India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொங்கலுக்கு மேலும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு விடுமுறையாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. 17ஆம் தேதி அரசு வேலை நாளாக இருந்தது. 18,19 ஆகிய நாள்கள் விடுமுறை என்பதால் 17ஆம் தேதியும் விடுமுறை விட கோரிக்கை எழுந்தது. இதையேற்று 17ஆம் தேதியும் விடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 14-19ஆம் தேதி வரை தொடர் விடுமுறையாகும்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களை விடுவிக்க கோரிய மனுக்கள் மீதான விசாரணையை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் வரும் 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. வழக்கில் சேர்க்கப்பட்டவர்கள் வழக்கறிஞர் வைக்காமல் வழக்கை இழுத்தடிக்க வேண்டாம் என நீதிபதி கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சம்போ செந்தில் மட்டும் தொடர்ந்து தலைமறைவாக உள்ளார்.
1 கிராம் தங்கம் விலை கடந்த டிசம்பர் 31ஆம் தேதி ரூ. 7,110ஆகவும், 1 சவரன் தங்கம் விலை ரூ. 56,880ஆகவும் விற்பனையானது. இதையடுத்து படிப்படியாக தங்கம் விலை அதிகரித்து வந்தது. இன்று 1 கிராம் தங்கம் ரூ.7,215க்கும், 1 சவரன் தங்கம் ரூ.57,720க்கும் விற்பனையாகிறது. அதாவது கடந்த 4 நாள்களில் மட்டும் தங்கம் விலை 1 கிராமுக்கு ரூ.105 அதிகரித்துள்ளது. அதேபோல் சவரனுக்கு ரூ.840 உயர்ந்துள்ளது.
ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா – பிராட் பிட் விவகாரத்து வழக்கு ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்துக்கு பிறகான ஏஞ்சலினாவின் சொத்து மதிப்பு ரூ.686 கோடி அளவுக்கு உயர்ந்துள்ளது. இருவருக்கும் சொந்தமான வைன் யார்டின் 50% பங்கு, வின்ஸ்டன் சர்ச்சில் பெயின்டிங் இவற்றின் மூலமாக ஏஞ்சலினா இந்த ஆதாயத்தை பெற்றுள்ளார். 8 ஆண்டுகளாக விவாகரத்து வழக்கு நடந்தது குறிப்பிடத்தக்கது.
விஞ்ஞானி ராஜகோபால சிதம்பரத்தின் மறைவிற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அணுசக்தி திட்டத்தின் முக்கிய நபர்களில் ராஜகோபால் சிதம்பரமும் ஒருவர். இந்தியாவின் அறிவியல், திறன்களை வலுப்படுத்துவதில் முக்கிய பங்களிப்பை கொடுத்தவர் என்று புகழாரம் தெரிவித்த அவர், ராஜகோபால சிதம்பரத்தின் பங்களிப்பு அடுத்த தலைமுறைக்கு ஊக்கமளிக்கும் என்று இரங்கல் தெரிவித்தார்.
மத்திய அரசிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு, IRS அதிகாரி அருள்ராஜ் விஜய்-க்கு வேலை செய்வதாக சர்ச்சை எழுந்துள்ளது. விஜய்க்கு பின்னால் செயல்படுவது யார் என்பதற்கு இப்போது விடை கிடைத்திருக்கிறது. 2016ல் ’மாற்றம் முன்னேற்றம் அன்புமணி’ என்ற வாசகத்துடன் PMKவிற்கு வேலை செய்த ஜான் ஆரோக்கியசாமியை, தவெகவின் ஆலோசகராகவும் இவர் சேர்த்துவிட்டுள்ளாராம். இந்த இருவரின் கண் அசைவில் தான் ஒட்டுமொத்த தவெகவும் இயங்குகிறதாம்.
அண்ணா யுனிவர்சிட்டி மாணவி வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரனின் வீட்டிலிருந்து லேப்டாப் உள்ளிட்ட ஆவணங்களைச் சிறப்பு விசாரணைக் குழுவினர் பறிமுதல் செய்துள்ளனர். சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள வீட்டில் சிறப்புப் புலனாய்வு குழுவினர் சுமார் 3 மணிநேரம் ஆய்வு நடத்தினர். பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரிஷப் பண்ட் புதிய உலக சாதனையொன்றை படைத்துள்ளார். அதன்படி, ஆஸ்திரேலிய மண்ணில் மிக குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்த வீரர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரராகியுள்ளார். BGT தொடரின் 5ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது இன்னிங்ஸில் 33 பந்துகளில் ரிஷப் பண்ட் 61 ரன்கள் குவித்ததன் மூலம் இந்த உலக சாதனையைப் படைத்துள்ளார்.
அரசுப் பள்ளிகளில் ஆண்டு விழா நடத்த ₹15 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வகையான பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 38 மாவட்ட CEOக்களின் வங்கிக் கணக்கில் இந்த நிதி செலுத்தப்படவுள்ளன. பேச்சுப்போட்டி, கலை உள்ளிட்ட நிகழ்ச்சிகளை நடத்தி மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர ஆசிரியர்களுக்கு TN உத்தரவிடப்பட்டுள்ளது.
சின்ன ஹீரோ, பெரிய ஹீரோ என எதையும் பார்க்காமல், கதை பிடித்திருந்தால் மியூசிக் போடும் ஒரே நபர் யுவன் சங்கர் ராஜாதான் என SK புகழ்ந்துள்ளார். ஒரு நாள் இரவில் காரில் போகும்போது, யுவனின் பாடலைக் கேட்டு ரொம்பவும் எமோஷனல் ஆனதாகவும், உடனே அவருக்கு போன் செய்து உங்களையும், நா.முத்துக்குமார் காம்பினேஷனையும் மிகவும் மிஸ் செய்வதாக கூறியதையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார். யுவன் பாடல் குறித்து உங்க கமெண்ட் என்ன?
Sorry, no posts matched your criteria.