India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
Ind Vs Eng இடையிலான 2வது ODI இன்று மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது. கட்டாக்கில் விளையாடப்படும் போட்டியில் கோலி மீண்டும் விளையாடுவார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். இதனால் யார் வெளியேற்றப்படுவார்? வருண் சக்ரவர்த்தி, குல்தீப் இடம் கிடைக்குமா? என பல கேள்விகள். போட்டி, Hotstarல் நேரலை ஒளிபரப்பாகிறது. Way2Newsல் போட்டியின் அடுத்தடுத்த அப்டேட்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்!
குமரியில், பூதலிங்க சுவாமி சிவகாமி அம்மாள் கோயில் தை மாத திருவிழாவை முன்னிட்டு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், நாகையிலும் நீலாயதாட்சி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி நாளை விடுமுறையாகும். அதேவேளையில் +2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு திட்டமிட்டப்படி நடக்கும். ஏற்கனவே பிப்.11 செய்வாய் அன்று தைப்பூசத்திற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
டெல்லி முதல்வர் அதிஷி துணை நிலை ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியடைந்ததை தொடர்ந்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தேர்தலில் பாஜக 48 இடங்களிலும், ஆம் ஆத்மி 22 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அடுத்த முதல்வரை தேர்வு செய்ய பாஜக மூத்த தலைவர்கள் இன்று டெல்லியில் ஆலோசனை நடத்த உள்ளது குறிப்பிடத்தக்கது.
தேசியப் பறவையை தேர்ந்தெடுக்கும் போது, அது நாடு முழுவதும் பரவியதாக, சாமானிய மக்களும் எளிதில் அறியக்கூடியதாக இருக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டது. மயில் நமது கலாசாரம், மரபுகளின் ஒரு பகுதியாகவும், இந்துக்களின் புராணங்களிலும் இடம் பெற்றுள்ளது. இவற்றுடன், வேறு எந்த நாட்டின் தேசியப் பறவையுடனும் ஒற்றுமையும் இல்லை என்ற சிறப்பும் இருப்பதால், மயில் பிப்.1, 1963ல் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது.
விசிக தலைவர் திருமாவளவன் மார்ச் 1ம் தேதி கட்சியை கலைத்துவிட்டு மொத்தமாக திமுகவில் இணைய உள்ளதாகவும், முதல்வர் ஸ்டாலினுக்கு பிறந்தநாள் பரிசாக கட்சியை திமுகவுடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாகவும் செய்தி பரவி வருகிறது. இது முற்றிலும் பொய்யான தகவல். திமுக கூட்டணியில் ஆணிவேர் போல் இருக்கும் திருமாவை களங்கப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இப்படி போலியான செய்தியை சிலர் பரப்புவதாக கூறப்படுகிறது.
சீனாவின் வாங்கூ சுரங்கத்தில் ₹7 லட்சம் கோடி மதிப்பிலான 10 லட்சம் கிலோ தங்க துகள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நவீன தொழில்நுட்ப முறையில் 10,000 அடி வரை சுரங்கம் தோண்டியதில் எதிர்பார்த்ததை விட பெரிய பொக்கிஷம் கிடைத்துள்ளது. இதன் வாயிலாக உலகளாவிய தங்க சுரங்க சந்தையில், ஹுனான் மிக முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. ஏற்கனவே பொருளாதார வளர்ச்சியில் வேகமெடுக்கும் சீனாவுக்கு இது கூடுதல் பலத்தை சேர்த்துள்ளது.
மார்க்கெட், பஸ் போன்ற கூட்டமான இடங்களில் இருந்து போன் செய்தால், எதிர் முனையில் இருப்பவர்களுக்கு நாம் பேசுவது பெரிதாக கேட்காது. இரைச்சல் தான் அதிகமாக இருக்கும். இதனைத் தவிர்க்க, சிம்பிள் டிப்ஸ் இருக்கு. உங்கள் போனில் Settingsல் Sound & Vibrations ஆப்ஷனை கிளிக் செய்யவும். அதில், Clear Voice or Clear Call optionஐ ஆன் செய்யவும். அவ்வளவு தான். Background noise குறைந்து விடும். SHARE IT.
தங்கம் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்றைய நிலவரப்படி சவரன் ரூ.63,560க்கு விற்பனையாகிறது. இதுகுறித்து பொருளாதார நிபுணர்கள் கூறுகையில், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகமாக குவிவதால் விலை மேலும் உயரும் என்கின்றனர். நகைகளுக்கான தேவை அதிகரிப்பு, மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்களில் மாற்றம், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியால் 2025 இறுதிக்குள் சவரன் ₹80,000ஐ தொடும் என்றும் கணித்துள்ளனர்.
கடந்த 6ம் தேதி வெளியான ‘விடாமுயற்சி’ 3ம் நாளில் உலகளவில் ₹105 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த ஆண்டின் முதல் ₹100 கோடி வசூல் செய்த தமிழ் படம் என்கிற சாதனையையும் விடாமுயற்சி படைத்துள்ளது. ஆக்ஷன் மாஸ் ஹீரோவான அஜித்தை மாறுபட்ட கோணத்தில் காட்டிய மகிழ்திருமேனியின் படத்தை நீங்கள் பார்த்து விட்டீர்களா… படம் எப்படி இருக்கு?
ரோஹித் ஃபார்ம் மீது கடுமையான விமர்சனங்கள் இருப்பதால், BGT கடைசி போட்டியிலேயே களமிறங்கவில்லை. இதனால் அடுத்த டெஸ்ட் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. மீண்டும் கோலியை கேப்டனாக்க தனது விருப்பத்தை கம்பீர் தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆனால், இது அதிகாரப்பூர்வ செய்தி இல்லை. BGT முதல் டெஸ்டில் கேப்டனான பும்ரா சிறப்பாக செயல்பட்டாலும், ஏன் இந்த மாற்றம் என தெரியவில்லை?
Sorry, no posts matched your criteria.