India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இன்று தைப்பூசத் திருநாளையொட்டி, தவெக தலைவர் விஜய், மக்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார். தனது எக்ஸ் பக்கத்தில், தனித்துயர்ந்த குன்றுகள் தோறும் வீற்றிருக்கும் தமிழ்நிலக் கடவுள்; உலகெங்கும் வாழும் தமிழர்களின் தனிப்பெரும் கடவுள் முருகப் பெருமானைப் போற்றுவோம்! எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனவரி 24ம் தேதி வெளியான மணிகண்டனின் குடும்பஸ்தன் படம் பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்றது. நடுத்தர குடும்பத்தில் நடைபெறும் கதைக்களம் வெகுஜன மக்களை கவர்ந்து இழுத்தது. . தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகளையும் மணிகண்டன் இப்படத்தின் மூலம் பதிவு செய்துள்ளார். பாக்ஸ் ஆபிசில் சுமார் ₹22 கோடி வசூல் செய்த படம், வரும் 28ம் தேதி Zee5 OTT வெளிவர இருக்கிறது.
கணவன்-மனைவி எப்படி இருக்க வேண்டும் என்பதை இறந்த பின்பும் இந்த தம்பதி நிரூபித்து இருக்கிறார்கள். மதுரையில் வீராயி (80) நேற்று முன்தினம் தூக்கத்திலேயே உயிரிழந்தார். ஆசை மனைவியின் பிரிவை தாங்க முடியாமல் துக்கத்தில் இருந்த கணவர் முத்து (85), மனைவியை போலவே நேற்று இரவு தூக்கத்திலேயே இறந்துள்ளார். 67 ஆண்டுகள் கணவன் – மனைவியாக வாழ்ந்த தம்பதி இறப்பிலும் இணைபிரியாது அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்துள்ளனர்.
19ம் தேதி தொடங்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை இந்தியா நிச்சயமாக வெல்லும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இத்தொடர் குறித்து பேசிய முன்னாள் வீரர் அசாருதீன், ‘ரோஹித் சரியான நேரத்தில் ஃபார்மிற்கு வந்துள்ளார். அவர் சிறப்பாக விளையாடினால் இந்தியா CT கோப்பையை வெல்லலாம் என்றார். மேலும், ஓய்வு குறித்து அவர் ரோஹித் தான் முடிவெடுக்க என்றும் தெரிவித்தார். ரோஹித் கோப்பையை வென்று கொடுப்பாரா?
பலருக்கும் முதலீட்டை எப்போது ஆரம்பிக்க வேண்டும் என்பதில் குழப்பம் இருக்கிறது. என்றைக்கு ஒருவர் வேலைக்கு சேர்கிறாரோ, அப்போதே முதலீட்டை ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும். முதலீடு செய்ய வேண்டிய தொகையும் குறைவாக இருக்கும். 25 வயதில் நீங்கள் மாதம் ₹30,000 சம்பளம் வாங்குகிறீர்கள் என்றால், அதில் 10% தொகையான ₹3,000 முதலீடு செய்ய ஆரம்பித்தால், 60 வயதில் ₹1.95 கோடி கிடைக்கும். முழு <
சுகாதாரம், கல்வி மேம்பாட்டை அதிகரிக்கும் நோக்கில் அதானி குழுமம் ₹6,000 கோடி முதலீடு செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மலிவு விலையில் உலகத் தரம் வாய்ந்த சுகாதாரத்தை வழங்க திட்டமிட்டுள்ள அதானி குழுமம், முதற்கட்டமாக மும்பை, அகமதாபாத்தில் 1,000 படுக்கை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை அமைக்க முடிவெடுத்துள்ளது. மேலும், நாடு முழுவதும் அதானி சுகாதார நகரங்களை அமைக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில் நடந்து வரும் மகா கும்பமேளாவில், இதுவரை 7 ஆயிரம் பெண்கள் துறவறம் பூண்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. திரிவேணி சங்கமத்தில் நீராடி சந்நியாச தீட்சை எடுத்துக் கொண்ட இப்பெண்கள், இனி சனாதனத்திற்கு சேவை செய்வதாக உறுதிமொழி எடுத்துள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், துறவறம் பூண்ட பெண்களில் பெரும்பாலானோர் டிகிரி முடித்தவர்கள் ஆவர்.
நாம் பொதுவாகவே யாருடனாவது நம்மை ஒப்பிட்டுக்கொள்வோம். நம் கவலைகளில் பாதி, இந்த ஒப்பிடல் மூலம் தான் வரும். உங்களைவிட ஒருவர் வெற்றிகரமாக இருக்கிறார் என்றால் அவருடைய சூழல், குடும்ப வழிகாட்டல்கள் என அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அதனால் நீங்கள் ஒன்றும் குறைவானவரில்லை. முதல் படியில் இருந்து நீங்கள் முன்னேறி வருவதற்கு மகிழ்ச்சிக் கொள்ளுங்கள். உங்களாலும் முடியும்!
சந்தீப் கிஷன் நடிப்பில் ஜேசன் சஞ்சய் இயக்கும் படத்தின் ஷூட்டிங், சென்னையில் சமீபத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக சந்தீப் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. படப்பிடிப்பைத் தொடங்க அந்நிறுவனம் தொடர்ந்து காலம் தாழ்த்தி வந்த நிலையில், ஒரு வழியாக தற்போது தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
வேங்கை வயல் விவகாரத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கை சர்ச்சையானது. இந்நிலையில் வேங்கை வயல் வழக்கில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினிடம் திருமா கோரிக்கை விடுத்துள்ளார். அதேபோல், சாதிய வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். பட்டியல் சமூகப் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு தொடர்பாக சட்டம் இயற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
Sorry, no posts matched your criteria.