கு ஆஸ்துமா உள்ளிட்ட நுரையீரல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. காற்று தரக்குறியீடு AQI 50க்குள் இருக்க வேண்டிய நிலையில் சென்னையில் தற்போது 182 புள்ளிகள் உள்ளது.
UAEஇல் பணிபுரிய 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI முடித்தவர்கள் <
பொங்கல் நேர கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னையில் இருந்து ஜன 12 & 19 என இரு நாள்களும் நாகர்கோவிலில் இருந்து ஜன 13 & 20 என இரு நாள்களும் இந்த ரயில் இயக்கப்படவுள்ளது. இந்த ரயில் சேலம், மதுரை வழியாக நாகர்கோவில் செல்லும். நாளை (ஜன 5) முதல் முன்பதிவு தொடங்குகிறது.
Sorry, no posts matched your criteria.