India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேகமாக 7 ஆயிரம் ரன்களை கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை நியூசி. அணியின் கேன் வில்லியம்சன் படைத்துள்ளார். தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக சதமடித்ததன்(133 ரன்கள்) மூலம் இந்த சாதனையை அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னதாக விராட் கோலி 159 போட்டியில் 7 ஆயிரம் ரன்களை எடுத்து இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்த பட்டியலில் முதலிடத்தில் ஹாசிம் அம்லா (151 போட்டி) உள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் கிராமத்திற்குள் நுழைய முயன்ற விசிகவினர் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிபிசிஐடி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த நாளிலிருந்து வேங்கைவயலுக்குள் வெளியாட்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், விசிகவினர் சிலர் இன்று காவல்துறையின் அனுமதியின்றி உள்ளே நுழைய முயன்றதால் தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர்.
மைசூரு இன்போசிஸ் நிறுவனத்தில், 400 பயிற்சி ஊழியர்கள் திடீரென நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பிப்.7-ம் தேதி மாலை 7 மணிக்கு, பெண் ஊழியர்களை உடனே ஹாஸ்டலை விட்டு வெளியேற வேண்டுமென உத்தரவிட்டுள்ளனர். ‘இந்த நேரத்தில் எப்படி போவது, இன்றிரவு மட்டும் தங்கவிடுங்கள்’ என்று பெண்கள் கெஞ்சியும், ‘அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நீங்கள் இப்போது நிறுவன ஊழியர்கள் கிடையாது’ என்று கூறி விரட்டினார்களாம்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே அரசுப் பள்ளியில் மாணவி ஒருவர் மைதானத்திலேயே மயங்கி விழுந்தார். இதனைக் கவனித்த ஆசிரியர்கள் அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லும் வழியில் மாணவி உயிரிழந்தார். மேலும், இரண்டு மாணவிகள் இதேபோல் மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவி உயிரிழந்தது ஏன் என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் துணையை இழந்த நாய் ஒன்று பிரிய மனதில்லாமல் கூடவே அமர்ந்திருக்கும் போட்டோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அந்த நாயின் கண்களில் இருக்கும் ஏக்கமும் வருத்தமும் “எங்களுக்கு எல்லாம் குடும்பம் இருக்கக் கூடாதா?” என்று கேட்பது போல உள்ளது. விலங்குகள் ஐந்தறிவு ஜீவன்கள் என்று நாம் கூறினாலும் அன்பு, காதல் ஆகியவை அனைவருக்கும் ஒன்றே என்பதை இந்த போட்டோ உணர்த்துகிறது.
India’s Got Latent நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபல யூடியூபர் ரன்வீர் அல்லாஹபடியா பேசிய ஆபாச பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ‘வாழ்நாள் முழுவதும் உன் பெற்றோர் உறவு கொள்வதை பார்த்துக் கொண்டிருக்கப் போகிறாயா? அல்லது நீ அதில் ஈடுபட்டு அந்த பழக்கத்தை நிறுத்தப் போகிறாயா?’ என்று கேட்டதுடன், போட்டியாளர்களிடம் ஆபாசமான கேள்விகள் கேட்டுள்ளார். இவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் கோருகின்றனர்.
2026ஆம் ஆண்டு தே.ஜ. கூட்டணி தமிழகத்தில் ஆட்சியமைத்தவுடன் சிறைக்கு செல்லப் போகும் முதல் நபராக அமைச்சர் காந்தி இருப்பர் என்று அண்ணாமலை பேசியுள்ளார். பொங்கல் தொகுப்பில் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் இலவச வேட்டி, சேலை திட்டத்தில் ஆண்டுதோறும் அமைச்சர் காந்தி ஊழல் செய்வதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். அவரை உடனடியாக முதல்வர் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடைபெறும் மகா கும்பமேளாவில் கலந்து கொள்ள வேண்டும் என பல லட்சக்கணக்கான மக்கள் தொடர்ந்து பிரக்யாராஜ் செல்கிறார்கள். இதனால், அந்நகரமே ஸ்தம்பித்துள்ளது. கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல், பிரக்யாராஜ் சங்கம் ரயில் நிலையம் மூடப்பட்டு விட்டது. மேலும், சுமார் 300 கிலோ மீட்டருக்கு உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.
கிரிக்கெட்டில் இந்திய அணி தன் முதல் வெற்றியை பதிவுச் செய்து 73 ஆண்டுகள் ஆகிறது. 1952-ம் ஆண்டில், பிப்.10-ம் தேதி, இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில், இந்தியா ஒரு இன்னிங்ஸ் 8 ரன் வித்தியாசத்தில் வென்றது. இங்கிலாந்து 266 & 183 ரன் எடுக்க, இந்தியா 459/9 எடுத்து டிக்ளேர் செய்தது. பங்கஜ் ராய்(111), பாலி உம்ரிகர்(130) இருவரும் சதமடித்தனர். அப்போது வீரர்களுக்கு வெற்றிப் பரிசாக தலா ரூ.250 வழங்கப்பட்டதாம்.
ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு வருமாறு போக்குவரத்து தொழிற்சங்கங்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது. 15வது ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக வரும் 13ஆம் தேதி காலை 11 மணிக்கு குரோம்பேட்டை பயிற்சி மையத்தில் பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்.10 தேதிக்குள் பேச்சுவார்த்தை நடத்தாவிட்டால் பிப். 26இல் போராட்டம் நடத்தப்படும் என அண்ணா தொழிற்சங்கம் எச்சரித்திருந்தது.
Sorry, no posts matched your criteria.